முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம், வியாழக்கிழமை காலையில் (10-10-24) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் செல்வம்.

திங்கள்கிழமை அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணம் சம்பவித்துள்ளது. செய்தியறிந்து ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரமடைந்தனர்.

dr

அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின் இரண்டாம் பகுதியான ர்ற்ட்ங்ழ்ஜ்ண்ள்ங் என்பதைப் பயன்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமலேயே ஒரு மாநில ஆட்சியைக் கலைத்து ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்தது என்றால் அது 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான். கலைக்கப்பட்டது, தமிழ்நாட்டில் இருந்த தி.மு.க. ஆட்சி. கலைக்கச் சொன்னவர் ஜெயலலிதா. கலைத்தவர் பிரதமர் சந்திரசேகர். இருட்டிய பிறகு அறிவிப்பு வெளியானது.

ஆட்சிக் கலைப்பு அறிவிப்பைக் காலையிலிருந்தே எதிர்பார்த்திருந்த கலைஞர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார். முரசொலி மாறன் எம்.பி. டெல்லியிலிருந்து அங்குள்ள சூழல்களை விவரித்துக்கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணி.

முரசொலி அலுவலகத்தின் ஆசிரியர் குழு, செய்தியை எந்த முறையில் வெளியிடுவது, என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பிரிமியர் பத்மினி கார் வருகிறது. அதில் வந்தவர் ஆசிரியர் முரசொலி செல்வம்.

அடுத்த சில நிமிடங்களில், செய்தி -அதற்கான தலைப்பு -முதன்மைச் செய்தியை ஒட்டிய பெட்டிச் செய்திகள் என அனைத்தையும் விறுவிறு வென எழுதி முடித்து, எதை, எந்தப் பக்கத்தில் போட வேண்டும் என்றும் விளக்கிவிட்டுப் புறப்படுகிறார். ‘"ஜனநாயகப் படுகொலை!'’ என்பதுதான் தலைப்பு.

கலைஞர் அங்கே இருந்திருந்தால், முரசொலிமாறனும் வந்திருந்தால் என்ன தலைப்பு வைப்பார்களோ, எப்படி செய்தியைக் கொடுப்பார்களோ அதனை அவர்கள் இல்லாத சூழலிலும் அப்படியே பிரதி பலிக்கக் கூடியவர்தான் முரசொலி செல்வம். எத்தகைய நெருக்கடியான நேரத்திலும் அமைதியான அணுகுமுறை யுடன் ஆழமான சிந்தனைகளை வெளிப் படுத்தக் கூடியவர்.

ஜெயலலிதா ஆட்சியில் முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் சபாநாயகர் உத்தரவின்படி சட்டமன்றத்தில் ஆஜரானார் முரசொலி செல்வம். அவரை விசாரிப்பதற்காகவே சட்ட மன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், துணிந்து வாதாடி, அடக்குமுறைக் கூண்டைத் தகர்த்து கருத்துரிமை சிறகை விரித்தார்.

"சிலந்தி' என்ற பெயரில் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். கலைஞரின் எழுத்தில் பொதிந்திருக்கும் எள்ளல் நடையை உரிமையுடன் பெற்றுக்கொண்டு, தன் பாணியிலான கட்டுரைகளை வழங்கியவர் அவர். அக்டோபர் 8ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நையாண்டியால் நையப்புடைத்து கட்டுரை எழுதியிருந்தார். இன்று அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று ஓய்வெடுத்தவர் நிரந்தர ஓய்வுக்குள்ளாகி விட்டார்.

82 வயதிலும் கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் இளையவர்கள் வெளிப் படுத்தும் கருத்துகளையும் உற்றுக் கவனித்து, அவற்றை முரசொலியில் வெளியிடச் செய்து ஊக்கப்படுத்தியவர். 50 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகள் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாகத் தெளிவுபடுத்தக் கூடியவர். தேர்தல் களத்தைத் துல்லியமாக உணர்ந்து, முடிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடியவர்.

இத்தனை ஆற்றல்கள் நிறைந்தபோதும், எப்போதும் அமைதியானவர் முரசொலி செல்வம். இப்போதும் அமைதியாக உறங்கிக்கொண்டி ருக்கிறார்.

-கீரன்