தனக்கு வேண்டியவர்களை மட்டுமே கட்சிப் பதவிக்கு கொண்டு வருகிறார் என குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான தளவாய் சுந்தரத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் தொடங்கி ஒன்றிய, நகரச் செயலாளர்கள் வரை அத்தனை பேர்களும் எதிர்ப்பு. மேற்கு மா.செ. ஜான் தங்கம், கிழக்கு மா.செ. அசோகன் உள்ளிட்டவர்கள் கூட தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்களே. தற்போதைய உட்கட்சித் தேர்தலிலும் குமரி மாவட்டம் முழுக்க அவர் வைக்கிற நபர்தான் கட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும் என்கிற ர.ர.க்கள், தங்கள் பெயர் குறிப்பிடாமல் பேசினார்கள்.
டிச 15, மற்றும் 16ம் தேதிகளில் உள்கட்சி தேர்தல் நடந்தது. அதற்கு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மா.செ.வான மாஜி அமைச் சர் கடம்பூர் ராஜூம், தெற்கு மா.செ.வான சண் முகநாதனும் தேர்தலுக்கு முதல் நாளே வந்தவர்கள், தோவாளையிலிருக்கும் எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தைப் போய்ப் பார்த்திருக்கிறார்கள். அவுக மாவட்டத்துக்கான தேர்தல் அதிகாரியா, தளவாய்சுந்தரத்தையும், அவரோட ஆதரவாளர் பச்சைமாலையும் கட்சி நியமிச்சிருக்கு. அவுக சப்போர்ட் வேணுமில்ல. தூத்துக்குடி தெற்கு மா.செ. சண்முகநாதனுக்கு அவர் மாவட்டத்தில் உட்கட்சியில ரெண்டு தரப்பா பிளந்து நிக்காக. மாவட்டத்தப் பிரிக்கணும்னு ஒரு வருஷத்துக்கு மேலா கட்சித் தலைமைக்குப் நெருக்கடி குடுத்திட்டிருக்காக. இந்தச் சூழல்ல முறையா உட்கட்சித் தேர்தல் நடந்தா சண்முகநாதன் மா.செ.வா, நிச்சயம் வர முடியாது. இந்தத் தேர்தல்ல தன்னுடைய ஆதரவாளர்களப் பொறுப்புக்குக் கொண்டு வந்து, மா.செ.வாக் கிறலாம்கிற திட்டத்திலதாம் அதிகாரியச் சரிக்கட்டவே இப்படி தளவாய் சுந்தரத்திட் டச் சரண்டாயிருக்காக. தளவாய் நினைக்கிற படி குமரி மாவட்ட அ.தி.மு.க உள்கட்சித் தேர்தலை நடத்துவதும் இவங்க நினைக்கிறபடி தூத்துக்குடி மாவட்ட தேர்தலை நடத்து வதும்தான் இவங்களுக்கான ஒப்பந்தம்.
அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப, மத்தவுக வேட்பு மனுவ குறை சொல்லி நிராகரிச்சிட்டு வாங்காம, தளவாய்சுந்தரத்தோட ஆதரவாளர்க மனுவ மட்டும் வாங்கி அவுகளுக்கு பதவி வழங்க ஏற்பாடுகளச் செஞ்சு குடுத்திட்டுத் திரும்பியிருக்காக. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தலிலும். அந்த மாவட்டத்தின் மா.செ. சண்முகநாதன் சொல்லி வைத்தாற்போன்று, அவரது மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளரான ஆணையர் பச்சைமால் தேர்தல் நாளான டிச. 23க்கு 4 நாட்களுக்கு முன்பே வந்து விட்டார். மா.செ. சண்முகநாதனின் ஏற்பாட்டில் பச்சைமால் பானுபிருந்தா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார். அவருக்கு கேப்ஸி ஹோட்ட லில் சிறப்பான சாப்பாடு.
தேர்தல் நாளன்று தூத்துக்குடி மாநகரின் 60 வார்டுகளுக்கும், கட்சி, அமைப்புச் செயலாளரான சி.த.செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்களும் மாநகரின் மா.செ. பொறுப்புக்கு வந்த சண்முகநாதனால், கட்சியின் மூத்த முன்னோடிகளான 42 வார்டு கழக பொறுப்பாளர்களின் பதவி பறிக்கப்பட்டவர்கள் உட்பட, 60 வார்டுகளுக்கும் தங்களின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரான பச்சைமாலிடம் தாக்கல் செய்யப்போக, அதே சமயம் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் 60 வார்டுகளுக்கும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
ஏற்கனவே பேசப்பட்ட ஒப்பந்தப்படி சண்முகநாதனின் ஆதரவாளர்கள் 60 வார்டுகளிலும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கனைப் பெற்ற தேர்தல் பொறுப்பாளர் பச்சைமால், செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களின் வேட்பு மனுவில் அது சரியல்ல, இது சரியில்லை என்று சொல்லி மனுக்களை ஏற்க மறுத்து வாங்காமல் புறக்கணித்திருக்கிறார். இதனால் தேர்தல் மண்டபமான டி.எஸ்.எப். பிளாசாவில் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம். தேர்தலை முறைப்படி நடத்தணும்னு செல்லப்பாண்டியனும் அவரது தரப்பினரும் வலியுறுத்தினாங்க.
வெகுநேரப் போராட்டத்திற்குப் பின்பு மாலையில் செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்களுக்கு 15 வார்டுகள், மீதமுள்ள 45க்கும் மேற்பட்ட வார்டுகள் சண்முகநாதனின் ஆதரவாளர்களுக் கானது என்று தேர்தல் நடத்தப்படாம லேயே ஒதுக்கீடு செய்தார் தேர்தல் ஆணையர் பச்சைமால். இந்தத் தகராறு பற்றிய தகவல் ஓ.பி.எஸ்.சுக்குப் போக அவரும் உடனே பச்சைமாலையும் சண்முகநாதனையும் தொடர்புகொண்டு முறையாகப் போங்கன்னு கண்டித்திருக் கிறார். "அந்தம்மா இருந்தா இப்படி நடந்துக்குவாங்களா? சீட்டு கிழிஞ் சிருக்கும்'' என்கிறார்கள் ர.ர.க்கள்.
இது குறித்து நாம் சண்முகநாத னிடம் கேட்டபோது, "வேட்பு மனு வோட வந்தவங்களுக்கு ரசீது எல்லாம் போட்டுள்ளனர். ஒரு பிரச்சினையுமே வரவில்லை'' என்று சமாளித்தவர், "எங்க ஆளு ஒங்க ஆளுன்னு கட்சியில முக்கியமல்ல. வார்டுகள்ல பொறுப்புக்கள அவங்களே, கவுன்சிலர், வட்டப் பிரதிநிதி, பகுதி செயலாளர்னு பேசி, அவங்களே சமாதானமாப்போயிட்டாக. நான் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதி தேர்தல் அதிகாரியாப் போனேன் இங்க வந்தது கிழக்கு மாவட்டக்காரர்'' என்று சமாளித்தார்.
பதவிகளின் பாகப்பிரிவினை அ.தி.மு.க.வில் புயலை உருவாக்கியுள்ளது.