Skip to main content

50 கோடி, 30 கோடி, 20 கோடி!!! அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020
ddd


""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில் உள்ள தகுதியானவர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய சொல்லுங்கள்'' எனவும் கூறியுள்ளது.


திடீரென பா.ஜ.க. இதில் கவனம் செலுத்த காரணம் என்னவென பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, ""கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. தமிழகத்தில் எப்படி பலமாகவுள்ளது. பல ஆசைகள் காட்டியும் மா.செக்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மட்டுமல்ல அந்த கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், முன்னாள்கள்கூட ஏன் நம் கட்சிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கான காரணங்களை சொல்லுங்கள் என சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் ஆலோசகர்களிடம் கருத்துக்கேட்டது டெல்லியில் உள்ள தலைமை. அதேபோல் மத்திய உளவுத்துறையான ஐ.பியிடமும் கருத்துகேட்டது. இருதரப்பும் ஒரே விஷயத்தை கூறியிருந்தது.

 

அது, தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. என மாறி, மாறி ஆட்சி செய்கின்றனர். ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கட்சியின் தலைமை மட்டுமல்ல, கீழ்மட்ட நிர்வாகிகள் வரை சம்பாதிக்க வைக்கின்றனர். மாநில அரசின் பணி என்றால் வேலை நடக்கும் தொகுதி எம்.எல்.ஏவுக்கும், மத்திய அரசின் பணி என்றால் அந்த தொகுதி எம்.பி.க்கும், ஊரக வளர்ச்சித்துறை பணி என்றால் சேர்மன், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவருக்கு கமிஷன் தரப்படும். அதேபோல் திட்டப் பணியின் வேலையை கட்சியின் ஒப்பந்த தாரர்களுக்கு முன்னுரிமை. கட்சி ஒப்பந்ததாரர் இல்லையென்றால் கட்சி விசுவாசிகளாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும்தான் தருவார்கள்.


அ.தி.மு.க., தி.மு.க. எது ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் உள்ளவர்களுக்கு திட்டப்பணிகளில் 20 முதல் 30 சதவிதம் வரை தந்துவிடுவார்கள், இது எழுதப்படாத விதி. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 50 கோடி, 100 கோடி என பெரிய பெரிய ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ, எம்.பிக்களாக உள்ளார்கள். இப்படி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம்பாதிக்கும் இவர்கள் கட்சி தலைமை வைக்கும் செலவுகளை தாராளமாக செய்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்கு தொடர்பில்லாத பெரிய பெரிய ஒப்பந்ததாரர்களை பினாமிகளாக உருவாக்கி வைத்துள்ளன. அந்த பெரிய ஒப்பந்ததாரர்கள் எல்லா கட்சிக்கும் நண்பர்களாக இருப்பார்கள். என்ன கேட்டாலும் செய்து தருவார்கள் என விலாவாரியாக அதில் இருந்தது. அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள ஒப்பந்ததாரர்கள் யார், யார், பினாமி ஒப்பந்த நிறுவனங்கள் எவை, எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர்களாக இருந்துகொண்டு ஒப்பந்த தாரர்களாக உள்ளவர்கள் யார், யார், அவர்களின் சொத்து மதிப்பு போன்றவற்றை துல்லியமாக பட்டியல் தந்தது.

 

