ந்தேகத்திற்கு அப்பாற் பட்டு நடுநிலை யோடு செயல்பட வேண்டிய மாவட்டத் தேர்தல் அதிகாரி, அ.தி. மு.க.விற்கு சாதகமாகச் செயல்படுவதும் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டிய விஷயங்களை ஃபில்டர் செய்து பாரபட்சமாக நடந்துகொள்வதும் தேர்தல் களத்தின் அரசியல் கட்சிப் புள்ளிகளை அதிரவைத்திருப்பதோடு தேர்தல் கமிஷனுக்குப் புகார்கள் பறக்கத் தொடங்கியிருக்கின்றன.

sand

""நெல்லை மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் கவனித்து, தேர்தல் பணியாளர்களையும் கண்ட் ரோல் செய்கிற தலைமைப் பொறுப்பைக் கையில் வைத்திருக்கிறவர் மாவட்டத் தேர்தல் அதிகாரி கந்தப்பன். முக்கியமான அந்தப் பொறுப்பிற்கு தாசில்தார் கேடரான கந்தப்பன் அ.தி.மு.க.வின் சப்போர்ட்டில் அமர்த் தப்பட்டிருக்கிறார்'' என்கிறார்கள். குறிப்பாக இவரது தலைமையில் தான் பணநட மாட்டம், அரசியல் கட்சிகளின் பண சப்ளையைக் கட்டுப் படுத்துவது மற்றும் மாவட்டத் தேர்தல் பறக் கும் படைகளின் இயக்கம் போன்ற தேர்தல் வண்டியின் அச்சாணியுமிருக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான செயல்பாடுகளில் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடுநிலைமையோடு செயல்படவேண்டும். தகவல்களைப் ஃபில்டர் செய்யாமல் முழுமையாக வெளிப்படுத்தவேண்டும் என்பது தேர்தல் கமிசனின் விதி. ஆனால் இந்தப் பொறுப் பிலோ விரல் நீட்டப்படுகிற பிரச்சினைக்குரியவர் பணியமர்த்தப்பட்டி ருக்கிறார் என்பது தான் விழிகளை விரியவைக்கிற விஷயம். தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்த மாவட்டத்திற்குப் பணியமர்த்தப்பட்டிருக்கிற தேர்தல் அப்ஸர்வர்களின் தொடர்பு நம்பர்கள் மற்றும் ஐந்து தொகுதிகளிலும் மூன்று ஷிப்ட்களினடிப்படையில் பணியாற்றுகிற பணநடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிற, அளவுக்கதிகமான பணம் நடமாடு வதைக் கைப்பற்றுகிற அத்தனை பறக்கும் படைகளின் தொடர்பு நம்பர்களையும் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்கிற வகையில், இந்தத் தேர்தல் அதிகாரி வெளிப்படுத்த வேண்டும். ஊடகங்கள் மூலமாக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். அப்படி வெளிப்படுத்தினால்தான் தொகுதியில் நடக்கிற முறைகேடுகள், வேட்பாளர்களின் பிரச்சினைகள் தேர்தல் தொடர்பான மக்களின் விவகாரம் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பணியமர்த் தப்பட்ட அப்ஸர்வர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் புள்ளிகளின் தகவல் மூலம் தெரியவரும்.

s

Advertisment

அடுத்து, பண நடமாட்டம் பற்றிய, அரசியல் கட்சிகள் கடத்தும் பெரிய அளவிலான தொகைகள், வாக்காளர்களுக்கான பணம் சப்ளை போன்ற முழுவிபரங்களும் அரசியல் புள்ளிகள், பொது மக்கள் கொடுக்கிற தகவல்களின் மூலம் பறக்கும் படைகளால் தடுக்கப்படும். பறிமுதல் செய்யப்படும். ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரியான கந்தப்ப னோ, அப்படிப் பொதுப் பிரகடனப்படுத்தாமல் அந்தத் தொடர்பு எண்களைனைத்தையும் ஒருதலைப் பட்சமாகக் கலெக்டரிடம் மட்டுமே தெரிவித்ததோடு முடித்துக்கொண்டாராம்.

இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து தகவல்கள் பறக்கும் படைக்குப் போவதில் தொய்வு ஏற்பட, அ.தி.மு.க.வோ தொகுதி களில் தனக்கான பணத்தைச் சிரமமில்லாமல் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறதாம். ஆனால் வியாபாரம், தொழில், திருமணம் பொருட்டு பொதுமக்கள், அப்பாவிகள் கொண்டுசெல்கிற பணம் மட்டுமே சிக்குவதால், மாவட்ட நிர்வாகமோ "தொகுதியில் பணக்கடத்தல் தடுக்கப்படுகிறது' என்று திருப்திப் பட்டுக்கொள்கிறது. ""மாவட்டத் தேர்தல் அதிகாரி யின் இந்த ஒருதரப்பு சார்பு நடவடிக்கைகள் அ.தி.மு.க.விற்குச் சாதகம். அவர்களுக்கு ஏற்றபடிதான் செயல்படுகிறார். இதனால் வாக்குப்பதிவு தினத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கான பண சப்ளையை முடித்துவிடுவார்களே. ஒப்புக்குக் கணக்குக்காட்ட எதிர்க்கட்சியினரைக் குறிவைத்துக் கதையை முடித்துக்கொண்டு நல்லபிள்ளையாகி விடுவார்கள். இதுபோன்று ஒருதலைப்பட்சமாக நடக்கும் அதிகாரிகளிடம் நாம் எப்படி நீதி, நியாயத்தை எதிர்பார்க்க முடியும்'' என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

Advertisment

ee

கடந்த எம்.பி. தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு இயந்திரங்கள் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. மதுரையில் வாக்கு எண்ணிக்கைக்கு சில நாட்கள் முன்பு மதுரை மாவட்ட அதிகாரி ஒருவர் உரிய அதிகாரிகளின்றி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றுவந்தது தமிழகம் முழுக்க பரபரப்பும் அதிர்ச்சியுமானது. அதையடுத்தே இதுபோன்ற நிகழ்வுகளுக்காகச் செல்லும் அதிகாரிகள், உரிய அதிகாரிகளுடன் செல்ல வேண்டும் என்று அரசு பின்னர் அறிவுறுத்தியது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா காரணமாக 1050 வாக்காளர்களுக்கு மேற்பட்டவர் கள் பிரிக்கப்பட்டு இரண்டு பூத்களாக மாற்றப் பட்டது. அதற்குத் தேவையான வாக்கு இயந்திரங்களை மாவட்டத்தின் ராமையன்பட்டி குடோனிலிருந்து உரிய தொகுதிக்கு அனுப்பவேண்டும். இதுபோன்ற நம்பிக்கைக்குரிய முக்கியமான இடத்திற்குப் பத்திரிகையாளர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் செல்லாமல், தனது கீழ்நிலைப் பணியாளர்களுடன் குடோன் சென்றிருக்கிறார் தேர்தல் அதிகாரி கந்தப்பன். அப்போது குடோனிலுள்ள சி.சி.டி.வி. கேமராவின் வயர் அறுந்து வேலைசெய்யாமல் தொங்கியிருக்கிறது. விவகாரத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சம்பவத்தை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தாமல் போலீசிற்கு மட்டுமே அவர் தெரியப்படுத்தினாராம். வழக்குப் பதிவு செய்த காவல்துறையோ, "அந்தப் பக்கமாகச் சிறுவர்கள் புறா வேட்டைக்குச் சென்றபோது அவர்களால் சேதப்படுத்தப்பட்டது' என்று விசாரணையை முடித்திருக்கிறது.

ee

இதுபோன்ற வெளிப்படைத்தன்மை காப்பாற்றப்பட வேண்டிய பகுதிக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரி கந்தப்பன் உரிய விதிப்படி செல்லாதது சந்தேகத்திற்குரியது என்று விவகாரத்தைக் கிளப்புகின்றார்கள்.

