ஒரேநாளில் உலகம் தலைகீழாகப் புரளுமா?
புரண்டிருக்கிறது வினேஷ் போகத் விவகாரத்தில்.
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தார். வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடும் வினேஷ் போகத், தன் எடையைக் குறைத்து, 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றிருந்தார்.
வினேஷ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒலிம்பிக் நடப்பு சாம்பியனும் ஜப்பான் வீராங்கனையு மான யூயி சுசாகி, காலிறுதியில் உக்ரைன் வீராங் கனை ஓக்சனா லிவாச், அரையிறுதியில் கியூபாவின் யுஸ்னெய்லிஸ் கஸ்மன் லோபஸ் என வரிசையாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றதுடன் இந்தியர்களின் இதயத்திலும் இடம்பிடித் திருந்தார். இதனால் இந்தியாவுக்கு பாரிஸ் ஒலிம் பிக்கில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பதக்கம் உறுதியென பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டன. தவிரவும் இந்திய மல்யுத்தக் கூட் டமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் வினேஷ் துடிப்பாகப் போராடியதும், அதற்காக அவர் பா.ஜ.க. ஐ.டி.பிரிவைச் சேர்ந்தவர்களால் மோசமாக கேலி செய்யப்பட்டதும் தற்போது சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பகிரப்பட்டன.
இந்தநிலையில் அரையிறுதிப் போட்டி முடிந்து இறுதிப் போட்டிக்குத் தயாராகிவந்த போகத்தை, 50 கிலோவைவிட 100 கிராமுக்கும் அதிகமாக எடை அதிகமிருப்பதாகக் கூறி மல்யுத்த போட்டியிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, மல்யுத்தப் போட்டி விதி எண் 11-ன் கீழ் தகுதியிழப்பு செய்துள்ளது. அதெப்படி அரையிறுதி வரை சரியான எடையில் இருந்தவர், இறுதிப் போட்டிக்கு முன் எடை அதிகமானார்?
உண்மையில் போட்டிக்கு முன்பு வினேஷ் போகத் 1 கிலோவுக்கும் கூடுதலாக இருந்ததாகவும், முந்தைய நாள் இரவு உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், உறங்காமல் விடிய விடிய வினேஷ் ஸ்கிப்பிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு எடைக்குறைப்பில் ஈடுபட்டதாகவும், ஆனால் எடை சோதனையின் போது 150 கிராமுக்கும் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக அரை மணி நேரமளித் தால் அந்த எடையைக் குறைத்துக்காட்ட இந்திய ஒலிம்பிக் கமிட்டி அவகாசம் கேட்டதாகவும், சர்வதேச கமிட்டி அதனை நிராகரித்துவிட்டதென்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தின்பின்பு சதி இருப்பதாகவும், பிரிஜ் பூஷன் விவகாரத்தின்போதான போராட்டத்தை மனதில்வைத்து, திட்டமிட்டு பழிவாங்கப் பட்டிருக்கிறார் எனவும் குரல் கொடுத்தன.
"பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத், பா.ஜ.க. நபர்களால் சூழப்பட்டிருந்தார். பி.டி. உஷா, நீதா அம்பானி போன்ற பா.ஜ.க. ஆதர வாளர்கள் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் உயர் பதவிகளில் இருந்தனர்.
முட்டாள்களால் மட்டுமே, வெறும் எடைப் பிரச்சனை காரணமாக வினேஷ் போகத் தகுதியிழப்புக்கு ஆளானார் என நம்பமுடியும் '’என்பதுபோன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் காணமுடிந்தது.
வினேஷ் போகத், கடந்த ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியபோதும் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் வென்றபோதும் வாழ்த்துகளைப் பகிராத மோடி, வினேஷ் தகுதியிழப்புக்கு ஆளானதும் சுடச் சுட ஆறுதல் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார். அதில், "வினேஷ், நீ சாம்பியனுக்கெல்லாம் சாம்பியன். இந்தியாவின் பெருமிதம். ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வலியைத் தருகிறது. நான் தற்போது அனுபவப்படும் ஏமாற்றத்தை வெளிப் படுத்த வார்த்தைகள் இல்லை. இன்னும் வலுவா கத் திரும்பி வா! நாங்கள் எல்லோரும் உனக்காகக் காத்திருப்போம்'’என அதில் ஆறுதல் கூறியுள்ளார்.
அதேசமயம், வினேஷ் போகத் முந்தைய நாள் உணவருந்தாமல் எடையைக் குறைக்க, கடும் பயிற்சி மேற்கொண்டதால் நீர்ச்சத்துக் குறை பாட்டுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையீடு செய்யவுள்ளதாகவும், வினேஷுடன் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் பயிற்சியாளர்கள், பிஸியோதெரபிஸ்ட், டயட்டீஷியன் போன்றோர் எப்போதும் உடனிருந் திருப்பார்கள்தானே. அவர்கள் ஒவ்வொரு நாளும் வினேஷின் உடல் எடை உள்ளிட்ட பல்வேறு அம்சத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கவேண்டும். அதுதானே அவர்களுக்கான பணி!
அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பது வரை வரம்பு மீறாமலிருந்த வினேஷின் உடல் எடை, இறுதிப் போட்டிக்கு தயாராகும் வேளையில் திடீரென ஒரு கிலோவுக்கும் கூடுதலாக அதிகரித்தது எப்படி? அதனை பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கவனிக்காமலே விட்டது எப்படி? இறந்தகாலத்தை மனதில்வைத்து பழிவாங்கப்பட்டாரா வினேஷ் போகத்?
இந்த இடத்தில்தான் மர்மமும் இருட்டும் தொடர்கிறது!
தன் சோகத்திலும் ஏமாற்றத்திலும் இருந்து வினேஷ் போகத் மீண்டு வந்து ஏதாவது பேசினால்தான் என்ன நடந்தது என்பது தெளிவாகும்.