ருவழியாக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு அடங்கினாலும், நாகர்கோவில் மாநகராட்சியில் மட்டும் பரபரப்பு அடங்காமல் தொடர்கிறது. நாகர்கோவில் தொகுதியில் 2011-16 காலகட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்த நாஞ்சில் முருகேசன்தான் பரபரப்புக்குக் காரணம்.

admk

ரியல் எஸ்டேட் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் நாஞ்சில் முருகேசன், தொடக்கத்தில் பா.ஜ.க. நகரப் பொருளாளராக இருந்து, பின்னர் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். அதையடுத்தே அ.தி. மு.க. எம்.எல்.ஏ.வாக உருவெடுத்தார். இந்நிலையில், இவர் மாவட்டச் செயலாளராகவும் ஜெயலலிதா வால் நியமிக்கப்பட்டபோது, ஒழுகினசேரியிலிருந்த அவரது எம்.எல்.ஏ. அலுவலகத்தில், சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது, அங்கிருந்த பொதுமக்களே அவரை கையும் களவுமாகப் பிடிக்க, நான்கே மாதத்தில் அவரது மாவட்டச் செயலாளர் பதவியை ஜெ. பறித்த பின், எம்.எல்.ஏ.வாக மட்டுமே தொடர்ந்தார்.

அடுத்ததாக, 2020-ல் நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர் பை ஏற்படுத்திக்கொண்ட நாஞ்சில் முருகேசன், அப்பெண்ணின் மகளான 15 வயதேயான சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர்மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தால் கட்சியின் பெயர் மீண்டும் ரிப்பேராக, அ.தி.மு.க.விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

Advertisment

admkசிறிது காலம் அரசியலி லிருந்து ஒதுங்கியிருந்தவர், பின்னர் அ.ம.மு.க.வில் தனது அரசியலைத் தொடங்கினார். பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு, இம்முறை அவரது மகள் ஸ்ரீலிஜாவை நாகர்கோவிலில் 11-ம் வார்டில் களமிறக்கினார். மகளை வெற்றிபெறச் செய்வதற்காக கரன்சி கட்டுக்களுடன் இரவுபகலாகச் சுற்றி வந்தவர், மகளை மேயராக்குவதற்காக, கவுன்சிலர்களுக்கு இலவசமாக 5 சென்ட் நிலம், 5 லட்சம் ரொக்கம் என்றெல்லாம் பேரம் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

இச்சூழலில், வில்லுக்குறி திருவிடைக் கோட்டையைச் சேர்ந்த குமார்(47) என்பவர், 13-ம் தேதி இரவு, பலத்த காயங்களுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இரணியல் போலீ சார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது மனைவி விஜயஸ்ரீக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தொடர்பு இருந்ததென்றும், அதனைத் தட்டிக்கேட்டபோது தன்னைக் கடத்திச் சென்று, நிர்வாணமாக்கித் தாக்கியதாகவும், அதுகுறித்து புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறினார்.

அதேபோல், கடந்த 13-ம் தேதி இரவில், தன் மனைவியோடு நாஞ்சில் முருகேசன் உல்லாசமாக இருந்ததைக் கண்டித்தபோது, நாஞ்சில் முருகேசனும் அவரது கார் டிரைவர் மகேஷ் என்பவரும் இவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றதாகவும் புகாரளித்தார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது, பாலியல் தொல்லை கொடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள். தலைமறைவாக இருந்தபடியே அரசியல் பேரங்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.

Advertisment