Skip to main content

ரஜினி எதிர்பார்த்த புரட்சி... சர்வே முடிவில் வெளிவந்த தகவல்... எதிர்பார்க்காத ஆதரவால் உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி! 

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார்.

"கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளைஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக்கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்த இளைஞர் படை தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்பதுதான் முதல் கேள்வி. அதற்குப் பதில் அளித்தவர்களில் பெண்கள் அதிகம் இடம் பெற்றிருந்தார்கள்.

 

rajini



இளைஞர்களும் உற்சாகமாக ஆதரித்தார்கள். இது ரஜினியை மிகவும் உற்சாகப்படுத்தியது. "ரஜினி முதல்வராகாமல் ரஜினி கைகாட்டுபவர் முதல்வரானால் ஏற்பீர்களா' என்கிற கேள்வி பொது மக்களுக்கு புரியவில்லை. யார் முதல்வர் ஆனால் என்ன சார்... எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் காசு வரணும் போன்ற தங்களது பிரச்சினைகளை மக்கள் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு சர்வே எடுத்த இளைஞர்கள் விளக்கமாக "ரஜினி முதல்வராக மாட்டார் அவரது கட்சி ஜெயித்தால் ஒரு நல்லவரை முதல்வராக்குவார். அவர் தவறு செய்தால் ரஜினி மாற்றிவிடுவார். ரஜினி கட்சி நிர்வாகிகள் ஆட்சியில் தலையிட மாட்டார்கள். அதுதான் கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற சித்தாந்தம்' என சொன்னார்கள். கட்சி வேறு ஆட்சி வேறு என்பது தமிழகத்திற்கு சரிப்படாது என 15 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி சொல்வது சரி என 85 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் உண்மையை அறிய தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்ட சாம்பிள்களை ரஜினியே நேரில் கொண்டு வரவைத்து பார்த்து, அதை எடுத்தவர்களுக்கு வாட்ஸ் அப்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

 

rajini



இளைஞர்களுக்கு 60% வாய்ப்பு மற்ற கட்சியிலிருந்து வந்தவர்கள், திறமையான சமூக சேவகர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு 40 சதவிகித வாய்ப்பு. கட்சி பதவியில் இருக்கும் 50,000 பேருக்கும் வாய்ப்பு தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அவர்களுக்கு ஆட்சியில் மரியாதை கிடையாது என்பதெல்லாம் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசிய பேச்சுகளின் ரிப்பீட்டுதான் என்கிறார்கள் மா.செ.க்கள்.


"அண்ணா, கலைஞர், ஜெ. ஆகி யோருக்கு மரியாதை, விவேகானந்தர், காந்தியடிகள் ஆகியோரை குறிப்பிட்டது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்' என்கிறார்கள். "சோ என்னை பாசிஸ்டு என கூப்பிடுவார். எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்பதால்தான் சோ என்னை அப்படி அழைப்பார்' என்கிற ரஜினி, ஸ்டாலினுக்கு கலைஞரின் வாரிசு என நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தையும், எடப்பாடி ஏகப்பட்ட செல்வத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளதையும் குறிப்பிட்ட ரஜினி "இதை மாற்ற 2021 தேர்தல்தான் ஒரே சந்தர்ப்பம். எனக்கு மறுஜென்மம் கிடைத்துள்ளது'' என உடல்நிலை பிரச்சினைகளையும் குறிப்பிடத் தவறவில்லை.

 

 

rajini



இதில் பலவற்றையும் மா.செ.க்கள் கூட்டத்தில் ரஜினி பேசினார். சிலவற்றை தன்னை சந்திக்க வந்தவர்களிடம் பேசினார். அதை கோர்வையாக்கி ஒரு உரையாக்கி பேசியுள்ளார். இதை வெளிப் படையாக ரஜினி பேச முன் வந்ததற்குக் காரணம். ரஜினி கட்சி வேறு ஆட்சி வேறு என்கிற கொள்கையை கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால்தான். ரஜினியின் வெளிப்படையான அந்தப் பேச்சில், பெண்கள் 30 சதவிதத்தினருக்கு அறிவு கிடையாது.

தலைவர்கள் சொன்னால் தொண்டர்கள் கேட்கணும்.

எனக்கு உடல்நிலை சரியில்லை வயது 71 நான் மறு ஜென்மம் எடுத்துள்ளேன் எனச் சொன்னதெல்லாம் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.


இதற்கிடையே ரஜினியுடன் சேர ஒரு படை தயாராகியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான சிவனாண்டியும் ஜாபர் சேட்டும் ரஜினியின் மனைவி மூலம் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்கள். ரஜினிக்காக அவரது பிரச்சாரங்களை சிவனாண்டி ஒருங்கிணைக்கிறார். அதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பெரிய அலுவலகத்தையே திறந்திருக்கிறார்.

இதில் ரஜினி மா.செ. கூட்டத்தில் பேசி பத்திரிகையாளர்களிடம் பேசாதது கூட்டணி பற்றி மட்டுமே. பா.ம.க., கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ரஜினியிடம் பேசி வருகின்றன. ஆனால் ரஜினி எதிர் பார்ப்பது- காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சிக. ஆகிய கட்சிகளையும் அழகிரி தலைமையில் தி.மு.க.வை உடைப்பதையும்தான். இதுதான் ரஜினி எதிர்பார்க்கும் "புரட்சி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.