Skip to main content

பா.ஜ.கவுக்கு 100 சீட்! அ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா!

Published on 26/11/2020 | Edited on 28/11/2020

முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பதை அமித்ஷா பங்கேற்ற சென்னை விழாவின் மேடையிலேயே உறுதிபட அறிவித்தது அ.தி.மு.க .சீனியர் களையும் விசுவாசிகளையும் அதிர வைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் எதிர்பார்ப்பு என்னவென்பதை அமித்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கூட்டணியை இறுதி செய்யலாம் என கடந்த 20-ந்தேதி மூத்த தலைவர்களுடன் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக, 21ந் தேதி இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ் இருவரும் அமித்சாவிடம் உறுதி அளித்துவிட்டனர்.

amitsha

கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவை முடித்துக்கொண்டு ஹோட்டல் லீலா பேலஸுக்கு திரும்பிய அமித்ஷாவை எடப்பாடி, பன்னீர், ஜெயக்குமார் மூவரும் சந்தித்தனர். மத்திய அரசிடம் எதிர்பார்க்கும் சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் குறித்த கோரிக்கைகளை அமித்ஷாவிடம் கொடுத்த ஜெயக்குமார், 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியபோது, ""அவர்களின் விடுதலையை சி.பி.ஐ. எதிர்க்காது; விரைவில் நல்லது நடக்கும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்; ஆனால், இந்த விவகாரத்தில், தமி ழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அர சியல் செய்கின்றன'' என அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

பின்னர் ஜெயக்குமாரை வெளியே அனுப்பி வைத்து விட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சும் சுமார் 50 நிமிடங்கள் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தனர். 234 தொகுதிகளையும் எந்த எண்ணிக்கையில் பகிர்ந்துகொள்வது என்பது பற்றித்தான் விவாதத்தின் பெரும் பகுதி கழிந்துள்ளது. எடப்பாடி கொடுத்த பட்டியலை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் அமித்ஷா. இரு தரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், பிரதமரிடம் கலந்தாலோசித்து விட்டு மீண்டும் பேசுவோம் என அமித்ஷா சொல்ல, சந்திப்பு நிறைவடைந்தது.

எடப்பாடியிடமும் பன்னீரிடமும் நெருக்கமாக உள்ள அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்த போது, ""அமித்சாவுடன் பேசிய எடப்பாடி, விழாவில் அதி.மு.க. அரசை பாராட்டியும் தி.மு.க.வின் அரசியலை கடுமையாக விமர்சித்தும் நீங்கள் பேசிய பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பராக இருந்தது உங்கள் பேச்சு என பாராட்டிவிட்டு, பா.ஜ.க.வுடனான கூட்டணியை தொடர்வதில்தான் எங்களுக்கும் விருப்பம். பாஜகவுக்கு எதிரான கருத்து வேறுபாடுகள் எங்கள் கட்சியின் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் இருந்தாலும் எதார்த்த அரசியலை சுட்டிக்காட்டி அவர்களுக்குப் புரிய வைத்திருக்கிறோம் என அமித்சாவிடம் விவரித்திருக்கிறார் எடப்பாடி.
ggg
அப்போது பேசிய அமித்சா, தி.மு.க.வின் வாரிசு அரசியலையும் ஊழல்களையும் விமர்சித்திருக்கிறேன். அதே விமர்சனம் உங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, ஊழல் விவகாரங்களில் அதி.மு.க.வை தள்ளிவைத்துவிட முடியாது. இதனையும் மீறி அதி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான காரணங்களை இப்போது விவாதிக்க வேண்டாம். எங்களைப் பொறுத்த வரை, வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை பிடித்திருக்கிறோம். தென்னிந்தியாவில் அதே நிலை வர வேண்டும்.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி என்ன என்பது எங்களுக்குத் தெரியும்ங்கிற நிலையில், அதி.மு.க.வுடனான கூட்டணியை வலிமைப்படுத்த நினைக்கிறேன். அதனால், பாஜகவுக்கு 100, அதி.மு.க.வுக்கு 134, கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் சீட் ஒதுக்கிக் கொள்ளுங்கள் என பேரத்தை துவக்கியிருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த எடப்பாடி, பீகார் பாணி அரசியல்போல தமிழகத்தில் கூட்டணி பேசுகிறீர்கள். இதை எங்கள் நிர்வாகிகள் யாரும் ஏற்க மாட்டார்கள். அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும் என்றவர், ஓபிஎஸ்சை பார்க்க, தம்மிடமிருந்த ஒரு பட்டியலை அமீத்ஷாவிடம் ஓபிஎஸ் தந்துள்ளார். அதில், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அதி.மு.க.வுக்கு 190, பாஜகவுக்கு 12, பாமகவுக்கு 17, ரஜினிக்கு 10, தேமுதிகவுக்கு 5 என சீட் ஷேரிங் செய்யப்பட்டிருந்தது.

