""இந்த உலகம் முழுக்க உடல் ரீதியா துன்புறுத்தப்பட்ட பல பேர்கிட்ட உண்மைய தவிர வேற ஒரு சாட்சியும் இருக்காது யுவர் ஆனர்...''

-ஜோதிகா உடைந்து நொடிந்து பேசும் இந்த ஒரு வசனம் உலகம் முழுவதும் உடல் அத்துமீறல்களுக்கு ஆளாகி அதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டும், வெளியே சொல்லி நீதி கிடைக்காமலும் இருக்கும் கோடிக்கணக்கான பெண்களின், குழந்தைகளின் ஒட்டுமொத்த குரலாக நமக்குக் கேட்கிறது. "நமக்கு' என் றால், இந்த வலியின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும், முக்கியமாக நக்கீரனுக்கும் கேட்கிறது. ஏனென்றால், நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, அவர்களை பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி, கொடுமை செய்துவிட்டு இன்னும் அதற்கான தண்டனை பெறாமல் திமிராகத் திரிபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராடி வருகிறோம்.

pp

Advertisment

சரி, படத்திற்கு வருவோம். "பொன்மகள் வந்தாள்' வெளியீட்டுக்கு முன்பே கவனம் ஈர்த்த படம். இரண்டு காரணங்களுக்காக... ஒன்று, அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட இணைய வசதியை பயன்படுத்தி படங்கள், தொடர்கள் பார்க்கக்கூடிய ஞபப (ஞஸ்ங்ழ் ற்ட்ங் ற்ர்ல்) தளங்களில் நேரடியாக வெளியாகும் முதல் பெரிய தமிழ்ப் படம் என்ற கவனம். ஏற்கனவே சில தமிழ்த் திரைப்படங்கள் அப்படி வெளிவந்திருந்தாலும் சூர்யா, ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ் என பிரபல பெயர்கள் இருக்கும் திரைப்படம் இப்படி வெளியாவது இதுவே முதல்முறை. கொரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக திரை யரங்குகள் இயங்காத நிலையில், திரையரங்குகளுக் காகக் காத்திருக்காமல் நேரடியாக அமேசானில் வெளிவந்திருக்கிறது 'பொன்மகள் வந்தாள்'. இது தமிழ் சினிமா எடுத்துவைக்கும் மிகப்பெரிய அடி என்றே சொல்லலாம். அடுத்தகட்டம் இது. இன்னொரு காரணமும் கிட்டத்தட்ட இதேதான், இப்படி வெளியாவதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் தமிழ் சினிமா வணிகம் சார்ந்த பிறரும் வெளிப்படுத்திய எதிர்ப்புகள். இவ்வாறு தேவையான கவனம் கிடைத்து நல்ல ஓப்பனிங்குடனே வெளியாகி இருக்கிறது "பொன்மகள் வந்தாள்'.

கடந்த படத்தில் அரசு பள்ளிகளின் அவல நிலையையும் அதை மாற்றும் கலையையும் பேசிய "ராட்சசி' ஜோதிகா, இந்த முறை குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை பேசியிருக்கிறார். 2004ஆம் ஆண்டு, ஊட்டியில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதில் ஒரு குழந்தையை கடத்தும்போது காப்பாற்ற முயற்சி செய்த இரண்டு இளைஞர்களும் ஒரு பெண்ணால் கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளை செய்ததாக சொல்லப்படும் சைக்கோ கொலைகாரி வடஇந்தியப் பெண் ஜோதி, போலீ சால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறாள். பதினைந்து ஆண்டுகள் கழித்து அந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மனு அளித்து ஆஜராகிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா). அவருக்குத் துணை நிற்பவர் சமூக செயல்பாட்டாளர் "பெட்டி சன்' பெத்துராஜ் (பாக்யராஜ்). கோர்ட் விவாதம், தோண்டப்படும் நிகழ்வுகள் என தொடர, முடிவில் வெளிவருகின்றது அதிரவைக்கும் உண்மை. நடந்தவை சைக்கோ சீரியல் கொலைகள் அல்ல, பணத் திமிர் ஊறிய மிருகங்களின் பிஞ்சுகள் மீதான காமவெறியாட்டம். அதிகாரத்தாலும் பெரும் பணத்தாலும் அதை மறைத்து அப்பாவிப் பெண் மீது பழி போட்டு உயிர் பறித்த அராஜகம்.

