மே 25-ஆம் தேதி மதிய நேரம். வெய்யில் கடுமையாக இருந்தது. அப்போது... "ஐயோ... என்னைக் காப்பாத் துங்க...'”-என்ற ஒரு பெண் ணின் குரல், அந்தப் பகுதி யையே அதிரவைக்க...

அக்கம்பக்க வயல்களில் இருந்த ஆண்களும் பெண்களும், குரல் வந்த திசை நோக்கிப் பதட்டமாய் ஓடினர்.

nn

Advertisment

தூரத்தில், தரையில் கிடந்த அந்தப் பெண்ணை, கையில் கத்தியுடன் இருந்த ஒரு இளைஞன், தரதரவென புதர்களை நோக்கி இழுத்துச்செல்லும் காட்சி அவர்கள் கண்களில் தென்பட...

"டேய்... டேய்...'’என்று குரல் எழுப்பியபடியே அந்த இடம் நோக்கி ஓடினர். இதைக் கவனித்து விட்ட அந்தக் கொடூரன், அப்படியே அந்தப் பெண்ணைப் போட்டு விட்டு, ஓட்டம் பிடித்தான். அருகில் சென்று அவர்கள் பார்த்த போது... முகமெங்கும் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் அந்த இளம்பெண். அருகில் அந்தப் பெண்ணின் ஹேண்ட்பேக்கும், பக்கத்தில் இருசக்கர வாகனம் ஒன்றும் இருந்தது.

இதைக் கண்டு பதட்டமானவர்கள், கரு வேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி கிராமத்தின், வெள்ளாற்றுக்குச் செல்லும் வழியில், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் நடந்தது.

dd

Advertisment

ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் டீம், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. பின்னர் அங்கிருந்த மருத் துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் அவளை புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திக் குதறப்பட்ட அந்தப் பெண், குறிஞ்சிப்பாடி அருகே யுள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத் தைச் சேர்ந்த மதியழகனின் இரண்டாவது மகள் ரம்யா கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. பி.எஸ்.சி முடித்த ரம்யாவுக்கு வரும் 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தான், இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது.

மாவட்ட எஸ்.பி. சக்திகணேஷ் உத்தரவின் பேரில், போலீஸ் டீம் விறுவிறுப்பாகக் களமிறங்கியது. அந்த வாகனம், கார்மாங்குடியைச் சேர்ந்த அம்பலவாணன் என்பவரின் மகன் ஸ்ரீதருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர். அதற்குள் தலைமறைவாகிவிட்ட ஸ்ரீதரை, விடிய விடியத் தேடி மறுநாள் அதிகாலையில், நெய்வேலி அருகேயுள்ள தொப்புளிக்குப்பத்தில் இருந்த அவன் பாட்டி வீட்டில் மடக்கினர். அப்போது மதுபோதை யில் இருந்த அவன், திடீரென்று தன் கைகளை பிளேடால் கிழித்துக் கொள்ள... அவனை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்துவிட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

dd

இதுகுறித்து விசாரணை டீமிடம் நாம் விசாரித்தபோது..

"ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டி ருந்தபோது, அங்கு படித்த ஒரு மாணவியின் மூலமாக, ரம்யாவுடன் நட்பாகி இருக்கிறான். அதன்பின் ரம்யாவைக் காதலிப்பதாகச் சொல்லி யிருக்கிறான்.

இந்த நிலையில் ரம்யாவிற்கு திருமண ஏற்பாட்டில் அவரது குடும்பத்தினர் இறங்கியதால், தனக்குக் கிடைக்காத ரம்யா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது எனத் திட்டமிட்டு, கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறான் ஸ்ரீதர். அதன்படி ரம்யாவைத் தொடர்பு கொண்டு, 'கடைசியாக உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும்'’ என்று அவன் கூற. அவனை நம்பி வந்த ரம்யாவை வெள் ளாற்றுப் பகுதிக்கு அழைத்து வந்து ஸ்ரீதர், திடீரெனக் சுத்தியால், குத்திச் சாய்த்திருக்கிறான்''’என்றார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களை நாம் தேடிப்பிடித்தபோது ”"ரம்யா கிருஷ்ணன் மிகவும் பொறுப்பானவள். திருமணத்திற்கு அவள் முழு சம்மதம் தெரிவித்த பின்புதான் நாங்கள் ஏற்பாடு செய்தோம். குறிஞ்சிப்பாடிக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற எனது மகளை, அங்கிருந்து சிலர் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள்.

இதில் முறையான விசாரணை நடத்த வேண்டும். எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கொடுமைபோல் வேறு எவருக்கும் ஏற்படக்கூடாது''’என்று கதறினர்.

ஏரியாவாசிகளோ “"தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒரு ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர். தாக்குதல் நடத்திய இளைஞன் வேறொரு சமூகம். அந்தப் பெண்ணை பா.ம.க. வினர் சிலர் கடத்திச்சென்றதாகத் தகவல். இந்த நிலையில்தான் அந்தப் பெண் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறாள். குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குறிஞ்சிப்பாடியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அடுத்தநாள் கடலூரில் காவல்துறை நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் பிரச்சினை சுமுகமானது. ஆனாலும் அந்தப் பெண் குணமாகி வரும்வரை விவகாரம் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருக்கும். தொடர்ந்து இந்தப் பகுதியில் இதுபோன்ற கொடுமைகள் அரங்கேறி வருகின்றன''’என்கிறார்கள் அதிர்ச்சி மாறாமல்.

மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சக்திகணேஷிடம் இது குறித்துக் கேட்டபோது, "பிரச்சினையின் தன்மை தெரிந்ததுமே உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்று விசார ணையைத் துரிதப்படுத்தி, இரவோடு இரவாக குற்ற வாளியைக் கைது செய்தோம்.

அந்தப் பெண் நார்மல் ஆன பிறகு வாக்குமூலம் பெற்று, மேல் நடவடிக்கை எடுப்போம்''”என்றார் அழுத்தமாக.

முன்னாள் அரசு வழக் கறிஞர் செல்வப்பிரியாவோ, "காதலிக்க மறுக்கும் பெண்களைப் பழிவாங்க பாலியல் பலாத்காரம் செய்வது, கூட்டு பலாத்காரம் செய்வது, கத்தி யால் குத்துவது, அரிவாளால் வெட்டுவது, ஆசிட் வீசுவது என கொடூரங்களை அரங் கேற்றுவது தொடர்கதையாகி வருகிறது. இதை இன்றைய சினிமாவும், தூபம் போட்டு வளர்க்கிறது. இவற்றைத் தடுக்க பெண்கள் விழிப்படைய வேண்டும்''’என்கிறார் அழுத்தமாக.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது, தாமதமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரபாண்டியன்