இதே நெல்லை மாவட்டத்தின் கல்லிடைக் குறிச்சிப் பொட்டல் பகுதியில் கேரள மாஃபி யாக்களால் எம்.சாண்ட் குவாரி என்ற பெயரில் பல நூறு கோடிகள் மதிப்பிலான, நூற்றுக்கணக்கான மணல் லோடுகள் கடத்தப்பட்டது. அந்த சம்பவத்தின் முழு நிகழ்வுகளையும், பின்னணியில் லோக்கல் தாலுகா அலுவலகத்தின் அடிமட்ட அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியரின் அலுவலக அதிகாரிகள் என வரிசையாகப் பலனடைந்த அதிகாரிகள் பற்றியும் கடந்த அக்டோபரில் நக்கீரன் விரிவாகவே முதன் முதலில் வெளிப்படுத்தியிருந்தது. அந்தக் கட்டுரையின் தாக்கத்தால் அதிகாரிகளின் உலகம் அதிர்ந்தது. தற்போது அந்த மணல் விவகாரம் மதுரை உயர்நீதி மன்றக்கிளையில்.

மணல் கடத்தல் ராக்கெட் நடந்து கொண்டிருந்த நேரம், ஏரியாவின் தாலுகா பகுதியான அம்பையில் தாசில்தாராகப் பணியிலிருந்தவர்களில் தேர்தல் அதிகாரியான கந்தப்பனும் ஒருவர்.

அதுசமயம் மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்பட்ட தொடர்புடைய பொட்டல் பகுதியின் விவசாயிகள் மக்கள்தேசம் கட்சி யினரோடு இணைந்து போராட்டம் நடத்தினர். "மணல் விவகாரத்தில் தாசில்தார் கந்தப்பன், குவாரிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார், துணைபோகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்தேசம் கட்சியினர், கந்தப்பன் மீது காவல்துறை, மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் வரை புகார் செய்தனர். இந்த மணல் விவகாரத்தில் தொடர்புடையவர்தான் தற்போது நெல்லை மாவட்டத் தேர்தல் அதிகாரி.

மேலும், "மாவட்டத்தின் அம்பை தொகுதியின் அ.தி. மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் மாவட்டத் தேர்தல் அதிகாரி' என, அவர் மீது தி.மு.க. வேட் பாளரான ஆவுடையப்பன் தேர்தல் கமிசனரிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

இதுகுறித்து நாம் மாவட்டத் தேர்தல் அதிகாரியான கந்தப்பனைத் தொடர்புகொண்டு கேட்டதில், “""அப்ஸர்வர்கள், பறக்கும் படைகளின் தொடர்பு எண்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன'' என்றவரிடம், "ஊடகங்களில் அவை வெளியாக வில்லையே' என்றதும், ""ஒரு பத்திரிகையில் வந்திருக்கு'' என்று சமாளித்தார். முக்கியமான அதி காரிகளை உடனழைத்துச் செல்லாமல் ராமையன் பட்டி மின்னணு இயந்திரக் குடோன் சென்றது, கண்காணிப்பு கேமராவின் துண்டிக்கப்பட்ட வயர் பற்றி கேட்டதற்கு, ""அது காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மணல் விவகாரத்தில் அவர் குறித்த புகார் பற்றிக் கேட்டதற்கு, ""அந்தப் புகார் இப்ப விசாரணையிலிருக்கு. அம்பை தி.மு.க. வேட்பாளர் ஆவுடையப்பன் கொடுத்த புகார் வேறு அதி காரியின் மீது'' என்று சமாளித்தவரிடம், "அது குறித்த நடவடிக்கையும் உங்களின் வரம்பில்தானே வருகிறது' என்றதற்கு அவரிடம் பதிலில்லை. ஜனநாயகத்திலும், அரசியலிலும் மக்களே எஜமானர்கள். மாநிலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிற தேர்தலின், தேர்தல் அதிகாரிகள், விமர்சனத்திற்கும் விவகாரத்திற்கும் அப்பாற் பட்டவர்களாக இருக்க வேண்டும்.

"எல்லாம் சரிதான்! அப்படியிருந்தா என்ன ஆதாயம்...' என நம்மைக் கேட்டாலும் கேட் பார்கள்போலிருக்கிறது.