[[

Advertisment

இந்தக் கதையிலிருந்து பெரிதாக விலகாமல் நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையின் மூலம் இரண்டு முக்கிய விஷயங்களை ஆணித் தரமாகப் பேசியிருக்கிறார்கள். ஒன்று, நம் சமூகத்தில் குழந்தைகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்கள். இரண்டு, மிகப்பெரிய குற்றங்களை செய்துவிட்டு, நீதியை தங்கள் பக்கம் வளைத்துவிடலாம் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியும் மிருகங்களின் திமிர், அதற்குத் துணை போகும் பெருந்தலைகளின் அட்டூழியம். இந்த இரண்டும் சமகாலத்தில் நாம் அதிகம் பார்க்கும் அநியாயங்கள். இந்த இரண்டு முக்கிய விஷயங்களோடு பல சமகால நீதி சார்ந்த பிரச்னைகளை பேசியிருக்கிறார் இயக்குனர் ஃப்ரட்ரிக். அவருக்கு நம் வாழ்த்துகள். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் என் பது, பொதுவாக தமிழ்த் திரையுலகம் தொடத் தயங்கும் விஷயமாகும். "காதல் கொண்டேன்', "அசுரவதம்' உள்ளிட்ட வெகு சில படங்களில் இது பேசப்பட்டிருக்கிறது. சொல்ல மறந்த இந்தக் கதையை சத்தமாக சொல்லியிருக்கிறார்கள். ""உங்க குழந்தைகிட்ட சந்தோசமான ஒரு தருணத்துல அக்கறையா நம்பிக்கையா பேசி கேட்டுபார்த்தீங் கன்னா தெரியும், உங்களுக்குத் தெரிஞ்ச எத்தனை பேர், அந்தக் குழந்தையிடம் தவறா நடந்துருக்காங் கன்னு'' என்ற அர்த்தத்தில் படத்தில் இடம்பெறும் வசனம் நம்மை அதிர வைக்கிறது, உண்மையை உணர வைக்கிறது. ""நம்ம பெண்குழந்தைகள் வளர வளர, இப்படி நடந்துக்கணும், இப்படி நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லித் தரும் நாம், ஆண் குழந்தை களுக்கு பெண்களிடம் இப்படி நடந்துக்கணும், மதிக்கணும்னு சொல்லித்தருகிறோமா?'' என்பவை நம் சிந்தனையை தூண்டும் வார்த்தைகள்.

ஜோதிகா... தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் சமூக அக்கறை மிகுந்த பாத்திரங்களாலும் அதில் தனது தேர்ந்த நடிப்பாலும் நிஜமான பொன்மக ளாக ஜொலிக்கிறார். அவரது வெறித்த பார்வையும் வறண்ட பேச்சும், "நான் ஒரு இரவு கூட நிம்மதியா தூங்குனது இல்ல' என்ற வார்த்தைகளும் அந்த வலியை நம்மை உணரவைக்கின்றன. படத்தில், தங்கள் திமிர் நிறைந்த வெறி தீர்க்க தனி பங்களா, கார் என சுற்றும் அந்தப் பணக்காரப் பொறுக்கிகளும் அவர்களின் திமிருக்குத் தீனி போட்டு வளர்க்கும் தந்தை பாத்திரமும் அவர்களுக்காக நீதியை வளைக்கும் அரசியல், அதிகாரக் கூட்டமும் நமக்கு பொள்ளாச்சியையும் நாகர்கோவிலையும் நினைவூட்டுகின்றன. நக்கீரன் வெளிக்கொண்டு வந்து, அவ்வளவு சான்றுகள் இருந்தும், சிபிஐ வரை சென்றும், நீதி கிடைக்காமல் திமிரோடு திரியும் அந்தக் கூட்டத்தை பார்க்கையில் மக்களுக்கு ஏற்படும் ஆத்திரமும் ஆதங்கமும் 'பொன்மகள் வந்தாள்' படத்தில் ஜோதிகாவின் வார்த்தைகளாக வெளிப் படுகிறது.

