Skip to main content

ஈரோட்டில் ஆவி நடமாட்டமா?-அதிரவைத்த சிசிடிவி காட்சி!! 

Published on 13/06/2020 | Edited on 14/06/2020
INCIDENT IN ERODE

 

சினிமாக்களில் தான் பேய் வருவதும், ஆவி நடமாடுவதும் திகிலூட்டும் பட காட்சியாக எடுக்கப்பட்டு அது பரபரப்பாக திரையில் ஒடும். அதுவே நிஜத்தில் நடந்ததாக எந்த ஆய்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞான உலகில் ஏராளமான கட்டுக்கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ஆவி... பேய் என்ற நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.


அப்படித்தான் ஈரோட்டில் கிளம்பியுள்ளது இந்த ஆவியும். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவேரி ஆறு மேம்பாலம், ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் இடையில் உள்ளது. இங்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இதில் சி.சி.டி.வி.கேமரா மூலம் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்ற இரு நாட்களுக்கு முன்பு சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சியின் நேரம் பகல் ஒரு மணி இரு சக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது ஒரு இடத்தில் திடீரென ஒரு ஒளி அது வெள்ளை உருவம் அந்த ஒளி உருவம் நடு சாலையில் அந்த மேம்பாலத்தில் வேகமாக செல்கிறது பிறகு இடதுபுறம் சென்றும், தொடர்ந்து வலது புறம் சென்று பிறகு ரோட்டில் நேராக சென்று விடுகிறது.

 

 


இந்த காட்சிகளை கண்ட போலீசாருக்கு திகிலும் பயமும் ஒரு சேர ஏற்பட்டு ஐயோ ஆவிதான் இப்படி நடுரோட்டில் போகிறது என போலீசார் பீதியை கிளப்ப, மற்றொருவர் இங்கு 100 அடி தூரத்தில் இரண்டு சுடுகாடுகள் உள்ளது. அந்த சுடுகாட்டிலிருந்துதான் இந்த ஆவி வந்திருக்கிறது என அவர் பங்குக்கு கூறியிருக்கிறார். இந்த காட்சிகளை வாட்ஸ் அப் முலம் வெளியே அனுப்ப பொதுமக்கள் மத்தியில் ஆவி நடமாட்டம் என்ற பய பீதி ஏகத்திற்கும் பரவியது.

பள்ளிபாளையம் காவேரி பாலத்தில் பாத்து போங்கப்பா ஆவி சுத்திகிட்டு இருக்குது என பொதுமக்களில் சிலர் அட்வைஸ்சும் கொடுக்க ஆரம்பித்தனர். சரி அந்த உருவம் எப்படி வந்தது என தொழிழ்நுட்ப பிரிவை சேர்ந்த கம்யூட்டர் எஞ்சினியர்கள் ஆய்வு செய்தபோதுதான், அது ஆவியும், இல்லை பேயும் இல்லை. கேமராவில் ஏற்பட்ட அலைனிங் பிரச்சனை என்பது தெரியவந்தது. இதுபோன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படும்போது கேமரா வெளிச்சம் காட்சிகளில் பதிவாகும் அப்படித்தான் இதுவும் என்பதை கண்டுபிடித்தனர்.

 

ஆனாலும் என்னதான் ஆய்வுபூர்வமாக எடுத்துச் சொன்னாலும் பரவிய பீதி குறையாமல் கரோனாவோடு மட்டுமல்ல, நாங்கள் பேய், ஆவியோடும் வாழப் பழகிக் கொண்டோம் என்கிறார்கள் காவேரி பாலத்தில் பயணம் செய்யும் பள்ளிபாளையம், ஈரோடு மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.