தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு விசா ரணையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி சுவாமிநாதன் அவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வழக்கில் பா.ஜ.க.வினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ள கல்விக்கூடம், 160 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த தூய இருதய மரியன்னை சபையால் தொடங்கப்பட்டது. ஏழ்மை நிலையிலுள்ள மாணவிகளின் நலன் கருதி 90 ஆண்டுகளாக விடுதியும் செயல்படுகிறது. பெண் கல்வியிலும், பெண் விடுதலை யிலும் சபையின் பங்களிப்பு முதன்மையானது. இப்பள்ளியில் பல மதங்களையும், சமூகத் தையும் சார்ந்த குழந் தைகள் படித்துவரு கிறார்கள்.
இக்கல்வி நிறு வனத்தின் செயல் பாடுகள் தொடர்பாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனருமான இனிகோ இருதயராஜிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
"தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை யில் நீதி வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் பின்வாங்கப் போவதில்லை என்கிறாரே அண்ணாமலை?''
சம்பவம் நடந்த மைக்கேல்பட்டி என்ற கிராமம், 163 வருடங்களுக்கு முன்னாடி ஒரு பின்தங்கிய கிராமப் பகுதியாக இருந்தது. அடுப்பூதும் ஏழை எளிய பெண்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு, எந்தவித லாப நட்டக் கணக்கும் பார்க்காமல் சேவை செய்ய வந்திருப்பவர்கள் தான் அந்த அருட்சகோதரிகள். இவர்கள் குறித்து குற்றம்சாட்டும் பா.ஜ.க.வினரிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். 163 வருடங்களுக்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சியினரோ அல்லது இந்துத்துவா அமைப்புகளோ கிராமப்புறங் களில் இதுபோன்று ஏதாவதொரு பள்ளியை நிறுவி பெண் கல்வியை ஊக்கப்படுத்தி னார்கள் என்று காட்டச் சொல் லுங்கள். 163 வருடம் பழமை வாய்ந்த பள்ளியில் எத்தனை ஆயிரம் மாணவிகள் படித்து இருப்பார்கள்? ஏதாவது ஒரு குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறதா?
தோலில் பிரச் சனை காரணமாக வீட்டினராலேயே ஒதுக்கிவைக்கப்பட்ட மாணவியை அரவணைத்து, 8-ஆம் வகுப்பிலிருந்தே எந்தவித பாரபட்சமும் பார்க்காமல், விடுதியில் எல்லா குழந்தைகளிடமும் ஒன்றாக பழகவிட்டு, பாசத்தோடு பார்த்துக் கொண்டவர் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரி சகாயமேரி. அந்த மாணவியின் பூப்புனித நீராட்டு விழாவைக்கூட பள்ளியிலேயே நடத்தி இருக்கிறார் அந்த அருட்சகோதரி. அவ்வளவு ஏன், அந்த மாணவிக்கு பள்ளிக் கட்டணத்தையும் அருட்சகோதரி தான் கட்டியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் எனக்கு பல கேள்விகள் எழுந்தன. அந்த மாணவி வீடியோவில் சொல்ல வைக்கப்பட்டது போல 2 வருடத்திற்கு முன்னரே அருட்சகோதரி மத மாற்றம் செய்ய சொன்னார்கள் என்றால், ஏன் அந்த மாணவியின் பெற்றோர் அதே பள்ளியிலேயே மீண்டும் சேர்த்தார்கள்? ஏன் 2 வருடத்திற்கு முன்னாடியே இந்த குற்றச்சாட்டை சொல்லவில்லை? இந்த வீடியோ எங்கே வைத்து எடுக்கப்பட்டது? வீடியோ எடுக்கும்போது யார் யார் உடன் இருந்தார்கள்? வீடியோவை பிட்டு பிட்டாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
அந்த பள்ளியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகள் தான் படிக்கிறார்கள். ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அங்கு படிக்கும் எல்லா மாணவிகளிடமும் விசாரித்தபோது, மத மாற்றம் என்ற பேச்சே எழவில்லை என்று அறிக்கை அளித்து விட்டார்கள். இரண்டாவதாக ஒரு வீடியோ வெளியாகி, மத மாற்றம் செய்யப்பட வில்லை என்று அந்த மாணவியே கூறிவிட்டார். அந்த கிராம மக்களே ஒன்று சேர்ந்து, மதமாற்றம் நடைபெறவில்லை, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பா.ஜ.க.வின் மத அரசியல், தமிழ்நாட்டில் எடுபடாது. உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத அரசியலை வைத்துக் கொள்ள வேண்டும்.
