னி மெஜாரிட்டியோடு ஆட்சி அதிகாரத்தை தி.மு.க. கைப்பற்றி யிருந்தாலும், மேற்கு மாவட்டத்தில் அதன் வெற்றி வேகம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட இன்றைய ஆளுங்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. முன்னாள் முதல்வரின் சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு ஒரேயொரு தொகுதிதான் கிடைத்திருக்கிறது. திருப்பூரிலும் பெரிய வெற்றி இல்லை. ஈரோட்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றமில்லை. ராசிபுரத்தில்தான் கொஞ்சம் தாக்குப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவும் தி.மு.க.வுக்கு கிடைக்காமல் கூடுதல் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது மேற்கு மண்டல அ.தி.மு.க.

salem

குறிப்பாக, முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம்தான் மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் பலம் குறையாமல் செய்துள்ளது என்று ர.ர.க் கள் கூறு கிறார்கள். இதுபற்றி அ.தி.மு.க. சீனியர் மாஜி எம்.எல்.ஏ. ஒருவர் மிக விரிவாக நம்மிடம் பேசினார்,

"எடப்பாடி போட்ட வெற்றிக் கணக்கு என்பது கொங்கு மண்டல கணக்குதான். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி வெற்றிக்கான திட்டங்களை தீட்டத் தொடங்கினார்.

Advertisment

கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும் செல்வந்தர்கள், கான்ட்ராக்டர்கள், தொழி லதிபர்களை கூட்டணி அமைத்து களத்தில் இறக்கி விட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் நுணுக்கமான பிரச்சாரம் என்பது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் என்பவர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான்.

salem

Advertisment

அதாவது வாராது வந்த மாமணி போல் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்திற்கு ஒரு முதலமைச்சர் பதவி கிடைத்தது. மீண்டும் கவுண்டர் சமூகம் முதலமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்றால் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்ச ராக வந்தே தீரவேண்டும். அப்படியென்றால் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணியும் நிற்கக் கூடிய அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என சமூக மக்கள் மத்தி யில் இந்த கருத்தை கொண்டுசென்றனர்.

தனித்தொகுதி எனப்படும் ரிசர்வ் தொகு தியில் நிற் கும் அ.தி. மு.க. வேட் பாளர் என்பவ ரைக்கூட பட்டியலினத்தவராக பார்க்கக்கூடாது. அவரும் எடப் பாடி பழனிசாமி தான் என்று மனதில்கொண்டு வாக்களிக்க வேண் டும் என கவுண்டர் சமூக குடும்பப் பெண்களிடம்கூட தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்கு உதாரணம்தான் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி. ரிசர்வ் தொகுதியான அதில் மக்கள் செல்வாக்கு, கூட்டணி பலம் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம், எந்த அறிமுகமும் இல்லாத அ.தி.மு.க. வேட்பாளர் பன்னாரி என்பவரிடம் தோல்வி யுற்றார்.

ஈரோடு போன்ற நகர்ப் புறத்தை கடந்து பார்த்தால் பெரும்பாலும் கிராமப்புறங் கள்தான். ஒவ் வொரு தொகுதி யிலும் கவுண்டர் சமூகம் மெஜாரிட்டியாக உள்ளார்கள். அப்படிப்பட்ட தொகுதிகள் அனைத்தும் அ.தி.மு.க.தான் வெற்றிபெற்றிருக் கிறது.

எப்படி எடப்பாடி பழனிசாமி பலம்வாய்ந்தவராக மாறியிருக்கிறார் என்பதற்கு புள்ளிவிபரம் தருகிறேன்'' என கூறிய அவர், மேலும் தொடர்ந்தார்.

"சென்னை நீங்கலாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலம் சேர்ந்து "80 லட்சியம் 70 தொகுதிகள் நிச்சயம்' என்ற திட்டம்தான் எடப்பாடியிடம் இருந்தது. வட மாவட்டம் என்பது செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங் களிலும் மொத்தம் 47 தொகுதிகள் உள்ளன. வன்னியர் சமூக பா.ம.க. கூட்டணி பலத்தால் இங்கு 20 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், மேற்கு மண்டலம் எனப்படுகிற கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 66 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 50 முதல் 55 தொகுதிகள் நிச்சயமான வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி கணக்கிட்டார். மீதி தமிழகம் முழுக்க சேர்ந்து 30 முதல் 35 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதும் பிரதமர் மோடி, அமித்ஷா தயவில் ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என்பதுதான் அவரின் கனவுத் திட்டமாக இருந்தது.

