"’ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை, பலத்த எதிர்ப்புக்கு நடுவே நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி.''

"ஆமாம்பா, இந்த மாநாட்டுக்கு முக்குலத் தோர் சமூக எதிர்ப்பை உருவாக்க, ஓ.பி.எஸ்., தினகரன் டீம் எடுத்த முயற்சிகளை எடப்பாடி முறியடித்திருக்கிறார். அதே சமயம், இந்த மாநாடு குறித்த ஆதங்கம் அவர்கள் தரப்பிலேயே பலருக்கும் இருக்கிறதே?''

rr

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, மாநாட்டுக்கு 15 லட்சம் பேர் வந்ததாக எடப்பாடி அறிவித்த போதும், பந்தலில் ஒன்றே முக்கால் லட்சம் நாற்காலிகள்தான் போடப்பட்டிருந்தன. எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்கிற ஆதங்கம் எடப்பாடிக்கே இருக்கிறதாம். காரணம், கூட்டத்தைத் திரட்டிவர கோடிக்கணக்கான ரூபாய்கள் இறைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் மாநாட்டுக்கு அதிக அளவில் நிதியைக் கொடுத்ததோடு, நிகழ்ச்சியில் ஒயிலாட்டமும் ஆடிய மாஜி மந்திரி வேலுமணியை அங்கே எடப்பாடி மனம் திறந்து அதிகமாகப் பாராட்டினார். இது ஏனைய சீனியர்களுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிற தாம். தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பட்டை சோறு பாணியிலான சாப்பாடு, பெரும்பாலான தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. ஆக இந்த பொன்விழா மாநாடு பலவிதத்திலும் ஆதங்க மாநாடாகவே நடந்து முடிந்திருக்கிறது.''

"இந்த அ.தி.மு.க. மாநாட்டை பெண்கள் தரப்பு புறக்கணித்துவிட்டதே?''

"அதுவும் உண்மைதாங்க தலைவரே... எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி. மு.க.வுக்கு பெண்களின் ஆத ரவு அதிகமாகவே இருந்து வந்தது. அதேபோல் ஜெ. இருந்தபோதும் அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் பெண்கள் திரளுவார்கள். அதனால் தமிழகப் பெண்களின் பேரதரவு பெற்ற கட்சி என்கிற இமேஜ் அ.தி.மு.க. வுக்கு இவ்வளவு காலமாக இருந்து வந்தது. ஆனால் அண்மைக்காலமாக எடப் பாடியோ. ஓ.பி.எஸ்.சோ யாராக இருந் தாலும் அவர்கள் கூட்டும் நிகழ்ச்சிகளுக்கு பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் எடப்பாடியின் மதுரை மாநாடும் மகளிரால் புறக்கணிக்கப்பட்ட மாநாடாகவே இருந்திருக்கிறது. இது குறித்து தங்கள் கட்சியில் இருக்கும் மாஜி மந்திரி களிடமும் மா.செ.க்களிடமும் எடப்பாடி கவலையோடு விசா ரித்தாராம். அதற்கு அவர்கள், ஸ்டாலின் அரசு மகளிருக்கு விலை இல்லா பேருந்துப் பயணம் அறிவித்த போதே பெண்களின் ஆதரவு தி.மு.க. பக்கம் திரும்பி விட்டது. இப்போது மகளிர் உரிமைத்தொகை வழங் கும் திட்டமும் பெண் கள் மத்தியில் தி.மு.க.வின் செல்வாக்கை வெகுவாக உயர்த்தி இருக்கிறது என்று சொல்லி எடப்பாடியைத் திகைக்க வைத்தார்களாம்.''”

Advertisment

’"இந்த நேரத்தில் கொடநாடு விவகாரம் குபீரெனச் சூடுபிடித்து, எடப்பாடியை மிரட்டுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, மதுரை மாநாட்டை எடப்பாடி நடத்தி முடித்திருக்கும் இந்த நேரத்தில், கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு வேகம் பெற்றிருக்கிறது. கொடநாடு க்ரைமை ஜெ.வின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ்தான் முன்னின்று நடத்தினார். அவர் விபத்தில் கொல்லப்பட்டு விட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அவர் அண்ணனான தனபால், அண்மையில் ஒரு நில விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட அவர், பத்திரிகையாளர்களிடம் "கொடநாடு விவகாரம் தொடர்பான பல உண்மைகள் எனக்குத் தெரியும். அதை விரைவில் வெளிப்படுத்துவேன்'’ என்று கூறி, எடப்பாடித் தரப்பை இப்போது பகீரில் ஆழ்த்தி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தும் முயற்சியில் கொடநாடு விசாரணை டீம் இருக்கிறது. அதே சமயம், எடப்பாடி தரப்பிடம் பணம் கறக்க, தனபால் இப்படி அவருக்கு ஷாக் கொடுத் திருக்கலாமோ? என்கிற சந்தேகமும் அதிகாரி களுக்கு இருக்கிறதாம்.''”

