இரண்டில் ஒன்று!
மகிழ் திருமேனி இயக்கும் "விடாமுயற்சி' படத்தில் நடித்துவரும் அஜித், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரபல நடிகை தபுவை அணுக, அவர் நோ சொல்லிவிட்டதால் தற்போது திஷாபதானி மற்றும் மிருணாள் தாக்கூர் என இரு ஹீரோயின்களின் பெயர்கள் பரீசிலனையில் உள்ளதாம்.
வெற்றிகர தயாரிப்பாளர்!
இயக்குநர் வெற்றிமாறன், கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். "காக்கா முட்டை', "விசாரணை', "வடசென்னை' உள்ளிட்ட பல படங்களில் இணை தயாரிப்பாளரான அவர், கடைசியாக ஆண்ட்ரியாவின் "அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித் திருந்தார். இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் "கருடன்' படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கவினை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். இதனை அவரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய விக்ரனன் அசோகன் என்பவர் இயக்கவுள்ளார். படத்தில் நயன்தாராவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
முருகதாஸ் மகிழ்ச்சி!
ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூரை தேர்வு செய்து, அதற்கான டெஸ்ட் ஷூட்டும் நடத்தினார். கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் வெளியேறவே, தற்போது கன்னட நடிகை ருக்மணி வசந்தை ஒப்பந்தம் செய்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்துவரும் இவர் தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்திலும் நடித்துள் ளார். இதற்கிடையே, தன் அடுத்த படத்திற்கான ஹீரோ வையும் ஏ.ஆர். முருகதாஸ் ஓ.கே. செய்து, பாலிவுட் சல்மானிடம் சம்மதம் வாங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சல்மான் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அடுத்தடுத்து தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்கள் அமைவதால் மகிழ்ச்சியில் உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
மகாபாரத நம்பிக்கை!
மகாபாரதக் கதை தொடராகவும், படங்களாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருக்க... அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு படம் உருவாகிறது. லிங்குசாமி இந்த முயற்சியை கையில் எடுத் துள்ளார். அதுவும் பான் இந்தியா படமாக பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படத்தை இயக்கவும், அதற்கு முன்பாக "பையா 2' எடுக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக ஆர்யா, கார்த்தி, அதர்வாவின் தம்பி முரளி என முயற்சி செய்துவந்தார். பூஜா ஹெக்டேவிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு இப்படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்தச் சூழலில் மகாபாரதத்தை பெரிதும் நம்பியுள்ளார் லிங்குசாமி.
ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி!
ரஜினி -த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகிவரும் "வேட்டையன்' படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ராணாடகுபதி, பகத்பாசில், துஷாராவிஜயன், ரித்திகாசிங் என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட முடி வெடுத்துள்ளார்களாம். ஏற் கனவே சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடித்த "லால் சலாம்' படம் சமீபத்தில் வெளியானதால் மகிழ்ச்சியிலுள்ள ரஜினி ரசிகர்கள், "வேட்டையன்' படமும் ஒரே ஆண்டில் வெளியாக வுள்ளதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-கவிதாசன் ஜெ.