Skip to main content

தூத்துக்குடி; ஜெ. மர்ம மரணம்; அடுத்து கொடநாடு கொலை வழக்கு? -அதிர்ச்சியில் எடப்பாடி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையங்களைத் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும், அதன் தலைவர்களான எடப்பாடி, சசிகலா ஆகியோர் மீதும் அடுத்த ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

அதில் முக்கிய இடம் பெறுவது கொடநாடு வழக்கு, திருச்சி ராமஜெயம் வழக்கு. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் போலீசின் விசாரணைக் கரங்கள் சசிகலாவை நோக்கி நீள்கின்றன. திவாகரின் சம்பந்தி திருச்சியில் உதவி கமிஷனராக இருந்தபோதுதான் ராமஜெயம் கொலையும் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலனை ஜெயலலிதா உத்தரவுப்படி கொலை செய்ததாக சொல்லப்படும் திண்டுக்கல் ரவுடிகள் மற்றும் ரவி என்கிற ரவுடி ஆகியோரை ராமஜெயம் கொலைவழக்கில் இறுதிக்கட்ட விசாரணைக்கு போலீஸ் உட்படுத்தியுள்ளது. சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த இந்த ரவுடிகள், சசிகலாவின் உத்தரவுக்கேற்றவாறு ராமஜெயத்தை கொலை செய்தார்கள் என்பதை உறுதிசெய்ய இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த இருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இந்த விசாரணையை இறுதி செய்ய திருச்சிக்கு வந்த ஷகில் அக்தர், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துவார் என்று சொல்லப்படுகிறது. சாமி, ரவி தரப்பில் "எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ராமஜெயம் கொலை நடந்தபோது நான் திருப்பதியில் இருந்தேன்” என பதில் கூறுகிறார். நக்கீரன்தான் என்னை இந்த கொலை வழக்கில் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகிறது என அலறிய அவரிடம், அவர் இந்தக் கொலையில் எப்படி சம்பந்தப்படுகிறார் என, தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை போலீசார் முன்வைத்துள்ளனர்.

 

ஆக, ராமஜெயம் கொலை வழக்கு 2012ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு அனுமதிக்கப்பட செய்யப்பட்ட பரிகாரக் கொலை என சி.பி.சி.ஐ.டி. விசாரணை நகர்கிறது. இதிலும் ஆறுமுகசாமி அறிக்கை போல சசிகலா வெளியேற்றம், அவர்களுக்குள் நடந்த சண்டை, ராமஜெயம் கொலை நடந்த அன்று சசிகலா மீண்டும் போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்டது போன்ற விவரங்கள் விரிவாக வெளியே வரும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

ராமஜெயம் கொலை வழக்கைப் போலவே கொடநாடு வழக்கிலும் ஜெ.வின் அந்தரங்க விஷயங்கள் சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா எப்பொழுது கொடநாட்டுக்கு வருவார். வெளிப்படையாக எத்தனை முறை வருவார்? யாருக்கும் தெரியாமல் கொடநாட்டுக்கு எத்தனை முறை வந்து செல்வார்? அங்கு அவர் ரிலாக்ஸாக எப்படி இருப்பார்? கொடநாட்டில் இயங்கும் ஒரு மினி மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படும்? கொடநாட்டில் அமர்ந்து ஜெ.வும், சசியும் எப்படி வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பார்கள். கோடி கோடியாகக் கொட்டப்படும் லஞ்சப் பணம் கண்டெய்னர் கண்டெய்னராக எப்படி கொநாட்டுக்கு வரும்? அவை எப்படி பிரித்தளிக்கப்படும்? கொடநாட்டில் ஜெயலலிதா தனது ரகசியங்களை பூட்டி வைத்திருந்த அறைகள் எத்தனை? அங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் என்ன? அங்கிருந்த பணம் எவ்வளவு? அவை கொடநாடு கொள்ளையில் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? என விரிவாக கொடநாடு மேனேஜர் நடராஜன் சாட்சியமளித்திருக்கிறார்.

 

போலீஸ் விசாரணையின் போது விரிவாகப் பேசிய நடராஜன், தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சொத்துகளை சம்பாதித்திருக்கிறார். அவரை வெளியே விட்டால் ஆபத்து என சசிகலா தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். நடராஜன் மட்டுமல்ல, கொடநாட்டில் கார்பென்டர் வேலை செய்த சஜீவன், ஜெ.வின் தனிப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக சாட்சியமளித்திருக்கிறார்.

 

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஜெ.வைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். அனுபவ் ரவி, எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோருக்கும் கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்பு பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.

 

ADMK Leader Edappadi Palanisamy in tragedy

 

இவை அனைத்தையும் சசிகலாவிடம் கேள்விகளாக கொடநாடு விசாரணை டீம் முன்வைத்து அவரிடமும் வாக்குமூலம் வாங்கியிருக்கிறது. இந்த வாக்குமூலங்கள் அனைத்தையும் கோர்ட்டில் பதிவு செய்ததுடன் கொடநாடு விசாரணை டீம், வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட உள்ளது.

 

இந்தப் புதிய எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக எடப்பாடி பழனிசாமி சேர்க்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இப்படி எடப்பாடி, சசிகலா ஆகியோரை மையப்படுத்தி சுழலப்போகும் ராமஜெயம் மற்றும் கொடநாடு வழக்குகளில் பல புதிய கைதுகள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி எங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கிய தனது சம்பந்தியை மீட்கத்தான் பேசினார். எங்களுக்கு தி.மு.க. அரசு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. எங்களைக் காப்பாற்ற எடப்பாடி எதுவும் செய்யவில்லை என கோபத்திலிருக்கும் வேலுமணி, தங்கமணி குரூப் கொடநாடு வழக்கில் எடப்பாடியை வலுவாக சிக்க வைக்க தக்க தருணம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்கிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள்.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.