""ஹலோ தலைவரே, தேர்தல் நெருங்குற நேரத்தில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் பற்றி உங்க பார்வை என்ன?''’’
""தமிழ்நாடு கடனில் தத்தளிக்குதுன்னு ஓப்பனா சொல்லியிருக்காரு. இதற்கப்புறமும் 110 அறிக்கையில் இ.பி.எஸ். என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப்போறாரோ?''’’
""தலைவரே... கடன் சுமையால தமிழ்நாடு திவாலாகும் நிலைமையில் இருக்குதுன்னு கோட்டையில் உள்ள அதிகாரிகளே பேச ஆரம்பிச்சிட்டாங்க. போட்ட ரோட்டையே போடுறது, குடிமராமத்துங்கிற பேருல பணம் ஒதுக்கி கொள்ளையடிக்கிறது, கமிஷனுக்காகவே டெண்டர் விடுறதுன்னு கஜானாவை சுரண்டிட்டாங்களாம். அதோட தேர்தலை சாக்காக்கி ஏகப்பட்ட தள்ளுபடிச் சலுகைகளையும் வாரி வழங்கியிருக்கு எடப்பாடி அரசு. அதனால், அத்தியாவசியத் திட்டங்களுக்கும் கூட அது எங்கும் கடன்கூட வாங்க முடியாதபடி திவால் நிலையில் தவிக்கிதாம். அதனால் ரிசர்வ் வங்கியிடம் போராடி சிறப்பு கடன் அனுமதி வாங்கியிருக்குதாம்’’
""ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை, அ.தி.மு.க. வீடு தோறும் விளக்கேற்றி கொண்டாடச் சொன்னது. அ.ம.மு.க சைடில் வீட்டுக்குள்ளேயே விழா கொண்டாடப்பட்டிருக்கு.''’’
’""ஆமாம்பா, 24-ந் தேதி காலையில் முதல்வர் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெ.வின் சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெ. நினைவிடத்தில் மெழுகுச்சிலை கொண்ட கண்காட்சி கூடத்தைத் திறந்து வைத்தும் கொண்டாடியதை டி.வி.யில் பார்த்தேன்.''’
""தலைவரே, இதில் சசிகலா சைடு ட்விஸ்ட்டை இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். எதிர்பார்க்கலை. தி.நகர் வீட்டில் சைலண்ட்டாக ஜெ.’படத்துக்கு அஞ்சலி செய்துவிட்டு, தொண்டர்களிடமும் மீடியாக்களிடமும் பேசினார் சசி. வர்ற தேர்தல்ல அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எல்லோரும் தேனீ போல சுறுசுறுப்பாப் பாடுபடுங்கன்னு சொன்னப்ப, பக்கத்தில் இருந்த தினகரன் உள்பட பலரும் ஜெர்க் ஆனாங்க. அம்மா சொன்னபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. வலிமையோடு இருக்கணும்னு சசிகலா சொன்னார். ஜெ பிறந்தநாளை சசிகலா கொண்டாடியது பற்றிய செய்திக் குறிப்புகூட, அ.தி.மு.க கொடியுடன், கழகப் பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம்ங்கிற பேருலதான வெளியாகியிருக்கு.''’’
""சசிகலா கணக்கு என்ன?''’’
""கட்சி தன் வசம் வரணும்ங்கிறதுதான் அவர் கணக்கு. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வராவிட்டா லும், சைடு சப்போர்ட் அதிகரிக்கும்படி இருக்க ணும்ங்கிறதால, ஜெ. பிறந்தநாளில் பலரையும் தன்னை வந்து சந்திக்கும்படி வெயிட்டா அழைப்பு விடுத்திருக்கு சசிகலா தரப்பு. சசிகலாவைச் சுற்றி இப்ப இருப்பது டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேசன், வெங்கடேசின் மாமனார் பண்ணைவயல் பாஸ்கரன் உள்ளிட்ட ஒரு சிலர்தானாம். இவர்கள்தான் சசியின் நிறு வனங்களில் டைரக்டர்களாக இருக்கிறார் களாம். வசூல் மோசடி புகாரில் பண் ணைவயல் பாஸ்கரனை கட்சியிலிருந்து ஜெ. நீக்கியிருந்தார். இப்படிப்பட்டவர்களின் பிடியில் சசி இருக்கிறார்.''’’