"தி.மு.க. நடத்திய நீட் எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகள்தான் மாநிலம் தழுவிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மதுரை நீங்கலாக முன்னெடுத்தன. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்தில் உதயநிதி கலந்துக்கிட்டார். இதில் மாணவி அனிதா தொடங்கி நீட் தேர்வினால் இதுவரை உயிரிழந்த மாணவ-மாணவிகளைப் பற்றிய காட்சிகள் சித்தரிக்கப்பட, அவை அனைவர் மனதையும் கனமாக்கிவிட்டது. குறிப்பாக, அனிதாவின் பேச்சு ஒளிபரப்பப்பட்ட போது, உதயநிதி பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார். போராட்டம் நடந்த எல்லா இடங்களிலும் அனிதா தொடங்கி, அண்மையில் தற்கொலை செய்துகொண்ட குரோம்பேட்டை மாணவர் ஜெகதீஸ்வரன் வரை, பலரும் கண்ணீரோடு நினைவுகூரப்பட்டனர். மாணவர் கள் மத்தியில் இந்தப் போராட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.''”

"திடீர்னு இப்படியொரு நீட் எதிர்ப்புப் போராட்டத்தை தி.மு.க. கையில் எடுக்கக் காரணம் என்ன?''”

"நீட் தேர்வு ரத்து செய்யப்பட முடியாததில் தி.மு.க. அரசு கொஞ்சம் கவலையடைந்திருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலை தமிழக மாணவ மாணவிகளிடம் அதிகரித்து வருவதாக அரசுக்கு கிடைத்த ரிப்போர்ட் தான், அந்தக் கவலைக்கு நீட் தேர்வினை ரத்து செய்ய தி.மு.க. அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன்கள் எதுவும் கிடைக்காத நிலையில், மாணவர்களிடம் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தி.மு.க. தலைமைக்கு, தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சிலர் தகவல்களை பாஸ் செய்திருந்தனர். அதனால்தான் நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு கிடப்பில் வைத்திருப்பதைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசி வரும் கவர்னர் ரவியைக் கண்டித்தும் இப்படியொடு போராட்டத்தை தி.மு.க. முன்னெடுத்தது.''”

"சரிப்பா, ஜெயிலர் முடிந்த சூட்டோடு இமயமலை யாத்திரை சென்ற ரஜினி, பல்வேறு பரபரப்புகளோடு சென்னை திரும்பி இருக் கிறாரே?''”

rr

"ஜெயிலர் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு ஆன்மீகப் பயணமாக இமயமலைக்கு பறந்த ரஜினி, ரிட்டர்ன் ஆகும் போது, சிலரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அந்த வகையில்தான் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்தார். இவர்களில், யோகி ஆதித்திய நாத்தை சந்தித்தபோது, அவரது காலைத் தொட்டு ரஜினி வணங்கி னார். இது ரஜினி ரசிகர்களை அதிர வைத்ததோடு, அவருக்கு எதிரான சர்ச்சையையும் தேசிய அளவில் கிளப்பியது. சோசியல் மீடியாக்கள் ரஜினியை வறுத்து எடுத்தன. குறிப்பாக, கடவுள் -தாய்- தந்தை மூவரைத் தவிர யார் காலிலும் விழக்கூடாதுன்னு கடந்த காலங்களில் சொல்லிவந்த ரஜினி, இப்படி யோகி காலில் விழுந்ததை கிண்டல் செய்து பலரும் கலாய்த்து வருகின்றனர்.''”

"இதுபற்றி ரஜினி அலட்டிக்கிட்டதாகத் தெரியவில்லையே?''”

