ள்ளியைப் பார்வையிடச் சென்றனர். அவர்களை வரவேற்று உபசரித்த பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, தனது பங்களிப்பாக ரூ.35 ஆயிரம் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதையடுத்து, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள கொடையாளர்களிடம் நிதி திரட்டி, புள்ளாச்சி குடியிருப்பு பள்ளி 8 மாதங்களில், புது மின்விசிறிகள், சுவரோவியங்களெனப் பலவகைகளில் புதுப்பிக்கப்பட்டு, 2023 ஜனவரி 7ஆம் தேதி, அமைச்சர் மெய்யநாதனால் திறந்துவைக்கப்பட்டது. பள்ளியைக் கடந்த 8 மாதங்களாகப் புதுப்பித்த விதத்தை 5 நிமிட வீடியோவாக ஓடவிட்டுக் காட்டியதைப் பார்த்து, தான் போட்ட விதை, துளிர்த்திருப்பது கண்டு அமைச்சர் மெய்யநாதனும் மெய்சிலிர்த்தார்.

ss

சின்னத்துரை எம்.எல்.ஏ. பேசுகையில், "ஆலங்குடி தொகுதியில் கீரமங்கலம், கொத்த மங்கலம், வடகாடு பகுதியைப் பார்த்து மற்ற பகுதிப் பள்ளிகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருகி றோம். 8 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கொடுத்த சிறு நிதியோடு, பலரும் கைகோர்க்க, தற்போது சிறப்பான மாற்றத்தைப் பார்க்கிறேன். பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களின் முழு உழைப்பும் வியப்பைக் கொடுத்திருக்கிறது'' என்றார்.

Advertisment

ss

அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "பள்ளி ஆண்டு விழாவில் மாணவியின் மூலமாக ஸ்மார்ட் போர்டுக்கான கோரிக்கை வைத்தார்கள். அப்போது என்னிடமிருந்த சிறு தொகையைக் கொடுத்தேன். அதை மூலதனமாக்கி, முதலமைச்சரின் "மை ஸ்கூல்' திட்டத்தில் இன்று இத்தனை லட்சங்களை பெற்று பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியின் வழிகாட்டுதலோடு, மற்றுமொரு முன்மாதிரி அரசுப்பள்ளியை உருவாக்கியுள்ளார்கள். இதுபோல ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மாறவேண்டும்.

அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் "மை ஸ்கூல்' என்ற உன்னதத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் வழிகாட்டுத−லில் மேலும் சுமார் 10 பள்ளிகள் கட்டமைப்புகள் மாற்றப்படுவதாகக் கூறினார்கள். அந்தப் பள்ளிகளுக்கும் அரசு உதவிகள் கிடைக்க செய்வேன்'' என்றார்.

Advertisment

ss

பச்சலூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி நம்மிடம், "நான் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பொதுமக்களிடம் நிதி பெற்று, நமக்கு நாமே திட்டம் மூலம் பல்வேறு வசதிகளைக் கொண்டுவந்தேன். இந்த பச்சலூர் பள்ளிக்கு வந்ததும் பொதுமக்களின் பங்களிப்பில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். அதுகுறித்து, "ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்து பாருங்கள் முதல்வரய்யா' என்று நக்கீரன் மூலம் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதான் முதலமைச்சரின் "மை ஸ்கூல்' திட்டம். இந்நிலையில், எங்கள் பள்ளியைப் பார்வையிட்டபின் பணிகளைத் தொடங்கி, புள்ளாச்சிகுடியிரும்பு புதுப்பொ−லிவு பெற்று விட்டது. அதேபோல், அழியாநிலை நடுநிலைப் பள்ளியில் பொதுமக்களின் பங்களிப்பான சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கிறது. இதேபோல் இன்னும் சில பள்ளிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன'' என்றார். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது இதுதானே!