""எப்படியிருந்தாலும் அவர் எதிர் பார்த்தபடி, சசிலாவை சந்திக்க அரசியல்+ சினிமா பிரபலங்கள் வந்திருந்தாங்களே?''’’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. அணியில் இருக்கும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சரத்குமார், தன் மனைவி ராதிகாவோடு சசியைப் போய்ச் சந்திச்சார். பின்னர் வெளியில் வந்து, ’"நன்றி மறப்பது நன்றன்று'ன்னு சொல்லிவிட்டுப் போனார். ஜெ இருந்தப்ப ச.ம.கவுக்கு 2 சீட் கொடுத்தது போல, இப்பவும் அதேதான்னு எடப்பாடி சொல்லியிருந்தாராம். அவருக்கு உறைக்கிற மாதிரியும், சீட் பேரத்தை அதிகப்படுத்தும் விதத்திலும்தான் தம்பதி சகிதமாக சரத்குமார், சசி வீட்டுக்கு வந்தாராம்.''’’
""இன்னும் பல பிரபலங்களும் வந்திருந்தாங்களே?''’’
""இயக்குநர் பாரதிராஜா, ஒரு மறத் தமிழச்சியை சந்தித்தேன்னு சொன்னார். இதே போல் நாம் தமிழர் கட்சி சீமான், கருணாஸ் உள்ளிட்டோரும் சசிகலாவை சந்திச்சிட்டுப் போனாங்க. இப்படிப் பலர் சந்திச்சி பரபரப்பை உண்டாக்கினாலும், தினகரன் அப்செட்டாதான் இருந்தார். அ.தி.மு.க.வை வலுப்படுத்தணும்னு சசிகலா சொன்ன நிலையில், தினகரனோ கட்சி அலுவலகத்துக்கு வந்து, அ.ம.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும்னு சொன்னார். சிறையில் இருந்தப்பவும், ரிலீஸ் ஆன பிறகும் சசி போடுற கணக்கை தினகரன் சிதைக்கிறாருன்னு முணுமுணுப்பு இருக்குது.''’’
""ஓ.பி,.எஸ்.சும் தினகரனும் நகமும் சதையுமா ஆயிட்டாங்கன்னு பேச்சு அடிபடுதே''’’
""சசிக்கு மறுபடியும் அதிகார கொடுக்கு முளைச்சா என்ன பண்றதுங்கிற பயத்தில்தான் ஓ.பி.எஸ்., தினகரன் நட்பை வலுவாக்கிக் கிட்டாராம். அதேபோல் தினகரனும், நாளை அ.தி.மு.க.வோடு ஐக்கியமாக நேர்ந்தால், நமக்கும் பலமான ஆளு வேணுமேன்னு தான் ஓ.பி.எஸ்.சோடு அட்டாச் ஆயிட் டாராம். இந்த நிலையில், தினகரனின் பி.ஏ.வாக இருக்கும் ஜனாவின் மனைவி இஷிகா, அண்மையில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். வழியாகப் போய்ச் சேர்ந்து, இளைஞர்- இளம்பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பை வாங்கிட்டா ராம். இந்த விவகாரம், எடப்பாடிக்கே லேட்டாத் தான் தெரிஞ்சிருக்கு. ஓ.பி.எஸ்-தினகரன் உறவின் விளைவுதான் இதுன்னு தெரிஞ்சு டென்ஷனாகியிருக்காரு எடப்பாடி.''’’
""தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மையமா வச்சி புதுப் புயல் கிளம்பியிருக்கே?''’’
""அதைப் பற்றி நான் சொல்றேன்.. அழகிரியும் அவர் குடும்பத்தினரும் சிதம்பரத்தில் காமராஜர் பெயரில் நடத்திவரும் கடல் சார் பயிற்சிக் கல்லூரியை, குழறுபடிகளைக் காரணம் காட்டி 5 ஆண்டுகளுக்குத் தடை பண்னியிருக்காங்க. இந்த நிலையில், இங்கு படிச்ச ஹரிகரசுதன் என்கிற மாணவர் அழகிரி தரப்பு மீது மோசடி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கின் மூலம் காங் கிரஸுக்கு செக் வைக்க பா.ஜ.க. விறுவிறுன்னு வேலை பார்க்குது. கே.எஸ்.அழகிரியோ, சட்ட விரோதமாக எங்கள் கல்லூரிக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதனால் நீதிமன்றத்தை அணுகி யிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும். அரசியல் பகைமை காரணமாக என் மீதும், எங்கள் கல்லூரி மீதும் களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்னு சொல்லியிருக்கிறார்''’’