Skip to main content

'2016' தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

2016 tn assembly election admk and dmk candidates votes

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

தேர்தலில் பதிவான ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம். எப்படி என்று கேட்கிறீர்களா? கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியைச் சந்தித்தனர்.

 

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் குறித்து பார்ப்போம்!

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 

 

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். 

 

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.சீதாபதி 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும், பி.சீதாபதி 61,879 வாக்குகளும் பெற்றனர். 

 

செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு 304 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.முனுசாமி 63,142 வாக்குகளும், ஆர்.டி.அரசு 63,446 வாக்குகளும் பெற்றனர்.  

 

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சுப்ரமணியன் 64,086 வாக்குகளும், கடம்பூர் ராஜு 64,514 வாக்குகளும் பெற்றனர்.

 

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.சுப்ரமணியன் 81,495 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81,936 வாக்குகளும் பெற்றனர். 

 

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் 85,877 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகளும் பெற்றனர். 

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 64,578 வாக்குகளும், ஆர்.சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளும் பெற்றனர். 

 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455, வெற்றிவேல் 79,974 வாக்குகளும் பெற்றனர். 

 

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவி செழியன் 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யு.சேது 77,006 வாக்குகளும், கோவி செழியன் 75,538 வாக்குகளும் பெற்றனர்.

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 81,160 வாக்குகளும், ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 81,761 வாக்குகளும் பெற்றனர். 

 

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகுபதி 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.கே.வைரமுத்து 71,607 வாக்குகளும், எஸ்.ரகுபதி 72,373 வாக்குகளும் பெற்றனர்.

 

பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி 818 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ராஜேந்திரன் 73,600 வாக்குகளும், கே.எஸ்.மூர்த்தி 74,418 வாக்குகளும் பெற்றனர். 

 

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 69,265 வாக்குகளும், கோதண்டபாணி 70,215 வாக்குகளும் பெற்றனர்.

 

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.ராஜேந்திரன் 982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈ.சி.கோவிந்தராஜன் 79,668 வாக்குகளும், வி.ராஜேந்திரன் 80,650 வாக்குகளும் பெற்றனர். 

 

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கோவிந்தராசு 995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.அசோக்குமார் 72,913 வாக்குகளும், எம்.கோவிந்தராசு 73,908 வாக்குகளும் பெற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.