மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர்

-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

"என் தலைவர் மு.க. ஸ்டாலின். நீட் (மருத்துவ கல்வியில்) அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான நீண்ட சட்ட போராட்டத் தில், வெற்றி பெற்றமைக்கு நன்றி சொல்வோம். "வட இந்திய இதர பிற்படுத்தப் பட்ட (OBC தலைவர்கள் இவரிடம் பாடம் கற்க வேண்டும்' -என்று ட்விட் போட்டிருப்பவர் தமிழர் அல்ல, திலிப் மண்டல் என்ற வட இந்திய பேரா சிரியர். பிரபல பத்திரிக்கை யாளரும்கூட.

Advertisment

ss

முதுநிலை மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டு மென்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இதற்காக வழக்கறிஞர் வைத்து வாதாடிய இயக்கம் தி.மு.க. இந்த தீர்ப்பை வென்றெடுத்ததற்குத்தான் ட்விட்ட ரில் வட இந்தியர்கள் "My leader M.K.Stalin" "என்ற ஹேஷ்டேக்கோடு நன்றி தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள்.

உயர்நீதிமன்றத்தில் 27% இட ஒதுக் கீட்டை உறுதி செய்தபோதே, இதேபோன்று My leader M.K.Stalin என்றும் My Neta M.K. Stalin என்றும் பாராட்டி, நன்றி தெரிவித் தார்கள். இப்போது இரண்டாம் முறை.

இந்த வழக்கில் வென்றெடுத்ததன் மூலம் வட இந்திய பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதுகாவலராக உருவெடுத்திருக்கிறார் தமிழக முதல்வர். அதனையொட்டித்தான் வட இந்தி யர்களின் ட்விட்கள் அமைந்திருக்கின்றன.

இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரசியல் போராட்டம் நடத்துவது மாத்திரம் தான் அரசியல் கட்சியின் வேலை என்று இருந்து விடாமல் சட்டப் போராட்டமும் நடத்திய தால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இதுதான் தி.மு.க சமுதாய இயக்கம் என்பதற்கான அத்தாட்சி.

புரட்சியாளர் அம்பேத்கர் வடிவமைத்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வந்ததே தமிழர் தந்தை பெரியார் அவர்களால் தான். சென்னை மாகாணத்தில், நீதிக் கட்சி வழங்கிய சாதி வாரி இட ஒதுக்கீட்டை, இந்திய அரசு மறுத்த போது தந்தை பெரியார் போராட்டத்தில் இறங்கினார். தமிழகம் பொங்கி எழுந்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. சமூகநீதி காக்கப்பட்டது.

இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு என்று இட ஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தவும் தலைவர் கலைஞர்தான் தேவைப்பட்டார். அன் றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் மண்டல் கமிஷன் அறிக்கையின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது.

Advertisment

shivasankar

இன்றைக்கு உயர் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட் டை தமிழகத்தின் முதல்வர் வென்று கொடுத்த தன் மூலம், இந்தியாவின் சமூகநீதிக்கு பாது காவலர்கள் தமிழக தலைவர்கள் தான், திரா விடத் தலைவர்கள் தான் என்பது உறுதிபடுத் தப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதைவிட, அடுத்து என்ன பணிகள் இருக்கின்றன என்றுதான் முதல்வர் பட்டியலிட்டிருக்கிறார்.

"அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் 100% இடங்களை நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும்'. இந்த அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவ கல்லூரி இடங்களை மாநிலங்கள் ஒதுக்க வேண்டும் என்பதே உரிமை மீறலாகும். அதை எதிர்த்து குரல் கொடுத்து மாநில சுயாட்சிக் குரலை மீண்டும் ஓங்கி ஒலித்திருக்கிறார், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்தே.

"பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அரசியல்சட்டத்துக்கு எதிரானது'' என்றும் வலியுறுத்தி உள்ளார். சமூகநீதியை வலி யுறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மழுங்கடிக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் ஒன்றிய அரசை இதன்மூலம் எச்சரித்துள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்வரும், மாநிலக் கட்சியின் தலைவரும் இந்தக் குரலை எழுப்பவில்லை. அவர்களுக்கும் சேர்த்து குரல் கொடுக்கிற தலைவராக நமது முதல்வர் திகழ்கிறார்.

"நடக்கவுள்ள விசாரணையின் போதும், அரசியல் சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும் 10% இட ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து தி.மு.கழகம் அநீதியை முறியடிக்கும்" என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியின ருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப் பட்டோருக்கு மாத்திரம் எதிரானது அல்ல, இது பட்டியலினத்தவருக்கும் எதிரானது தான். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவரை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், 10% EWS இட ஒதுக்கீட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் குறுக்கு வழியில் நுழைகிறார்கள், இடத்தை தட்டிப் பறிக்கிறார்கள்.

நீட் தேர்வில் மெல்ல, மெல்ல இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம் நிறைவேறும்போது, பட்டியலினத் தவருக்கு பேரிழப்பு ஏற்படும். அதனால் இப்போதிருந்தே 10% ஊரந ஒதுக்கீட்டையும், நீட் தேர்வையும் எதிர்த்தால்தான், சமூக நீதியைக் காக்க முடியும். அதைத்தான், தமிழக முதல்வர் சரியாக முன்னெ டுக்கிறார்.