"ஹலோ தலைவரே, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நெருக்கடிகளுக்கு நடுவே தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை உலகத் தமிழர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடியிருக்காங்க.''”

"ஆமாம்பா, நம் தமிழகத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சகிதம் நம் மக்கள், பண்பாட்டு உணர்வோடு தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடியிருக்காங்க.''”

"உண்மைதாங்க தலைவரே, அரசியல் ரீதியிலான கொண்டாட்டம்னு பார்க்கப் போனா, கலைஞர் இருந்தவரை அரசியலைத் தாண்டி கோபாலபுரத்தில் பொங்கல் காட்சிகள் விதவிதமா அரங்கேறும். வர்றவங்களுக்கு தன் கையால் 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து அவர் வாழ்த்துச் சொல்வார். அவருக்குப் பிறகு, சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் ஸ்டாலினை தி.மு.க.வினரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கு வாங்க. இந்த ஆண்டு, கொரோனா நெருக்கடியால் அமைச்சர் களைத் தவிர, வேறு யாரையும் வரவேணாம்னு முதல்வர் ஸ்டாலின் சொல்லிட்டார். அதேபோல் வழக்கமாக சி.ஐ.டி. காலனிக்குச் சென்று ராஜாத்தியம்மாளிடம் வாழ்த்து பெறும் ஸ்டாலின், இந்தமுறை அங்கே போகவில்லை. சித்தரஞ்சன் சாலைக்கு கனிமொழி வந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.''”

Advertisment

stalin

"பெரிய இடத்திலே லஞ்சம் கேட்ட பத்திரப் பதிவு அதிகாரி ஒருத்தர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்காரே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பத்திரப் பதிவுத்துறையில் ஆட்சி மாறியும் காட்சி மாறலை. அங்கே, நாளுக்கு நாள் லஞ்சம் விவகாரம் பெருகிக்கிட்டுதான் இருக்கு. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் எஸ்.வி.ஹரிநாத், கடந்த 13-ந் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கார். அதுக்குக் காரணம், முதல்வரின் சகோதரி செல்விக்கு தெரிந்த ஒருவர், பத்திரப் பதிவு செய்யப் போனப்ப, அந்த சார்பதிவாளர் சொத்தினை பதிவு செய்ய 12 லட்ச ரூபாய் கமிஷன் கேட்டிருக்கார். முறையாக பதிவு செய்ய எதற்கு லஞ்சம்னு சம்மந்தப்பட்ட நபர் கேட்டபோது, எங்க உயரதி காரிகள் வரை நாங்க கமிஷன் தரவேண்டியிருக்குன்னு அவர் கூச்சமே இல்லாமல் சொல்லி யிருக்கார்.''”

"ஓஹோ...''”

"இந்தத் தகவல் அப்படியே செல்வியின் கவனத்துக்குப் போக, அவரே சம்பந்தப்பட்ட சார் பதி வாளைரைத் தொடர்புகொண்டி ருக்கிறார். அதுக்கு அந்த சார்பதி வாளர், "நீங்க யாரா இருந்தாலும் கவலை இல்லை. கமிஷனைக் கொடுத்தால்தான் பதிவு செய்ய முடியும்'னு தெனாவெட்டாகவே சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் அவர் சஸ் பெண்ட் செய்யப்பட்டிருக்கிறா ராம். துறையில் இருக்கும் பணி யாளர்களோ, இவரை சஸ்பெண்ட் செய்துட்டாங்க. சரி, ஆனா... சார்-பதிவாளர்களை, மாதம் தோறும் கப்பம் கட்டச் சொல் கிற உயரதிகாரிகளை யாரால் தட்டிக் கேட்க முடியும்னு ஆதங்கமாக் கேட்கறாங்க.''”

"பொங்கலுக்கு முதல்நாள் இரவில், சென்னையில் போடப் பட்டு வந்த சாலைகளை திடீ ரென ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறையாக மில்லிங் செய்த பிறகே ரோடு போடணும்னும் இல்லேன்னா நடவடிக்கை எடுக்கப்படும்னு அறிவிச்சிருக்காரு. பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள்ளேயும் முதல்வர் நுழைஞ்சாருன் னாதான் சரிப்படும் போல.''”

"மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தும், அ.தி.மு.க. மாஜி மந்திரி ராஜேந் திர பாலாஜி பலத்த அப்செட் டில் இருக்காரே.''”

rajendrabalaji

"ஆமாங்க தலைவரே, சிறையில் இருந்த ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஆதரவாக எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அறிக்கை விடுவாங்கன்னும், வெளியே வந்த தன்னைக் கட்சி சார்பில் வரவேற்க ஏற்பாடு செய்வாங்கன்னும், தன்னைத் தொடர்புகொண்டு அவங்க நலம் விசாரிப்பாங்கன்னும் ஆவலோடு காத்திருந்தாராம். ஆனால் அவர் கள் ராஜேந்திர பாலாஜியைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் இருவர் மீதும் கடும் கோபத்தில் இருந்த ராஜேந்திர பாலாஜி, ஜாமீனில் வெளியே வந்ததும் நேராக சென்னைக்குச் சென்று, அவர் களைச் சந்தித்து முகத்துக்கு நேராக அவர்களிடம் தன் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துடணும்னு திட்டமிட்டிருக் கார். ஆனால் 4 வார கால ஜாமீனில் அவரை வெளியே அனுப்பிய உச்சநீதிமன்றம், அவர் தன் சொந்த ஊரான விருது நகரில்தான் தங்கியிருக்கணும்னு நிபந்தனை விதிச்சிடிச்சி. அதனால், வேறு வழியில்லாமல் நேராக அவர் விருதுநகருக்கே போகும்படி ஆயிடிச்சி.''”

"அதுக்கப்புறமாவது எடப் பாடியும் ஓ.பி.எஸ்.ஸும், அவ ரைத் தொடர்புகொண்டாங்களா?''

"அதுதான் இல்லைங்க தலைவரே, ஊருக்குப் போகும் வழியிலும் ஊர் போய்ச் சேர்ந்த பிறகும் அவர்களைச் சந்திக்க பாலாஜி பலமுறை தொடர்பு கொண்டிருக்கார். ஆனால், அவர்கள், போனை எடுக்கவே இல்லையாம். இதன்பின் தனது கார் ஓட்டுநரின் போனில் இருந் தும் அவர் முயற்சி செய்திருக் கார். அப்பவும் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் சேர்ந்தாற்போல் அவரை அவாய்ட் பண்ணிட் டாங்களாம். அதனால் அவர்கள் மீதான கோபம் பலமடங்காக, தன்னைப் புறக்கணிக்கும் அவர்களை இனி சும்மா விடப்போவ தில்லை என்றும், அவர்களைப் பற்றிய சில உண்மைகளை, தான் அம்பலப்படுத்தப் போவதாகவும் தன் நண்பர்களிடம் ஆவேசமாக ராஜேந்திர பாலாஜி உறுமிக்கொண்டிருக்கிறாராம். அதேசமயம், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும், மைக் முன் வீராவேசமாகப் பேசும் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இப்படி கோழை மாதிரி தப்பி ஓடியதை விரும்பலையாம்.''”

"ராஜேந்திர பாலாஜியை அவாய்ட் செய்த எடப்பாடி, பொங்கல் பரபரப்புக்கு நடுவிலும் ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கு அப்பாயின்மெண்ட் கொடுத்திருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, அந்த பெண் அதிகாரிக்கு அப்பாயின் மெண்ட் மட்டுமல்ல, கை நிறையவும் அள்ளிக்கொடுத்து அனுப்பியிருக்கார் எடப்பாடி. யாருக்குன்னு கேட்கறீங்களா? கொடநாடு வழக்கில் என்ன தான் ஆதாரங்கள் அடுக் கடுக்காக சிக்கினாலும், எல்லாம் அடுத்தடுத்து பலவீனமாகிவிடுது. இப்படி எல்லாவற்றையும் நீர்த்துப் போகச் செய்வது, கொட நாடு வழக்கை டீல் செய்யும், மகாகவியின் பெயரைக் கொண்ட ஒரு பெண் காவல் துறை அதிகாரி தானாம். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அவர் காதிலேயே இரட்டை இலைத் தோட்டை அணிந்து வலம் வந்தாராம். அப்படிப்பட்ட அம்மணிதான் இப்போதும் தொடர்கிறாராம். இந்த வழக்கில் அவரது தொடர்சேவையை கௌரவிக்கும் வகையில், அவரை பொங்கல் அன்று சீக்ரெட்டாக வரவழைத்து, பெரும் வெகுமதி அளித்துப் பாராட்டி அனுப்பி வைத்தாராம் எடப்பாடி.''”

"சரிப்பா, எம்.ஜி.ஆரின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு கட்சி வேறுபாடு பார்க்காமல் தி.மு.க. அரசு, உரிய மரியாதை செலுத்தியிருக்கே?''

"ஆமாங்க தலைவரே, ஆட்சியில் இருக்கும்போது எம்.ஜி.ஆருக்கு அரசு முறைப்படி மரியாதை செலுத்துவது தி.மு.க.வின் வழக்கம். கலைஞர் ஆட்சி யிலும் இது நடந்தது. எம்.ஜி.ஆரின் 105-ஆவது பிறந்த நாளான 17-ந் தேதி தமிழக அரசு, கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில், கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலைக்கு அமைச்சர்களைக் கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கு ஸ்டாலின் அரசு. அதேபோல், அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுக்க அவரவர் சக்திக்கு ஏற்ப கொண்டாடியிருக்காங்க. அதேபோல் எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி. மு.க. தலைவர்கள் கட்சித் தலைமை யகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்காங்க. அதேபோல், சசிகலா வும் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல் லத்துக்கு நேரில் சென்று, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியா தை செலுத்தினார். முதலில், கொரோ னா காரணமாக வெளியே வர யோசித்த அவர், பிறகு திடீரென மனம் மாறி, தன் ஆதரவாளர் வைத் தியநாதனைத் தொடர்புகொண்டு, ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொன்னாராம்.''