அந்த பட்டியலைக் கண்டு அதிர்ந்து போன அமித்சா, இது ஆரோக்கியமானதாக இல்லையே என சொல்ல, தமிழகத்தில் அதி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான் எப்போதுமே போட்டி. இதற்கு மாறாக, கூட்டணி கட்சிகளுக்கு யார் அதிகம் சீட்டுகளை தருகிறார்களோ அந்த கட்சி பெரும்பாலும் தோல்வியடைகிறது. அதாவது, தோழமை கட்சிகளை பிரதான கட்சி ஈசியாக ஜெயித்து விடுகிறது. அதனால்தான் இந்த தேர்தலில் 200 இடங்களில் போட்டிபோட தி.மு.க. திட்டமிடுகிறது. அதே அளவுக்கு அதி.மு.க.வும் போட்டியிட்டால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான வாக்குகள் பிரியும். ஆனால், கொரோனா நெருக்கடியால் அரசிய லுக்கு வர ரஜினி தயங்குகிறார். அவரை தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியுடன் கூட்டணி வைப்பதற்கான சம்மதத்தைப்பெற உங்களால்தான் முடியும். 5 முக்கிய இடங்களிலும், 3 முறை ஊடகங்கள் மூலமாகவும் அவர் பிரச்சாரம் செய்தால் போதும். மேலும், பா.ஜ.க.- ரஜினியின் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டிய அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம். பா.ஜ.க.வின் 12 பேர் சட்டமன்றத்துக்குள் நுழைய நாங்கள் கேரண்டி. அதனால், இந்த சீட் ஷேரிங்கிற்கு சம்மதியுங்கள் என இயல்பாக சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், ஒருவேளை ரஜினியை சம்மதிக்க வைக்க முடியாமல் போனால், அவருக்கான 10 சீட்டுகளை பா.ஜ. க.வுக்கு ஒதுக்கு கிறோம் என்றிருக்கிறார். எடப் பாடியும் பன்னீரும் பேசியதன் பொருளை அமித்ஷா உணர்ந்திருந்தாலும், குறைந்த பட்சம் பா.ஜ.க. 54 சீட்டுகளில் போட்டியிட வேண்டுமென தொகுதிகளை அடையாளப் படுத்தியிருக்கிறோம். அதனால், பிரதமரிடமும் பேசிவிட்டுச் சொல்கிறேன் என பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டார்''‘’ என்று சந்திப்பில் நடந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள் மேலிட தொடர்பாளர்கள்.

அ.தி.மு.க. தலைமையிடம் பேசியதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள், அணித் தலைவர்களுடன் ஆலோசித்த அமித்ஷா, ""கூட்டணி பற்றி யாரும் பேச வேண்டாம். கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ஜனவரியில் வேட் பாளர்களை அறிவித்து விடலாம். பாஜக இடம் பெறும் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும்'' என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மாநில தலைவர் முருகன் பேசும் போது, சட்டமன்றத்தில் வலிமையான கட்சியாக பாஜக இருக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் வியூகம் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதன்பிறகு இரவு 11 மணிக்கு அமித்சாவை சந்தித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆலோசித்துவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார். அ.தி.மு.க. தலைமை முன்வைத்த சீட் சேரிங் விசயத்தையும் ரஜினியை பற்றியும் அமித்ஷா சொல்ல, பாஜகவுக்கு 100சீட்! இதில் ரஜினிக்கு 50 சீட்டுகளை நாம் ஒதுக்கலாம்; அ.தி.மு.க.வுக்கு 134 சீட்! அதில் பா.ம.க.-தே.மு.தி.க.வுக்கு அ.தி. மு.க. ஒதுக்கினாலும் சரி, அல்லது அக்கட்சிகளை கழட்டி விட்டா லும் சரி என்கிற யோசனையை தெரிவித்துள்ளார் குருமூர்த்தி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். இந்த நிலையில், 22-ந்தேதி டெல்லிக்கு அமித்சா புறப்படுவதற்கு முன்பு ரஜினியை சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அஷ்டமி என்பதால் சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்கிறது பா.ஜ.க தரப்பு.

அமித்சாவுடனான சந்திப்பு விபரங்களை கட்சியின் சீனியர்களிடம் எடப்பாடியும் பன்னீரும் பகிர்ந்துகொள்ள, இந்த சீட் ஷேரிங் பட்டியல்தான் சரியானது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு லாபம்தான் என்றிருக்கிறார்கள். சென்னை பயண விபரங்களை மோடியிடம் அமித்ஷா விவாதித்த பிறகே, அமித்சாவின் சென்னை வருகை அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியை தருமா அல்லது மகிழ்ச்சியைத் தருமா என்பதை எடப்பாடிக்கு உணர்த்தும் என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

-இரா.இளையசெல்வன்

___________
Go back! பதாகை வீச்சு!

goo

விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்து ரோட்டில் நடந்தபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற அமித்ஷாவை நோக்கி வந்த பழவந்தாங்கலைச் சேர்ந்த 67 வயது துரைராஜ், "அக்கவுண்ட்டில் போடுறதா சொன்ன 15 லட்சம் எங்கே?' எனக் கேட்டபடி தன் கையிலிருந்த வரவேற்பு பதாகையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர் போலீசார். அவருக்கு பா.ஜ.க.வினரிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் நிதி தேவையை நிறைவேற்றாத பா.ஜ.க அரசைக் கண்டித்து, GoBackAmitShah என்ற ஹேஷ்டாக்கும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.


-கீரன்


 

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.