நினைத்தபடி பா.ம.க.வால் வட மாவட்டத்தில் பெரிய பயன் எதுவும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. அந்த 9 மாவட்ட 47 தொகுதி களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது வெறும் 11 தொகுதிகள்தான். ஆனால் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி போட்ட கணக்கு 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள 66 தொகுதிகளில் அ.தி.மு.க. அணி 42 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இவை அனைத்தும், முதல்வர் நாற்காலி கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்திற்கு கிடைக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட சாதி பிரச்சாரம்தான்.

கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் தனித்த அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்ற முழக்கத்துடன் 2009-ல் பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன் தலைமையில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் என்ற சாதி கட்சி உருவானது அன்று அச்சமூக மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி இருந்தது. அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்த லில் இந்த பகுதியில் மட்டும் தனித்து 6 லட்சம் வாக்குகள் பெற்றார்கள். சாதா ரணமாக ஒரு சட்ட மன்ற தொகுதியில் இருபதாயிரம் முதல் இருபத்தைந்து ஆயிரம் வாக்குகள் வரை பெற்றார் கள். அதேபோல இப்போது சாதி பாசம் அ.தி. மு.க.வுக்கு வாக்குகளாக மாறியதே உண்மை. ஆனால் இனிவரும் காலத் தில் இதேரீதியில் சாதி வாக்குகளை ஒன்றுதிரட்ட முடியுமா என் பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது'' என்றார்.

அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளில் எடப்பாடி போட்ட சாதி வாக்குகளின் திட்டத்திற்கு அந்தந்த தொகுதிகளில் சீட் கிடைக்காத கோஷ்டி அரசியல் தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள் பலரும் துணை போயிருக்கிறார்கள். மாற்று சமூக வேட்பாளர்கள் நிறுத்தப் பட்ட தொகுதிகளில் தி.மு.க.வில் உள்ள கொங்கு வேளாளர் நிர்வாகிகள் சைலன்ட் டாகியும், மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தும், சொந்தக் கட்சிக்கு வேட்டு வைத்த நிகழ்வு களும் உண்டு. அத்துடன், மேற்கு மண்டலத் தி.மு.க.வில் ஓயவே ஓயாத உள்ளடிகளும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையெல்லாம் மீறி, கடந்த முறையை விட தி.மு.க.வின் வாக்கு வங்கி உயர்கிற வகையில் மேற்கு மண்டல மக்கள் உதயசூரிய னுக்கு வாக்களித்திருக் கிறார்கள். மக்கள் தரும் ஆதரவை வெற்றியாக்காமல் சிதைத் திடும் கட்சி நிர்வாகத்தை தி.மு.க. தலைமை கவனித்தால் மட்டுமே மேற்கு மண் டலத்தில் தி.மு.க.வுக்கு எதிர்காலம் இருக்கும்.

-ஜீவாதங்கவேல்

_______________

உள்ளடி!

sa

ஈரோடு மாவட்டத்தில் உறுதியான வெற்றி என தி.மு.க.வினரால் நம்பப்பட்ட தொகுதி மொடக்குறிச்சி. காரணம் இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியது இதே தொகுதி யின் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டது பா.ஜ.க.வின் சரஸ்வதி. இத்தொகுதியில் பா.ஜ.க. மிகவும் பலவீனமான அமைப்பை கொண்டது. ஆனால் பா.ஜ.க.விடம் 281 என்ற சொற்ப வாக்குகளில் தி.மு.க. தோல்வியடைந்தது. இதற்கு காரணம்... "எடப்பாடி முதல்வர் என்ற கவுண்டர் சமூக பிரச்சாரமும் பா.ஜ.க. செலவிட்ட 20 "சி' அடுத்து சீட் கிடைக் காத விரக்தியில் தொகுதியில் உள்ள தி.மு.க.வின் மூன்று ஒ.செ.க்களான பூந்துறை குண சேகரன், கொடுமுடி சின்ன குட்டி, மொடக்குறிச்சி விஜயகுமார் ஆகியோர் தேர்தல் பணியில் கட்சி உணர்வோடு பணியாற்றாமல் அவர் களோடு, அவர்களைச் சார்ந்தவர்களையும் முடக்கி தோல்விக்கு வழிவகுத்துவிட்டார்கள்' என சீனியர் உ.பி.க்களே ஆதங்கத்துடன் கூறு கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டத் தில் மட்டும் எடப்பாடி யின் கணக்கிற்கு தோல்வியைக் கொடுத்துள்ளார் தி.மு.க. மா.செ.வான செந்தில் பாலாஜி. இங் குள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றது என்பது குறிப் பிடத்தக்கது.