"சசிகலா மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க.க.வினர் கலந்துக்கக் கூடாதுன்னு தினகரன் சொல்லிட்டாராமே?''”

sasi-dinakaran

"ஆமாங்க தலைவரே, சமீப காலமாகவே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் மோதல் நடந்துக்கிட்டுதான் இருக்குது. சசிகலா வைச் சந்திக்கும் தன் கட்சிப் பிரமுகர் களை அவர் கட்டம் கட்டுவது பற்றிக் கூட நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். இப்ப எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை போடும் நிகழ்ச்சியில், தன் கட்சிப் பிரமுகர்கள், எவரும் கலந்துக்கக் கூடாதுன்னுதான், அவர் மாலை அணி விக்கும் அதே நேரத்தில், செந்தமிழன் தலைமையில் தனது கட்சித் தலை மையகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கார் தினகரன்.''”

"சசிக்கும் தினகரனுக்கும் உரசல் வர என்னதான் காரணமாம்?''”

"எல்லாம் கரன்ஸி, சொத்து விவ காரங்கள்தான் தலைவரே... தினகரன் பேரில் இருக்கும் தனது சொத்துக்களை, தன் பேருக்கே எழுதிக் கொடுத்துட ணும்னு சசிகலா வலியுறுத்தறாராம். குறிப்பா, லண்டன்ல இருக்கும் ஒரு சொத்தை தன் பெயரில் எழுதி க்கொடுத்தே ஆகணும்னு சசிகலா சொல்ல, அதற்கு மறுத்துவிட்டாராம் தினகரன். இந்தத் தகராறு இருவருக்கும் இடையில் வாய்த் தகராறாக மாற, தினகரனும் அவர் மனைவி அனுராதாவும் சசிகலாவை ஒருமையில் திட்டும் அளவுக்கு பிரச்சினை மிக மோசமாக வெடிச்சிருக்கு. இதனால் எரிமலையாக மாறிய சசிகலாவை, இளவரசியும் அவர் மகன் விவேக்கும்தான் படாத பாடுபட்டு சமாதானப்படுத்தினாங்களாம். கூடிய விரைவில், தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சசிகலா பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட லாம்னு அவர் தரப்பே சொல்லுது.''”

"பனைமரத் தொழிலாளர்கள் மீது இனி நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு காவல் நிலையங்களுக்கு அதிரடியா உத்தரவிடப்பட்டிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே... பதநீர் இறக் கும் பனைமரத் தொழிலாளர்கள் மீது, கள் இறக்குவதாக அடிக்கடி காவல்துறை வழக்கு போட்டு வந்ததால், ஒரு சமு தாயத்தினர் மட்டும் அதிகம் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில் பதநீர் இறக்குபவர்களையும் விற்பவர்களையும் எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு தமிழக காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக உத்தரவிட்டிருக்கிறார். இது பனைத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் காவல்துறையில் இருக்கும் இன்னொரு தரப்போ, காவல்துறை தலைவரான டி.ஜி.பி. சைலேந்திர பாபுவும் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும் சமூக கண்ணோட்டத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடக் காரணமாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.''”

"அநியாயமா ஒரு பிரச்சினையில் ஒரு சமூகத்தினர் ஒடுக் கப்பட்டா அதற்காகத் தீர்வு காண்பதுதானே சமூக நீதி!''”

"நானும் ஒரு தகவலைச் சொல்றேன். இந்த ஆண்டின் தமிழ்த் திரைப்படத் திருவிழா நார்வேயில் கடந்த வாரம் நடந்தது. இதில் பல்வேறு திரைப் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வரிசையில் "தலைவி' படத்திற்காக சிறந்த நடன இயக்குநர் விருது பா.ஜ.க.வின் கலைத்துறைத் தலைவர் காயத்ரி ரகுராமுக்குக் கிடைச்சிருக்கு. இதையறிந்த பா.ஜ.க. பிரமுகர்கள் அவருக்கு வரிசைகட்டி வாழ்த்துக்களைத் தெரிவிச்சிருக் காங்க. குறிப்பா, கட்சியின் தேசிய செயலர் ஜே.பி.நட்டா, அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதில்... அம்மணி குளிர்ந்துபோயிருக்கிறார்.''”