"நடிகை விஜயசாந்தி உட்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறாரே ஜெ.பி.நட்டா?''
நாங்கள் அமைதியாக இல்லை. அந்த கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் அருட்சகோதரி அவர்களைத் தொடர்பு கொண்டு சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறேன். தமிழக மக்க ளால் நிராகரிக்கப்பட்ட பாரதிய ஜனதா போன்ற ஒரு அரசியல் கட்சியினர் தான் இதை அரசியலாக்க வேண்டும் என்பதற்காகப் பெரிதாக்குகிறார்கள். பதிலுக்குப் பதில் பேசி மதக்கலவரம் உருவாகும் சூழ்நிலையை நாம் உருவாக்கக்கூடாது என்ற கருத் தின் அடிப்படையிலும், அரசு அதிகாரிகள், காவல் துறை, நீதிமன்றத்தின் விசாரணையிலும் இந்த வழக்கு இருப்பதாலும் தான் அமைதிகாத்தோம்.
ஆனால் ஜே.பி.நட்டா போன்றவர்கள் இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று முடிவெடுக் கும்போது தான் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற நிலையை நாங்களும் எடுத்துள் ளோம். கிறிஸ்தவ சமுதாயம் மீது அவதூறு ஏற் படுத்த வேண்டும் என்ற அவர்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக குழு அமைத்துள்ளார்கள். இது சிறுபான்மை கல்வி நிறுவனங்களை முடக்கக் கூடிய மிகப்பெரிய சதியின் முதல் முயற்சிதான்.
குழந்தைகள் மீது இவர்களுக்கு உண்மை யிலேயே அக்கறை இருக்குமென் றால், காஷ்மீரில் ஒரு இந்து கோவிலில் வைத்து ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்களே... உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூரிலுள்ள மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 மாதங்களில் இறந்து போனார்களே...
அதே மாநிலத்தில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம்... ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம்... கடந்த ஆண்டு விழுப்புரத்தில் ஒரு பெண்ணை, அதுவும் அவங்க கட்சியைச் சேர்ந்த மாவட்ட மகளிர் அணிச் செயலாளரையே பாலியல் வன்கொடுமை செய்த பாரதிய ஜனதா கட்சி யினுடைய மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுத் தார்களா? அதற்காக விசாரணைக் குழுவை அமைத்தார்களா?
கோயம்புத்தூரில் அவர்கள் நடத்துகின்ற ஒரு பள்ளியில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதே... கரூரில் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதே... சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி... கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி பள்ளி... மகரிஷி வித்யா மந்திர் போன்ற பள்ளிகளில் பள்ளிக் குழந்தைகள்மீது பாலியல் வன்முறை செய்தார்களே... அப்போதெல்லாம் இத்தகைய குழுவை அமைத்திருக்க வேண்டுமே? ஏன் அமைக்கவில்லை? மறந்து விட்டார்களா? இது முழுக்க முழுக்க மத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்பட்ட குழு. அந்த குழுவை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம்.
"கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என அண்ணாமலை பேசுகிறாரே?''
அவருடைய பேச்சு எப்போதுமே ஒற்றுமையை சீர்குலைக்கும் பேச்சு. மனநிலை திரிந்து பேசுகிறார். பல நேரங்களில், எதையாவது பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது அண்ணாமலையின் வழக்கம். எனவே அருடைய கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
"பெரும்பான்மையான சமூகத்தினர் படிக்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதச்சாயம் பூசாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகளை அந்த கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும்?''
ஏற்கனவே அந்த கல்வி நிறுவனங்கள் நடந்து வருவது போல தான் இனியும் நடக்க முடியும். இதுவரை எங்கு, எந்த மத மாற்றம் நடத்தப்பட்டது? மத மாற்றம் நடக்கிறது என்றால் ஏன் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் முன்பு மாணவர்கள் வரிசையில் நிற்கப் போகிறார்கள்? இல்லாத ஒன்றை ஒத்துக் கொள்ள முடியாது. சிறுபான்மை பள்ளிகள், கல்லூரிகள் பல நூற்றாண்டுகளாக நடக்கின்றன. 1881-ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிறிஸ்தவர்கள் எவ்வளவு பேர் இருந்தார்களோ, அதே அளவில் தான் இப்போதும் இருக்கிறார்கள். எனவே சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கல்விச்சேவை எப்போதும் போல தொடரட்டும்.