"ஹலோ தலைவரே, எதிர்க்கட்சிகளின் இந்தியா’ கூட் டணியின் மூன் றாவது கூட்டம் மும்பையில் ஒருவிதமாக நடந்து முடிஞ்சிருக்கு.''”
"பிரதமர் வேட்பாளரைத் தீர்மானிப் பதில் அவர்களுக்குள் திணறல் தெரியு தேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பனும்ங்கிற அழுத்தமான குறிக்கோளோடு உருவானதுதான் எதிர்க் கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணி. அதன் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இரண்டு நாள் நடந்தது. பல்வேறு விசயங்கள் இதில் விவாதிக்கப் பட்டாலும், நீங்கள் குறிப்பிட்டதுபோல், தங்களின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில், அவர்களுக்குள் சிக்கல் நீடித்தபடியே இருக்கிறது. பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிலைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்ப்பதோடு, வலியுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கு கூட்டணியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட் பாளராக ராகுலை முன்னிறுத்திய தி.மு.க.கூட இந்தமுறை அவருக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்க வில்லை.''”
"நிலைமையைப் பார்த்தால் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் நிறுத்தப்படலாம்ங்கிற கருத்து அரும்புதே?''’
"தி.மு.க. தரப்பில் அப்படி ஒரு நம்பிக்கை இப்போது ஏற்படத் தொடங்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே பிரதமரை தேர்வு செய்யலாம்னு இந்தியா’கூட்டணி யில் இருக்கும் கட்சிகள் நினைக்கின்றன. காரணம், மோடியை வீழ்த்த வேண்டும்; அதற்காக ராகுலை பிரதமராக ஏற்க முடியாது என்கிற மனநிலை இந்தக் கட்சிகள் சிலவற்றிடம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் இதற்காகவே ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய விரும்புகிறார்களாம். தமிழகத்தில் 40-க்கு 40 என அத்தனை இடங்களையும் தி.மு.க. கூட்டணி வெல்லுமானால், பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்குதான் ஏற்படும் என்று தி.மு.க.வில் இருக்கும் சீனியர்களும் இப்போது தாயக்கட்டைகளை உருட்டுகிறார்களாம். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியான ஆட்சியை நம்மால் தரமுடியும் என்றும் அவர்கள் முதல்வர் ஸ்டாலினிடமே சொல்லத் தொடங்கி இருக்கிறார்களாம்.''’
"அமைச்சர் உதயநிதியை பிரதமர் மோடி தரப்பு குறிவைக்கிதே?''
"சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்போம்ன்னு முழக்கமிட்டார். இதை இப்போது அகில இந்திய பா.ஜ.க.வில் இருக்கும் மோடி ஆதரவாளர்கள், இந்து மக்களுக்கும் இந்து தேசத்திற்கும் எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியின் குரலாக அதை சித்தரிக்க முயல்கிறது.''
"ஏனெனில் பா.ஜ.க.விலேயே மோடிக்கு இருந்த ஆதரவு குறைந்து வருகிறது. அடுத்த பிரதமர் வேட்பாள ராக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாவை நிறுத்த ஆர்.எஸ். எஸ். விரும்புகிறது. அதை பா.ஜ.க.வில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தனது இந்துத்துவா இமேஜை மேலும் உயர்த்திக்கொள்வதன் மூலம், மூன்றாவது முறையும் தானே பிரதமர் வேட்பாளராக ஆகிவிடவேண்டும் என்று மோடி இப்போது துடிக்கிறார். அதனால், இந்துத்துவாவுக்கு எதிராக ஒரு சின்னத் துரும்பு கிடைத்தாலும் அதை ஊதிப்பெரிதாக்கி, அதில் குளிர்காய மோடி தரப்பு நினைக்கிறது. அந்த வகையில்தான் சென்னையில் உதயநிதி பேசிய பேச்சை, ஒட்டுமொத்த இந்து மக்களுக்கு எதிரான குரலாக காட்டுவதற்காக, அவர் மீது டெல்லி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்துமத ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்த ’பலே பிளான்’ போடுகிறது மோடி தரப்பு.''
