பக்குவப்படாத காதல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்....
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி விஜயா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாள்.
இந்த நிலையில், அவரது அம்மா ஆனந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பரபரப்பாக காவல் நிலையத்திற்கு வந்து, "என் மகள் விஜயா, கடந்த 12-ஆம் தேதி, அவளோட தாத்தா வீட்டுக்குக் கிளம்பினாள். பி.எச். இ.எல். பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவள் நடந்து போகும்போது, திடீர்னு அவளை வழிமறித்த வருண் என்பவன் உட்பட மூன்றுபேர், அவளை முண்டவிடாமல் பிடிச்சிக்கிட்டு, விஷம் கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக அவள் வாயில் ஊற்றி, குடிக்க வச்சிட்டாங்க. இதனால் வயிற்று வலியில் துடிச்ச அவளைத் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செஞ்சிருக்கோம். குற்ற வாளிகளை எப்படியாவது தண்டிக்கணும்''’என்றார் கண்ணீரோடு.
விசாரணையில் இறங்கிய போலீஸ் டீம், மாணவி விஜயாவிடம் துருவித் துருவி விசாரித்த போதுதான், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்தது. பிறகு...?
இது குறித்து விசாரணை டீமில் இருந்த அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது... "அந்த மாணவி விஜயாவின் தந்தை நடத்தை சரியில்லாதவர். அதனால், அந்த மாணவி, தன் தாத்தா வீட்டில் தங்கிப் படித்து வந்திருக்கிறாள். இவள் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, இவளை வருண் என்ற மாணவன் சின்சியராக காதலித்து வந்திருக்கிறான். இந்த விஷயம் இரண்டு பேரின் வீட்டிற்கும் தெரிந்தும், அவர்கள் எதிர்க்கவில்லை. அதோடு வருண் அந்த மாணவியின் வீட்டில், குடும்ப உறுப்பினர் போலவே இருந்து வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தன் காதலுக்குரிய மாணவி விஜயாவின் போக்கில் அதிருப்தி அடைந்திருக்கிறான் வருண். மேலும் விஜயா வைக் கடுமையாகத் திட்டியிருக்கிறான். அதனால் எரிச்சலடைந்த விஜயா, அவனை மிரட்ட தற்கொலை நாடகத்தை அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறாள். அதன்படி கடந்த 13 ஆம் தேதி விஷத்தன்மை கொண்ட எலி பேஸ்ட்டைத் தின்றிருக்கிறாள். இதன் மூலம் வருணுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துவிட்டு, பிறகு அதற்கான மருந்தை எடுத்துக்கொண்டு சரியாகிவிடலாம் என்பது அவள் திட்டம். இதற்காக விஷத்தன்மையை நீக்கும் மெத்தடை யும் இணையதளம் மூலம் அவள் தெரிந்துகொண்டு, அதன்படி சிகிச்சையையும் சுயமாக எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் மருந்தின் வீரியத்தால் விஜயாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவளை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக் கிறார்கள். விஜயாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவள் தின்றது எலி மருந்து என்று உறுதி செய்திருக்கிறார்கள். இதையடுத்து தன் தவறு வெளியே தெரியாமல் இருக்கவே தன்னை வருண் உட்பட 3 பேர் வழிமறித்து, விஷ குளிர்பானம் கொடுத்த தாக ஒரு கதையைப் புனைந்திருக்கிறாள். இதில் வருணுக்கு சப்போர்ட்டாக இருந்த அவன் நண்பர்கள் இருவர் பெயரையும் அவள் சேர்த்துவிட்டாள். அந்த மாணவியின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது, மொத்தம் 57 இளைஞர்களிடம் அவள் அடிக்கடிப் பேசிவந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவ ரிடமும் விஜயா காதல் பித்தேறி எல்லை மீறி, பேசிவந்ததும் எங்களுக்குத் தெரியவந்தது''’என்றார்கள் விரிவாகவே.
இந்நிலையில் மாணவி விஜயாவின் உடல்நிலை மோச மானதால் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த விஜயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.
மறுநாள் காலை வந்து, மாணவி விஜயாவின் இறப்புக்கு காரணமான மூன்று நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் உறவினர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததோடு, வருணைக் கைது செய்து, மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் தரப்போ, போஸ்ட்மார்ட்டத்துக்குப் பின் விஜயாவின் உடலை அவள் குடுபத்தினரிடம் ஒப்ப டைக்கத் தயாரானபோது, அவருடைய பெற்றோர்களும் உறவினர்களும், தங்களுடைய ஊர்க் கோவில் திருவிழாவிற் காக, காப்பு கட்டியிருப்பதால் மறுநாள் உடலை வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிச் சென்றார்கள்... இன்று போராடுகிறார்கள்''’என்கிறது ஆதங்கமாய்.
எது எப்படியோ, காதல் என்ற பெயரில் எல்லை மீறிச் செல்லும் இளசுகளுக்கு விஜயாவின் கதை, பகீர் பாடமாக அமைந்திருக்கிறது.