எஸ். கதிரேசன், பேர்ணாம்பட்டு
தெலுங்கானா வின் பெருமைக்கும், குஜராத்தின் ஆணவத் துக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருக் கிறாரே?
மக்களை ஈர்ப் பதற்கான எளிதான ஒரு வழி, அவர்களை ஒரு அடையாளத்துடன் பிணைப்பது. இந்துத் துவத்தை தனக்கான வழியாக வைத்திருக் கிறது பா.ஜ.க. தெலுங்கர் என்ற இன அடையாளத்தைக் கையில் எடுக்கிறார் தெலுங்கானா முதல்வர். எந்த அடையாளத்திலும் சிக்காமல் சிந்தித்து வாக்களிக் கும்போது மட்டுமே உண்மையான ஜனநாயகம் சாத்தியம்.
மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் புதிய முறையை பா.ஜ.க. ஆரம்பித்து வைத்திருப்பது பற்றி?
குஜராத் சூரத் வேட்பாளர், மத்தியப்பிரதேச இந்தூர் வேட்பாளர் என எதிர்க்கட்சியின் வேட்பாளர் களை விலைபேசி வாங்கி குறுக்குவழியில் ஜெயிப்பது ஜனநாயகமும், நேர்மையும் அழுக ஆரம்பித்திருப்பதன் அடையாளம். கூடவே, மத்தியப்பிரதேசத்தில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் வளைத்திருக்கிறது பா.ஜ.க. இந்தூர் மக்கள் பெருவாரியாக நோட்டாவுக்கு வாக்களிக்க கோரிக்கை விடுத்திருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க.விடம் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் கோடிகளும் அதிகாரமும் இதைச் சாத்தியமாக்குகிறது. மக்கள் விழித்துக்கொண்டு இத்தகையவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ராகுலைப் பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது எனும் மோடியின் குற்றச்சாட்டு?
இந்தத் தேர்தல் தொடக்கம் முதலே தனது சொந்த சாதனையைப் பேசுவதற்குப் பதில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை குற்றம்சாட்டுவது, ராமர் கோவிலுக்கு யார் வரவில்லை என பட்டியலிடுவது என மற்றவர்களின் முதுகிலிருக்கும் அழுக்கைச் சுரண்டும் வேலையைத் தான் பா.ஜ.க. செய்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினர் முதுகில் அழுக்கு மலையே எழுந்து நிற்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மோடி சுதாரித்தால் நல்லது.
ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
தன்னை ஜெயலலிதாவாக பாவித்து அறிக்கை விடும் சசிகலா என்ன ஆனார்?
ஜெயலலிதாவுடன் இருந்தவரை சசிகலா மற்றொரு ஜெ.வாகவே திகழ்ந்தார். அவர் கண்ணசைவுக்குக்கூட அ.தி.மு.க.வினர் கைகட்டிநின்றனர். காலம், அற்புதமான ஆசிரியன். அவரின் உண்மையான அதிகாரம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறது. சிறை சென்று வந்தபின்பு நிலைமை மாறிப்போயிருப்பது அவரை பதறச் செய்கிறது. யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது யாருக்கும் சிரமம்தான். ஆனால் ஏற்றுக்கொள்வது அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
எலான் மஸ்க் இந்தியாவுக்கு வராமல் சீனாவுக்குச் சென்றது குறித்து?
தேர்தலுக்கு நெருக்கத்தில் இந்தியாவுக்கு எலான் மஸ்க்கை வரவழைத்து அவரது டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தை தொடங்குவதற்கான அறிவிப்பையாவது செய்து, அதில் மைலேஜ் தேடநினைத்தது பா.ஜ.க. அரசியல்வாதியைவிட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள் கார்ப்பரேட்டுகள். கணக்குவழக்குகளைப் போட்டுப் பார்த்து இந்தியாவைவிட சீனாவில் முதலீடு செய்வது லாபமென நினைத்து சீனாவைத் தேடிச்சென்றிருக்கிறார் எலான் மஸ்க். மோடி வித்தை, மஸ்க்கிடம் செல்லுபடி யாகவில்லை.
பா.ஜெயப்பிரகாஷ் அரண்மனைப்புதூர்
காலிஸ்தான் அமைப்பின் ஷர்தீபசிங் நிஜ்ஜா கொலைபற்றி செய்தி வெளியிட்டதால்தான் பா.ஜ.க. அரசு விசா நீட்டிப்பு செய்ய மறுத்ததாக ஆஸ்திரேலிய நிருபர் அவனி தியாஸ் குற்றம்சாட்டியிருக்கிறாரே?
அவனி தியாஸை விடுங்கள். நான் வேறு இரண்டு செய்திகள் சொல்கிறேன். 2024-ல், 180 நாடுகளைக் கொண்ட நாடுகளின் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 159. 2014-ல் இந்தியாவின் இடம் 141. உலக அளவில் இணைய இணைப்பை தடைசெய்வதில் 2023-ல் இந்தியா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 2019-ல் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டவுடன் அங்கே பெரும் நெருக்கடிக்குள் ளானது பத்திரிகை அலுவலகங்களும், பத்திரிகை யாளர்களும்தான். அவனி தியாஸ் நியாயமாகத்தான் வெளியேற்றப்பட்டிருப்பாரா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.
இரா.முனியராஜ், புல்லங்குடி
2014-ல் நம்பிக்கை, 2019-ல் உறுதியான உணர்வு, 2024-ல் உத்தரவாதத்தைக் கொண்டு வருகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறாரே?
காகிதத்தில் தேன் என்று எழுதி நக்கினால் இனிக்குமா? மோடியின் நம்பிக்கை, உறுதி உணர்வு, உத்தரவாதம் எல்லாம் அத்தகையதுதான். மோடி புலிதான். ஆனால் காகிதப் புலி. அவருடைய மகத்தான சாதனை என்னவென்றால், எந்த இந்தியப் பிரதமரும் நினைத்துப் பார்க்கமுடியாத ஆயிரக்கணக்கான உடைகளை அணிந்து, பல லட்சம் புகைப்படங்களை எடுத்து ஊடகவெளியை நிறைத்ததுதான்.