"இதே அலைவரிசையில இன்னொரு செய்தியையும் சொல்லியாகணும். தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மகன் மகேஷ்குமார் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வச்சப்ப மோடியையும், பா.ஜ.க. வையும் முதல்வர் வெளுத்து வாங்கிட்டாரு. "இந்தியா என்றாலே இன் றைக்கு நிறைய பேருக்கு பயம் உண்டாகிவிட்டது. "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் நிறைவேறினால் நாட்டில் எந்தக் கட்சியும் செயல்பட முடியாது. எல்லாம் ஒன்மேன் ஷோ ஆகிவிடும். "ஒரே நாடு ஒரே தலைவர்' அதிபர் என்று அவரே அறிவித்து விடலாம். தான் அதிபராக இருக்கவேண்டு மென்பதற்காக இப்படி ஒரு கேவலமான, அசிங்கமான சதித் திட்டத்தை தீட்டிக்கொண்டி ருக்கிறார்'னு நெத்தியடியா பேசியிருக்கார்.''
"நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவ விரும்புவதாக செய்தி கசிகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அகில இந்திய அளவில் மோடியின் செல்வாக்கு சரிந்துவருவதாக வும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கரையேறுவது கஷ்டம் என்றும் நடிகை குஷ்புவும் நினைக்கிறாராம். அதனால் இப்போதே அங்கி ருந்து அ.தி.மு.க. தாவிவிடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தாராம். இதற்காக எடப்பாடி மகன் மிதுன் மூலம் அவருக்குத் தூது விட்டாராம். அ.தி.மு.க.வில் சேர அவர் வைத்த டிமாண்ட் தொகை யைக் கேட்டு, திகைத்துப் போன எடப்பாடி, இப்போதைக்கு இங்கு வரவேண்டாம். நான் சந்தர்ப்பம் பார்த்து அழைக்கிறேன் என்று நழுவிவிட்டாராம். குஷ்புவை சேர்த் துக்கொண்டால் தங்களுக்கு எதிரான, பா.ஜ.க. அண்ணாமலையின் கோபம் மேலும் அதிகமாகும் என்பதாலும் எடப்பாடி தயங்குகிறார் என்கிறார் கள். எனினும் பா.ஜ.க.வில் இருக்கும் இன்னும் சிலர் அ.தி.மு.க. வில் சேர, டீலிங் பேசி வருகிறார்களாம்.''”
"மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்கும் நோக்கத்தில் தனது புரட்சிப் பயணத்தை தொடங்கியிருக் கிறாரே ஓ.பி.எஸ்.?''”
"ஆமாங்க தலைவரே, இந்த பயணத்தைத் தொடங்கும் முன்பாக நடிகர் ரஜினியை கடந்த 2 ஆம் தேதி ஓ.பி.எஸ். சந்தித்து ஆசி பெற்றார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்காக, இரண்டு வாரத்திற்கு முன்பே ரஜினியிடம் கேட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ரஜினியோ, நான் வட இந்தியாவில் இருக்கிறேன். ஏதேனும் முக்கியமான விசயமாக இருந்தால் இப்போதே சொல்லுங்கள்னு கேட்க, அதற்கு, அரசியல்ரீதியாக தங்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றிருக்கிறார் ஓ.பி.எஸ். அப்படியானால் சென்னை வந்ததும் அழைக்கிறேன் என்ற ரஜினி, அதன்படிதான் ஓ.பி.எஸ்.சின் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினாராம்.''”
"அப்படியா?''”
"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ், தன் வீட்டுக்கு வந்தபோது அவரை அன்போடு வரவேற்ற ரஜினி. தனது பிரத்யேக அறைக்கு அவரை அழைத்துச் சென்றாராம். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பின், ரஜினியின் "ஜெயிலர்' படம் பற்றி சிலாகித்துப் பேசிய ஓ.பி.எஸ்., 1980-களில் உங்களை சினிமாவில் எப்படிப் பார்த்தேனோ அதேபோல்தான் ஜெயிலரிலும் உங்கள் தோற்றத்தையும் வேகத்தையும் பார்த்தேன்னு ஏகத்துக்கும் பாராட்டியிருக்கிறார். அடுத்து எடப்பாடி பற்றி பேச்சு வந்தபோது, தன்னை நம்பியவர்களுக்கு துரோகம் செய்பவர் எடப்பாடின்னு சொன்ன ஓ.பி.எஸ்., என் விசயத்தில் எடப்பாடியும் பா.ஜ.க.வும் ஒண்ணுதான். இரு தரப்புமே என்னை ஏமாற்றிவிட்டதுன்னு வருத்தப்பட்டிருக்கிறார்.''”
