Skip to main content

“நேருவை ஒதுக்கிவிட்டு சாவர்க்கருக்கு மரியாதையா?” - இள. புகழேந்தி காட்டம் 

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Abandon the Nehru film.. Respect for Savarkar?" - young. Pugahendi Ghattam

 

புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார். 

 

புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்களின் எண்ணை உயர உள்ளதால் புதிய நாடாளுமன்றம் அதற்கேற்ப இருக்கைகள் அதிகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்கிறாரே?

 

“இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு துணையாகவும் கடைசி கால  கட்டத்தை கழித்த சாவர்க்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகள் சிறையிலேயே தங்கள் வாழ்நாட்களை கழித்த நேரு போன்றோர் எத்தனையோ தலைவர்களை ஒதுக்கி, மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக தேடப்பட்ட சாவர்க்கர் படத்தை வணங்கி இந்த பாராளுமன்றத்தை திறந்து வைத்துள்ளார்கள். இது ஜனநாயக படுகொலையாகவும் இந்திய இறையாண்மையை தீங்கு விளைவிப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

 

சீனாவை விட 135 கோடிக்கு மேல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது இந்தியா வளர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள  தொகுதிகளை பிரிப்பதற்காக தான் அதிக இருக்கைகள் கொண்ட புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாஜக அதிக வாக்கு வாங்கும் இடங்களான மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தன்னுடைய வசதிக்கேற்ப தொகுதிகளை அதிகப்படுத்தி தென்மாநிலங்களில் உள்ள தொகுதியை குறைப்பதற்கான சதி திட்டமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

 

ஆங்கிலேயர் கட்டிய பழைய பாராளுமன்றம் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது. ஆனால் மோடி கட்டிய இந்த புதிய பாராளுமன்றம் எத்தனை ஆண்டுகள் இடியாமல் இருக்கும் என்பதை உத்தரவாத்தை  தரமுடியுமா? எதற்கு அவசர அவசரமாக புதிய பாராளுமன்றத்தை கட்டினார்கள்?. என்ற கேள்விகளும் எழுகிறது.

 

ஆரம்பத்தில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக முதல் முதலில் முன்மொழிந்தது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம் அவருடைய மகளான அப்போது பேரவை தலைவராக இருந்த மீரா குமார். அதன் பிறகே இந்த அரசு பாராளுமன்றத்தை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது.

 

புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக அன்றைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது திறப்பு விழாவுக்கு இன்றைய குடியரசு தலைவரான திரௌபதி முர்முவும் அழைக்கப்படவில்லை. இவை மட்டுமில்லாமல், பாராளுமன்ற திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி, முதல் முதலில் பாராளுமன்றத்தை கட்டுவதற்கு முன்மொழிந்த மீரா குமார் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இந்த விழா தீண்டாமையை கடைப்பிடித்தே நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது” - பிரதமர் மோடி

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Pm modi  praised the Supreme Court's verdict that Article 370 will be repealed

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும், எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அதற்கடுத்தாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதில் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், “சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது; இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பு. நீதிமன்றம், அதன் ஆழ்ந்த ஞானத்தில், இந்தியர்களாகிய நாம், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பாகவும், போற்றவும் வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை வலுப்படுத்தியுள்ளது.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு ஒரு போதும் மாறாது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” - பிரதமர் வாழ்த்து

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
PM Modi wishes Sonia Gandhi on her birthday
கோப்புப்படம்

முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவில், “அர்ப்பணிப்புள்ள பொது வாழ்வின் எடுத்துக்காட்டாக விளங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில் அவரது ஆழ்ந்த தொலைநோக்கு பார்வையும் அனுபவச் செல்வமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.