"இப்படியும் நடக்குமா?' என்று முகம் வெளுத்து, விதிர் விதிர்த்துப்போயிருக்கிறார்கள் குடந்தைவாசிகள். கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் துலுக்கவேலி அய்யா கோவில் தெரு வைச் சேர்ந்தவர்கள் சேகர், தேன்மொழி தம்பதி யினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர் களில் கடைக்குட்டியாகப் பிறந்தவர்தான் சரண்யா.

நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் சரண்யா. அவருக்கு தன் அப்பா, அம்மா மீது அளவு கடந்த பாசம். சம்பாதிக்கும் பணத்தில் அவர்களை சந்தோஷமாக கவனித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சரண்யாவின் தாய் தேன்மொழிக்கு மனநிலை பாதிக்கப்பட, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவந்தார் சரண்யா.

ff

Advertisment

அப்போது அங்கு பணி புரிந்துவந்த திருவண்ணா மலையைச் சேர்ந்த வடிவேலு என்பரது மகன் மோகன், சரண்யாவின் தாய்க்கு உதவி யாக இருந்திருக்கிறார். இது சரண்யாவுக்கும் மோகனுக் கும் இடையே காதல் தீயைப் பற்றவைத்தது.

சரண்யா பட்டியல் சமூகத்துப் பெண் என்பதால், இவர்களின் எண் ணத்தை அறிந்த தேன்மொழி ஆரம்பத்திலேயே, "நீங்க வேற சமூகம், நாங்க வேற சமூகம் தம்பி. உங்க காதலை நான் ஒத்துக்கலாம், உங்க வீட்லயும், எங்க வீட்டுலயும் ஒத்துக்கமாட்டாங்க''’என சிவப்புக்கொடி காட்டியிருக்கிறார். இருந்தும் சரண்யாவும் மோகனும், விடாப்பிடியாக இருந்ததால், தேன்மொழியின் ஆதரவோடு கடந்தவாரம் அவர்களின் திருமணம் நடந்தது.

இந்த விவகாரம் சரண்யாவின் சகோதரர் சக்திவேலுவுக்குத் தெரியவர, கோபத்தின் உச்சத்திற்கே சென்றவர், தன் மைத்துனர் ரஞ்சித்தோடு சேர்ந்து, மது அருந்திவிட்டு, இது குறித்து ஆலோசித்திருக்கிறார்.

அப்போது ரஞ்சித், "எப்படியாவது இருவரை யும் பிரிக்கணும், இல்லன்னா இரண்டுபேரும் சாகணும். எனக்கு கிடைக்காத உன்னோட தங்கச்சி, இங்கே வாழவே கூடாது''’என்று போதையின் உச்சத்தில் இருந்த சக்திவேலுவிடம் கூற, அங்கேயே கொலைத் திட்டம் உருவானது. இதைத் தொடர்ந்து சரண்யாவை இருவரும் சந்தித்து...

ff

Advertisment

"நடந்தது நடந்துபோச்சு. உங்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். உடனே எங்களோடு நீயும் உன் காதல் கணவன் மோகனும் நம் வீட்டிற்கு வர ணும், விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கோம்''’என்று கூறினர். அண்ணன் மீது இருந்த அசைக்க முடியாத அன்பால், 13- ஆம் தேதி காலை சரண்யாவும் அவரது காதல் கணவர் மோகனும் சோழபுரம் வந்தனர். அங்கே தங்களுக்கு மரணவலை பின்னப்பட்டிருப்பதை அவர்கள் உணரவில்லை.

தடபுடலாக விருந்து நடந்தது. அதை முடித்துக்கொண்டு இருவரும் அன்று மதியம் சென்னைக்குப் புறப்பட்டபோது, வீட்டிற்கு அருகே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த ரஞ்சித், கண்ணிமைக்கும் நேரத்தில் மோகனை வெட்டிச் சாய்த்தார். இதைக்கண்டு பதறித் துடித்து ஓடிவந்த சரண்யாவை, அவரது அண்ணன் சக்திவேலே ஈவு இரக்கமின்றி வெட் டித் தள்ள...” "அண்ணா...'’ என்று அலறியபடியே அவரும் கீழே சாய்ந் தார். இருவரும் துடி துடித்து ரத்த வெள்ளத் திலேயே உயிரை விட்டனர்.

திருமணம் முடிந்த ஐந்தாம் நாளே அவர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இது, அந்தப் பகுதியையே அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

சரண்யாவின் தாய் தேன்மொழியை நாம் சந்தித்தபோது, "என் பொண்ணு விருப்பப்படியே கல்யாணம் கட்டிக்கிச்சு. இதுல எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் என் மகன் சக்தி வேலோட மச்சான் ரஞ்சித், என் பொண்ணக் கட்டிக்கத் திட்டம் போட்டுருக்கான், அது நடக் கலன்னு தெரிஞ்சதும், இப்படிப் பண்ணிட்டான். அவனுக நாசமா போக''’என்று கண்ணீருடன் மண்ணை வாரித் தூற்றினார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சோழபுரம் காவல்நிலைய போலீசாரோ, "சக்தி வேலின் மனைவியோட ddசகோதரன்தான் ரஞ்சித். தேவனாஞ்சேரியை சேர்ந்தவன். இவன் மீது ஏற் கனவே சில வழக்குகள் இருக்குது. இவன் சரண்யாவை ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளான். ஆனால் சரண்யாவுக்கோ ரஞ்சித்தைப் பிடிக்கல. இந்தத் தகவல் ரஞ்சித்துக்கு தெரிந்து சக்திவேலோடு சேர்ந்து கொலையைச் செய்துள்ளான். சக்திவேல் இதற்கு முன்பு எந்தவித அடிதடிக்கும் போகாதவன். அப்படிப்பட்டவன் மச்சானுக்காக, கூடப்பிறந்த பிறப்பையே கொலை செய்துள்ளான். இருவரையும் கைது செய்துவிட்டோம்''’என்கிறார்கள்.

ஏரியாவாசிகளோ, "சரண்யாவின் முடிவு மிகுந்த வருத்தத்தைத் தருது. அண்ணன் கூப்பிட் டானேன்னு பாசத்தோட கணவனோட வந்தவளை இப்படிக் கூறு போட்டுட்டானுங்களே.. இந்தப்பகுதியில் இப்ப குற்றச்சம்பவங்கள் அதிகரிச்சிடிச்சி. இங்க இருக்கும் இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையா கிட்டாங்க. தேவனாஞ் சேரி, வேப்பத்தூர், மணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏகத்துக்கும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனை நடக்குது. இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் கூட ஆற்றங்கரை ஓரம் என்பதால் குடித்துவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் பினாமியாக காட்டிக்கொண்ட பிரபல ரவுடி ஒருவரின் மைத்துனர்தான் இந்தப் பகுதியில் விற்கப்படும் கள்ளச் சாராயத்திற்கான டீலர். அவர்களால் க்ரைம் சம்பவங்களும் அதி கரித்துவிட்டன''’ என்கிறார்கள் அதிர்ச்சி மாறாமல்.

சாதீயமும் ஒரு தலைக்காதலும் இப்படி ஒரு விபரீதத்தை உருவாக்கியிருக்கிறது. காதல் ஜோடிகள் மாற்றிக்கொண்ட மணமாலை, ஐந்தே நாட்களில் பிண மாலையாக மாறியது கொடுமையிலும் கொடுமை.