"அப்புறம்...?''
"அ.தி.மு.க. தொண்டர்கள் எப் போதும் என் பக்கம்தான் இருக் கிறார்கள். எடப்பாடியிடம் இருப்பவர்கள் எல்லாம், அ.தி.மு.க. ஆட்சியில் சம்பாதித்தவர்கள். உண்மையான தொண்டர்கள் அங்கே இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்று திரட்டி, என் வலிமையைக் காட்டத்தான் இந்த அரசியல் பயணத்தை மேற்கொள்கிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் வேண்டும் என்ற ஓ.பி.எஸ். சந்தடி சாக்கில், தேர்தல் சமயத் தில் எனக்காக உங்களின் ஆதரவை தந்தால் பெரு மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்லிவிட்டு ரஜினியின் முகத்தைப் பார்த்திருக்கிறார். இதற்கு எந்த ரியாக்சனையும் காட்டாத ரஜினி, தேர்தல் அரசியலில் இப்போது எனக்கு உடன்பாடில்லை. உங்கள் பயணம் சிறக் கட்டும்ன்னு சொல்லி அனுப்பி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ். உற்சாகம் இல்லாமல்தான் ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்தார் என்கிறார்கள் அவர் தரப்பினரே.''”
"டெல்லி கண்டித்தும் கூட, பா.ஜ.க. அண்ணாமலை எடப்பாடித் தரப்பைத் தாக்குவதை மாற்றிக்கலையே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பேசிய அண்ணாமலை, ‘அ.தி.மு.க. மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்தியதாக எடப் பாடி மார் தட்டிக்கொள்கிறார். லட்சக்கணக்கான கூட்டம் வந்ததாக புரூடா விடுகிறார். என்னை பொறுத்த வரை, அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர் களில் 10 சதம் பேர்தான் அ.தி.மு.க. தொண்டர்கள். மற்றவர்கள் காசு கொடுத்து திரட்டப்பட்டவர்கள். இதனால் மக்களின் ஆதரவும் கட்சியின் ஆதரவும் எடப்பாடிக்கு இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. அதேபோல், எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வின் வோட் பேங்க் 1 சதவீதம் கூட அதிகரிக்கவில்லை.’ என்றெல்லாம் எடப்பாடியை டம்மி பீஸாகக் கருதி ஏகத்துக்கும் போட்டுத் தாக்கியிருக்கிறார். இது எடப்பாடி காதுக்குப் போக, அவர் பற்களை நற நறக்கிறாராம்.''”
"தமிழக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் உற்சாகம் கொப்பளிக்க முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறாரே?''”
"திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும், தமிழக பா.ஜ.க.வை சேர்ந்தவரான ’ஆன்மீக செம்மல்’டாக் டர் சங்கர் என்பவர், அக்கட்சியின் ப்ரோட்டகால் பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கிறார். அவர் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சிபாரிசில் தேவஸ்தான அறங்காவல் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்ட இவர், அண்மையில் தனது மனைவி மாலாவுடன் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலினை உற்சாகமாக சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார். முதல்வரை சந்திப்பதற்கு முன்பு, தங்கள் மாநிலத் தலைவரான அண்ணாமலையிடம் இது குறித்து சங்கர் பேச, எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை; சந்தியுங்கள் என்று அனுமதி கொடுத்தாராம். தி.மு.க.வினரோரு பா.ஜ.க.வினர் எவரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அடிக்கடி கூறிவரும் அண்ணாமலை, இதை எப்படி அனுமதித்தார் என்ற சர்ச்சை, கமலாலயத்தில் புகைகிறது.''”
"ஆவினில் சலசலப்பு தெரியுதே?''”