இத்தனை குற்றங்கள் வெளிப்பட்டும், ஆடியோ, வீடியோ என ஆதாரங்கள் சிக்கியும் கோர்ட்டில் செய்தி யாளர்களுக்கு ஹார்ட்டின் காட்டும் தைரியம் நாகர்கோவில் காசிக்கு எங்கிருந்து வந்தது என்பதும் படத்தில் கதையாக, காட்சிகளாக இருக்கிறது. இது தவிர வட இந்திய தொழிலாளர்கள் மீதான பார்வை, வழக்குகளை முடிக்க அவர்கள் பயன் படுத்தப்படுவது என பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது படம்.

pon

"குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளும், பொள்ளாச்சி விஷயம், நாகர்கோவில் காசி விஷயம் ஆகியவையும் ஒன்றா?', இந்தப் பெண்கள் அனை வரும் விருப்பத்துடன் சென்றவர்கள் தானே என்று (அ)நியாயம் சொல்பவர்கள், ""உன்னை நம்பி தான வந்தேன்...'' என்று பெல்ட் அடிகளுக்கிடையே கதறிய பெண்ணின் குரலை கேட்காதவர்களாக இருப்பார்கள், அல்லது கேட்க விரும்பாதவர்களாக இருப்பார்கள். பெண் பிள்ளைகளுக்கு இயல்பாக ஏற்படும் காதல் உணர்வையும், தனிமையில் இருக்கும் பெண்களின் சுயகழிவிரக்கத்தையும் தூண்டி அதன் மூலம் அவர்களை பயன்படுத்திக்கொண்டு, அதை படமாக்கி வைத்துக்கொண்டு மிரட்டி, பணம் பறிக்கவும் கொடுமை செய்யவும் தொடரும் இந்தப் பொறுக்கிகளும் கடுமையான நடவடிக்கை களுக்குத் தகுதியானவர்களே.

'மகளிர் மட்டும்'இல் சிறகு விரித்துப் பறக்கும் பிரபாவதி, "காற்றின் மொழி'யில் தனக்கென கனவுகள் காண, வாழ விரும்பும் பெண், 'ராட்சசி' ஆசிரியை என திரையில் மிளிர்கிறார் ஜோதிகா. அகரம் மூலம் செய்யும் சேவையும், அனிதா கொடுமை உள்பட பல சமூக அநீதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுப்பதும் என சூர்யாவின் சமூக அக்கறை நாம் அறிந்தது. தனது '2டி' நிறுவனம் மூலம் 'உறியடி 2'வில் தூத்துக்குடி துயரம் குறித்துப் பேசினார். தற்போது, "பொன் மகள் வந்தாள்', அடுத்ததாக விவசாயம் குறித்த ஒரு திரைப்படம் என திரை யிலும் லாபம் பார்க்க எண்ணாமல் சமூகம் சார்ந்து இயங்குகிறார். இப்படி சூர்யா, ஜோதிகா இருவரும் உதாரண தம்பதியராக உயர்ந்து நிற்கிறார்கள்.

லாஜிக் குறைகள், கோர்ட் விவாதம் சரியில்லை, உருவாக்கம் சரியில்லை என இணையத்தில் எழும் விமர்சனங்களை புறந்தள்ள செய்கிறது படம் பேசும் விஷயம். குறை கள் இருக்கின்றன, மறுக்கமுடியாது. ஆனால், அதைத்தாண்டி வீரியமுள்ளது பேசப்படும் கருப் பொருள். நிஜத்தில் நடந்த கொடுமைகள் அநீதிகள் ஜோதிகாவை பாதித்திருப்பது அவரது ஈடுபாடு நிறைந்த நடிப்பில் தெரிகிறது. ""நூறு பெண்களுக்கு மேல கொடுமை செய்தவங்ககூட உரிய தண்டனையில்லாம இருக்காங்களே'' என்று பொள்ளாச்சி சம்பவம் குறித்து அவர் பேசும் வசனத்தில் அவரது வேதனை வெளிப்படுகிறது. படத்தில், தாமதமாக வேனும் வெண்பாவுக்குக் கிடைக்கும் நீதி, நிஜத்திலும் உரியவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை படம் பார்ப்பவர்களுக்குள் உருவாக்கியதில் 'பொன்மகள் வென்றாள்'.

-வசந்த்