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜீ பார்வைக்கு சென்றது. அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையில், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க தி.மு.க., அ.தி.மு.க. பாலிஸியை நாமும் கையில் எடுப்போம் என முடிவு செய்து கட்சியின் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. பா.ஜ.க.வுக்கு மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் முன்பெல்லாம், அவர்கள் கட்சியில் இணைந்து 3 ஆண்டுகள் கழித்து தான் பதவி தரப்படும். இப்போது அவர்கள் இணையும் முன்பே பதவி முடிவு செய்யப்பட்டு, கட்சியில் இணைந்தவுடனே பதவியை அறிவிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியில் உள்ள நிர்வாகிகளை சம்பாதிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று எங்களால் சம்பாதிக்கும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள் முதல் சின்ன தொழிலதிபர்கள் வரை தேர்தல் வந்தால் எங்களுக்கு நிதி தருகிறார்கள். ஆனாலும், நினைத்த நேரத்தில் கிடைப்பதில்லை. கட்சியினரை சம்பாதிக்க வைத்தால் தேவையான நேரத்தில் கட்சிக்கு செலவு செய்வார்கள். ஒரு ரூபாய் செலவு செய்தால் 10 ரூபாய் சம்பாதிப்பது தானே அரசியல். பா.ஜ.க.வுக்கு போனாலும் சம்பாதிக்க முடியும் என தெரிந்தால் மற்றவர்களையும் கட்சியை நோக்கி அது இழுக்கும். இது கட்சிக்கு பலமாகயிருக்கும். இன்னும் 10 வருடத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலமாக்கி, ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முக்கிய பிரமுகர் ஒருவர், ""பாரதப் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், அந்தியோதயா திட்டம் என 15 திட்டங்கள் மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் நிதியால் செயல்படுகின்றன. அதேபோல் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை போடுவது, நேரு யுவகேந்திரா மூலம் இளைஞர் களுக்கான டெவலப்மெண்ட் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் அந்தந்த தொகுதி எம்.பிக்கள் 10 சதவிதம் கமிஷன் பெற்றுவந்தனர். அவர்கள் கமிஷன் பெறுவது ஒருபுறம். அதே எம்.பி.க்கள் தாங்கள் கைகாட்டும் ஒப்பந்ததாரருக்கே டெண்டரை வழங்க வேண்டும் அல்லது தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தத்தை எடுத்து சம்பாதிக்கின்றனர். இதை அறிந்த எங்கள் கட்சி தலைமை, மாவட்டத்துக்கு 100 கோடி ரூபாய் மத்திய திட்டப் பணிக்காக நிதி வருகிறது என்றால் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு 50 கோடி, பிரதான எதிர்கட்சிக்கு 30 கோடி, பா.ஜ.க.வுக்கு 20 கோடி என பிரித்து வழங்க வேண்டும் எனச் சொல்லிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. போல் எங்களிடம் ஒப்பந்ததாரர் இல்லை. அதனால் கட்சி நிர்வாகிகளை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய சொல்லியுள்ளோம். அவர்கள் பெயரில் ஒப்பந்தம் வாங்கி வெளி ஒப்பந்ததாரர்களுக்கு சப் கான்ட்ராக்டாக தரச்சொல்லியுள்ளது.

 

அதேபோல் அரசு தொடர்பு துறை என எங்கள் கட்சியில் ஒரு அணி உள்ளது. இந்த அணி இங்கு செயல்படாமல் இருந்தது, அந்த அணிக்கு இப்போது நிர்வாகிகளை நியமனம் செய்து, கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார் மாநில தலைவர் முருகன். மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்களுக்கு வாங்கி தருவது, கட்சியினர் கைகாட்டும் மக்களுக்கு அதை பெற்று தருவது போன்ற பணிகளை செய்யச் சொல்லப் பட்டுள்ளது.

 

உதாரணமாக பாரத பிரமரின் வீடு பா.ஜ.க.வினர் சொல்லும் நபருக்கு அதிகாரிகள் தரவில்லையென்றால், அந்த பட்டியலை கட்சியின் மாவட்ட தலைவரிடம் தாருங்கள். அவர் மாநில தலைமையிடம் தந்து சென்னையில் இருந்தே அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம், மீறி முரண்டு பிடிக்கும் அதிகாரியை நாங்கள் கவனிக்கும் விதத்தில் கவனிப்போம் எனச் சொல்லப்பட்டுள்ளது'' என்றார்.

 

கடந்த காலங்களில் மத்திய அரசின் திட்டங்களில் டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர், தொகுதி எம்.பிக்கு 10 சதவிதம், மாநிலத்தில் யார் ஆளும்கட்சியாக உள்ளார்களோ அந்த கட்சியின் மா.செவுக்கு 5 சதவிதம், அதிகாரிகளுக்கு 5 சதவிதம் என பங்கு வழங்கினார். மத்திய அரசு நிதியில் செயல்படும் திட்டத்துக்கு எதுக்கு மாநில ஆளுங்கட்சியான அ.தி.மு.க மா.செவுக்கு 5 சதவிதம் பங்கு வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பிய பா.ஜ.க. ஆலோசகர்கள், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். மத்தியில் நாம் ஆட்சியில் உள்ளோம், நம் கட்சி மாவட்ட தலைவருக்குத்தான் வழங்க வேண்டும், காங்கிரஸ் இப்படி பங்கு வாங்காததால்தான் தமிழகத்தில் அது வளரவேயில்லை என்றார்களாம். எனவே அ.தி.மு.க கமிஷனில் பங்கு வாங்குதவற்கான வேலைகளில் படுதீவிரம் காட்டுகிறது பா.ஜ.க.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.