“"தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட் டில் இருக்கும் ஆவின் நிறுவனம், இப்போது தள்ளாடுவதாக அதன் ஊழியர்கள் கவலைப்படு கிறார்கள். ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்த ஆவின், இப்போது 27 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய் கிறதாம். இதனால், சென்னையின் பல பகுதிகளி லும் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு உண்டாகி இருக்கிறது. அதேபோல, ஆவின் தயாரிக்கும் வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், மோர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். காரணம் அதன் நிர்வாகம் இப் போது தள்ளாடுகிறதாம். இதை எல்லாம் சரி செய்யவேண்டிய துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் அமைதியாக இருக்க, அவர் பி.ஏ.க்களோ, கொள் முதலின் போது ஒரு லிட்ட ருக்கு 1 ரூபாய் வீதம் என கமிசன் வசூலிப்பதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனராம். மேலும் துறை அமைச்சராக ஆவடி நாசர் இருந்த போது விடப்பட்ட காண்ட்ராக்ட் விவகாரங்களிலும் இப்போது 10 சதவீத கமிசன் கேட்டு கெடுபிடி காட்டு கிறார்களாம்.''”
"தி.மு.க. ஊராட்சி தலைவர்களும் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்களே?''
"தமிழகத்தில் ஏறத்தாழ 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் தலைவர்களாக இருப்பவர்களில் 85 சதம் பேர் தி.மு.க.வினராகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் நிம்மதியாக நிர்வாகம் செய்யமுடியாமல் தவிக்கிறார்களாம். காரணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் தலையீடுகள் அதிகமாக இருக்கிறதாம். ஊராட்சிகளில் சாலை பணிகள் உள்பட எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், திட்ட மதிப்பில் 12 சதவீத கமிசன் அவர்களுக்குத் தர வேண்டும் என்றும் தாங்கள் சொல்கிற நபர்களுக்கே காண்ட்ராக்ட் வேலைகளைத் தர வேண்டும் என்றும் அவர்கள் டார்ச்சர் செய்கிறார்களாம். இப்படி சொந்தக் கட்சி நிர்வாகிகளாலேயே சங்கடத்தை அனுபவிக்கிறார்களாம்.''
"தி.முக. ஊராட்சி தலைவர்கள் உட்பட அவர்கள் தரப்பு, தங்கள் கூட்டமைப்பு சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தில் குதித்திருக்கிறார்கள்.''”
"என் காதுக்கு வந்த செய்தி ஒன்றைப் பகிர்ந் துக்கறேன்.''
"சி.பி.சி.ஐடி. யின் விசாரணை யில் இருக்கும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கைப் பொறுத்தவரை, அதில் இருக்கும் எஸ்.பி.முருகவேல் தலைமை யிலான டீம் ஓரளவு புலனாய்வில் ஆர்வம் காட்டினாலும் இன்னும் இதில் வேகத்தை எதிர்பார்க்கிறதாம் காவல்துறை தலைமை. எனவே இதற்குத் தலைமை தாங்கும் சி.பி.சி.ஐ.டி பிரிவின் ஐ.ஜி. தேன்மொழியை மாற்றிவிட்டு, அந்தப் பொறுப்பில் அன்பு ஐ.பி.எஸ்.சை, அமர வைக்கலாமா என்கிற ஆலோசனை நடந்திருக் கிறது. அதே சமயம் இவர் சென்னை அடிஷனல் கமிஷனராக இருந்தபோது இவர் மீது சில புகார்கள் வந்ததால், இன்னும் எஃபிசியண்ட் டான ஒரு அதிகாரியை அங்கே நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக் கிறது.''
________
இறுதிச் சுற்று!
செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை (04-09-2023) உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். செந்தில்பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பி.க் களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி, ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதனை விசாரிக்க ஏற்காமல், சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தது முதன்மை அமர்வு. ஆனால் சிறப்பு நீதிமன்றமும் ஏற்க மறுத்த நிலையில், ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்கிற சர்ச்சை எழுந்ததால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத் தை அணுகினார் செந்தில்பாலாஜி. இவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் "செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்படி, முதன்மை நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கின் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும். அவருடைய ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து, செந்தில்பாலாஜி தனது ஜாமீன் மனுவை முதன்மை அமர்வில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
-இளையர்