மிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என கேரக்டர் எதுவாக இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவிடக்கூடியவர். அதேநேரம், சமூகம் மற்றும் அரசியல் குறித்த தனது பார்வைகளை பொதுவெளியில் வைக்கத் தயங்காதவர். அந்தவகையில், திரைத்துறையினருக்கு உதவும் வகையிலான ஒரு கோரிக்கையுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அண்மையில் சந்தித்துள்ளார் விஜய்சேதுபதி.

cinema

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் தாரா, சமந்தா ஆகியோருடன் விஜய்சேதுபதி நடித்துவரும் "காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மை யில் புதுச்சேரியில் நடந்தது. அப்போது, நடிகர் விஜய்சேதுபதி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில், புதுச்சேரியில் படப்பிடிப்பிற்கான அனுமதி கட்டணம் குறைப்பது குறித்து அவர் கோரிக்கை வைத்தார். முன்னர், புதுச்சேரி யில் சினிமா படப்பிடிப்பிற்கு ஒருநாள் கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ரூ.28 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இந்தக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி அவருக்கு உறுதியளித்துள்ளதாகத் தகவல்.

வாட்ஸ் அப் with பிரசன்னா

Advertisment

யக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா தயாரிப்பில் அண்மையில் வெளியான 'நவரசா' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் வெளியாகியிருந்த "ப்ராஜெக்ட் அக்னி' பலரையும் கவனிக்க வைத்தது. இப் படத்தினை பார்த்த ரசிகர்கள், "இத னை ஒரு முழுநீள படமாக எடுக்க வேண்டும்' எனச் சொல்லிவருவதி லேயே இதன் வெற்றியை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில், "ப்ராஜெக்ட் அக்னி' கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரசன்னாவுடன் இதுகுறித்து சிறிய உரையாடலை மேற்கொண்டோம்.

cinema

மணிரத்னம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, மீண்டும் தற்போது அவரின் ஒரு புதிய முயற்சி யில் பங்கேற்பது எப்படி இருக்கிறது, இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது எனக் கேட்கையில், "முதல் படம் ஃபைவ் ஸ்டார், மணிரத்னம் தயாரிப்பில் அமைஞ்சது போல ஒரு பெரிய அதிர்ஷ்டம். நான் வேற எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன்பிறகு அவரோட எல்லா படத்துலயும் என்னோட ஒரு சின்ன பங்களிப்பு இருந்துகிட்டே இருக்கும். "ராவணன்' படத்துல ஒரு கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்திருப்பேன். அவரோட சில சமூக முயற்சிகளுக்கு என்னோட பங்கு இருந்திருக்கு. "மெட்ராஸ் டாக்கீஸ்'-ல இருந்து எப்போ எதுக்கு கூப்பிட்டாலும் நான் போவேன், பண்ணுவேன். அது எனக்கு சந்தோசம் கொடுக்குற ஒரு விஷயம். அப்படியிருக்கும்போது, கோவிட் டைம்ல பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு உதவி பண்ற வகையில மணிரத்னம், ஜெயேந்திரா ரெண்டு பெரும் எடுக்குற ஒரு முயற்சியில பங்கு எடுத்துக்கிட்டதே சந்தோஷம்.

"நவரசா' படத்துல யாருக்கு என்ன எமோஷன் கொடுத் திருக்காங்க, யார் என்ன பண்றாங்கன்னு யாருக்கும் எதுவும் தெரியாது. அதுல கார்த்திக் நரேனுக்கு "அற்புதம்' அப்படிங்கிற உணர்வை கொடுத்துருந்தாங்க. அதுக்கு கார்த்திக் தேர்ந்தெடுத்த கதை ஒரு சயின்ஸ் ஃபிக்சன். இது எல்லாம் முடிவான பிறகு, கார்த்திக் என்கிட்ட பேசும்போது, "இத பண்ணலாமான்னு எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. ஆனால், அவர் கதையை முழுசா சொன்ன பிறகு, அற்புதம் அப்படிங்கிற உணர்வுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போகுற ஒரு கதையா இது இருந்துச்சு. படம் முழுக்க சொல்ற ஒவ்வொரு விஷயமும், உரையாடலும் நமக்கு ஆச்சரியமா இருக்கும். ஜோசியம், டைம் ட்ராவல் இதையெல்லாம் நாம நம்புறோமோ இல்லையோ, அதை பத்தி பேசும்போது ஒரு ஆச்சரியம் ஏற்படும். அதுவே எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. அதுக்காகவே இத பண்றதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். அரவிந்த்சாமிக்கு ஆப்போஸிட்டா இந்த கேரக்டர் நான் பண்ணினா நல்லாருக்கும் அப்டின்னு நம்பி, என்கிட்ட வந்த கார்த்திக் நரேனுக்கு நன்றி சொல்லணும்'' என்றார். "ப்ராஜெக்ட் அக்னி படத்துல பெரும்பாலும் ஆங்கில வசனங்களாகவே இருக்கே ஏன்?'' எனக் கேட்கையில், "இந்தப் படத்துல பேசியிருக்க நிறைய விஷயங்களை எப்படி தமிழ்ல சொல்றதுன்னு தெரியல. படத்தோட கதை எழுதும்போதே, எல்லாமே இயற்கையாவே ஆங்கிலத்துல வந்துடுச்சு. படத்தை எடுத்துட்டு போயிட்டு, மணிரத்னம் கிட்ட காட்டும்போது, "ஃபுல்லா இங்கிலிஷ்ல இருக்கே. இதுல கொஞ்சமாவது தமிழ் வரணும்'' அப்படின்னு சொல்லிட்டார். சரின்னு, எங்களால முடிஞ்ச இடத்துல எல்லாம் வசனங்களை தமிழ்ல எழுதி, திரும்ப ஷூட் பண்ணினோம். இதுல தமிழை அவாய்ட் பண்ணணும்னு எண்ணம் இல்ல. ஆனால், அறிவியல் சம்பந்தமான வார்த்தைகளுக்கு எங்களுக்கு தமிழ் தெரியல, அதனால தான் இங்கிலிஷ்லயே பேசிட்டோம். இது தமிழ்ல இருந்திருந்தா இன்னும் நிறைய பேருக்கு ரீச் ஆகியிருக்கும். இந்த கதைக்கு கிடைச்சிருக்க வரவேற்பு காரணமா, இத முழுநீள படமா எடுக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கு" என்றார்.

Advertisment