கடந்த ஒரு மாதமாக விடாத பெய்துவரும் மழையினால் ஏரிகள் குளங்கள் நிரம்பி ஆறுகளில் தண்ணீர் நிறைந் துள்ளது. அதே நேரத்தில், கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி ஆகிய மாவட்டங்களில் முன் பட்டத்தில் பயிர் செய்யப் பட்ட பருத்தி, சோளம், உளுந்து, நெற்பயிர் ஆகியவை தண்ணீரில் மூழ்கி அழுகி நாசமாகிவிட்டன. வேதனையில் விவசாயிகள் அரசாங்கத்திடம் கையேந்தி காத்திருக்கிறார்கள் விவசாயிகள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உளுந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. இந்த நேரத்தில் விடாது பெய்துவரும் மழையினால் நிலத்திலேயே முளைத்து விட்டன. இதுகுறித்து குன்னத்தூர் விவசாயி வையாபுரி நம்மிடம், ""எனது ஆறு ஏக்கர் நிலத்தில் உளுந்து விவசாயம் செய்திருந்தேன் அறுவடை செய்ய இருந்த நேரத்தில் விடாத மழையினால் விளைந்த உளுந்து அப்படியே நிலத்தி லேயே முளைவிட்டு விட்டன. ஒரு படிகூட தேறாது. லட்சக்கணக்கில் நஷ்டம். அரசு அதிகாரிகள், வேளாண்மைத் துறை யினர் வந்து பார்வையிட்டு கணக்கு எடுத்துச் சென்றனர் அதேபோன்று பயிர் இன்சூரன்ஸ் செய்திருக்கிறோம். ஆனால் அரசு உதவித்தொகை, இன்சூரன்ஸ் தொகை என்று இதுவரை எதுவும் கைக்கு கிடைக்கவில்லை பல ஆண்டுகளாக வறட்சி. விவசாயம் செய்ய முடியாமல் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றார்கள். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று ஊருக்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டால், மழை எங்களை நஷ்டப்படுத்தி விட்டது. ஒரு மாதமாக சூரிய வெயில் கண்ணுக்குத் தெரியவில்லை வெயில் படாததால் விளைபயிர்கள் முற்றவில்லை வெயில் பட்டால்தான் தானியங்கள் முற்றும்.
இது மட்டுமல்ல, பயிர் செய்யப்பட்ட காய்கறிகள் அனைத்தும் பிஞ்சிலேயே வெம்பிப் போய்விட்டன வெயில் பட்டால்தான் காய்கறி செடிகளின் வேரில் சூடு ஏறி காய்கறிகள் பெருக்கும், அறுவடை செய்ய முடியும். இந்த நிலையினால் வரும் மாதங்களில் விளைச்சல் நஷ்டமான தால் தானியங்களின் பற்றாக் குறை ஏற்பட்டு விலை அதிகரிக்க வுள்ளது. அதேபோல் காய்கறி விலையும் அதிகரிக்கப்போகிறது. சீரான மழை, சீரான வெயில் இதுவே விவசாயத்தை காப்பாற் றும். அதிக வறட்சி, அதிக மழை இரண்டுமே எங்களை நசுக்கு கிறது நாசம் ஆக்குகிறது'' என் கிறார் விவசாயி வையாபுரி.
அரசும் அதிகாரிகளும்தான் விவசாயிகளை வஞ்சிக்கிறார்கள் என்றால்... இயற்கையுமா?