"ஈரோடு கிழக்கு தேர்த-ல் உச்சகட்ட குழப்பத் தில் இருப்பது அ.தி. மு.க.வும், பா.ஜ.க. வும்தான்' என சொல் -ச் சிரிக்கிறார்கள் இரண்டு முகாம்களையும் சேர்ந்த முக்கிய தலை வர்கள்.

"ஈரோடு தேர்தல் தொடர்பான முக்கியமான சிக்னல்களைத் தரவும்' என அமித்ஷாவுக்கு அலாரம் பெல் அடித்து பல நாட் களாகிவிட்டது. அமித்ஷா திரும்பிப் பார்க்கவே இல்லை.

குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. இயக்கிய ஆவணப்படம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுடன் பா.ஜ.க.விற்கு ஏற்பட்ட மோதல் என அமித்ஷா பயங்கர பிஸியாக உள்ளார். போதாக்குறைக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும், அமித்ஷாவும், மோடியும் பயங்கரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தமுறை காங்கிரஸ் ஜெயித்தாலும் பரவாயில்லை என ஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு தலைவ- கொடுப்ப தால், தமிழகம் -அங்கு ஒரு இடைத்தேர்தல், அதில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது -அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் தரவேண்டும் என்பதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் அமித்ஷா இல்லை என்கிறது பா.ஜ.க.வின் உயர்நிலை வட்டாரங்கள்.

Advertisment

ee

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட புல்லட் சின்னம், வேட்பாளர் நந்தகுமார் என எடப்பாடி செலக்ட் செய்துகொண்டு நிற்கிறார். எடப்பாடி பெரிதும் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சரும் மா.செ.யுமான ஒருவர், "ஐயோ சாமி... என்னை விட்டுவிடு' என எகிறி ஓடியிருக்கிறார்.

இந்நிலையில்... முத-ல் தனித்துப் போட்டி என முழக்கமிட்ட அண்ணா மலை, இப்பொழுது, முத-யார் 70,000 பேர் இருக்கிறார்கள். அதனால் முத-யார் சமூகத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் போட்டி... அவர்தான் பொதுவான வேட்பாளர். அவருக்கு பா.ஜ.க. ஆதரவு, ஓ.பி.எஸ். ஆதரவு, சசிகலா ஆதரவு, டி.டி.வி. ஆதரவு, எடப்பாடி ஆதரவு என பிட்டைப் போட்டு பேசிவருகிறார் அண்ணாமலை. போதாக்குறைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இந்தமுறை பா.ஜ.க. தனித்துப் போட்டி, தி.மு.க. பத்து சத விகித வாக்கை விட் டுத் தரவேண்டும், அதன்பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியே இருக்காது என ஒரு டீ-ங்கை பேசியிருக்கிறார் அண்ணாமலை.

மொத்தத்தில் நிமிடத்திற்கு ஒரு வேஷம் போடும் அண்ணாமலையின் பேச்சைக் கேட்க எடப்பாடி தயாராக இல்லை.

"செந்தில்பாலாஜியுடனான டீலை வராகி என்கிற வார்ரூம் கம்பெனிதான் பேசியது' எனச் சொல்லும் தி.மு.க. உடன்பிறப்புகள், நாங்கள் அதை நம்பவில்லை என்கிறார்கள்.

இந்தத் தேர்த-ல் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும், தேர்தலை சந்திப்போம் என உறுதியாக உள்ளார் எடப்பாடி.

"இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு காரணம் அண்ணாமலைதான் என ஒட்டுமொத்த பழியையும் அண்ணாமலை மீது போட்டு பா.ஜ.க.வை பந்தாட எடப்பாடி தயாராகி வருகிறார் என்கிறார்கள்' அ.தி.மு.க.வினர்.

Advertisment