"ஆமாங்க தலைவரே, இது குறித்துக் கொஞ்சமும் ரஜினி கவலைப்படவில்லையாம். தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய அவர், "யோகியை இவர்கள் எல்லாம் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். நானோ, அவரை அனைத்து பற்றுகளையும் துறந்த ஆன்மீக குருவாகப் பார்க்கிறேன். அனைத்து ஆசாபாசங்களையும் துறந்த அவர், கடவுளுக்கு சமமானவர். அதனால் அவரை வணங்குவதில் தவறில்லை'ன்னு சொன்னாராம். இந்த நிலையில், "ஜெயிலர்' படத்தை யோகியுடன் பார்ப்பேன் என சொல்லியிருந்தார் ரஜினி. ஆனால், யோகியோ சினிமா வைப் பார்க்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம். இந்தப் பயணத்தில் யோகி, சி.பி.ஆர், உ.பி. கவர்னர் ஆனந்திபென் ஆகிய மூவரையும் ரஜினி ஒருசேர சந்தித்தது, மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ரஜினியை வைத்து தமிழகத்தில் ஏதேனும் ஒரு திட்டத்தை பா.ஜ.க. செயல்படுத்த நினைக்கிறதா? என்கிற டாக் தேசிய அளவில் கிளம்பியிருக் கிறது.''”

"மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, பரபரப்போடு சென்னை திரும்பி இருக்கிறாரே?''”

"ஒன்றிய உள்துறை அமைச்சகம் அழைத்ததன் பேரிலேயே டெல்லிக்கு சென்றிருந்தார் ரவி. டெல்லி சென்றாலே, உள்துறை அமைச்சக அதிகாரிகள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் ஆகி யோரோடு கலந்து விவாதித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரவி. இந்தமுறை உள்துறை அமைச்சகமே அழைத்த தால் அந்தத்துறை அதிகாரிகளு டன் கூடுதல் நேரத்தை செலவிட்டி ருக்கிறார். இது குறித்து விசாரித்த போது, சில வாரங்களுக்கு முன்பு, தி.மு.க. அரசுக்கு எதிரான ஊழல் புகார்களை பா.ஜ.க. அண்ணாமலை கவர்னரிடம் கொடுத்தாரல்லவா? அது குறித்த ஒரு ரிப்போர்ட்டை அப்போதே கவர்னர் டெல்லிக்கு அனுப்பினாராம். அது குறித்து விவாதிக்கவே உள்துறை அமைச் சகம் கவர்னரை அழைத்ததாம். அந்த ரிப்போர்ட்டில் தங்களுக்கு இருந்த குழப்பங்கள், சந்தேகங்கள் குறித்தெல்லாம் கவர்னரிடம் விவாதித்தார்களாம். இவற்றின் அடிப்படையில் தி.மு.க. அரசுக்கு எதிராக டெல்லி நடவடிக்கையில் இறங்கும் என்று கனவு காண் கிறாராம் ரவி.''”

rr

"கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு பள்ளியில் நடந்திருக்கும் மர்ம மரணம் திகிலை ஏற்படுத்தி இருக்கிறதே?''”

"கள்ளக்குறிச்சி கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி யே இன்னும் முழுதாக விலகாத நிலையில், அங்கே உள்ள மகாபாரதி பள்ளியில் ஒரு இளைஞர் தூக்கில் பிணமாகத் தொங்கி பகீரை ஏற்படுத்தி இருக்கிறார். பள்ளியின் உரிமையாளரான மகாபாரதி மோகன், "இது தற்கொலைதான்' என்றார். இவர் கள்ளக்குறிச்சியின் சர்ச்சைக்குரிய சக்தி பள்ளியின் தாளாளர் ரவிக்குமாருக்கு நெருக்க மானவர். இவரது கல்வி நிறுவனத் திலும் ஏற்கனவே பல மரணங்கள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந் திருக்கும் நிலையில், இளைஞரின் சடலத்தை வாங்கமாட்டோம் என்று அவரது பெற்றோர்கள் கதற, சடலத்தை பள்ளி நிர்வாகமே மருத்துவமனைக்குக் கொண்டு போனதாம். இந்த விவ காரத்தை மூடி மறைக்கும் முயற்சியில், ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்ததாகவும் சொல்கிறார்கள்.''”

"நெல்லை மாநகராட்சியைச் சேர்ந்த 46 கவுன்சிலர்கள் ஒரு சேர முதல்வருக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் களே?''”

"ஆமாங்க தலைவரே. நெல்லை மாநகராட்சியின் சீர்கேடுகள் குறித்தும், மேயர் சரவணன் மீதான புகார்கள் குறித்து, கடந்த நக்கீரன் இதழில் ’"பணத்தை கொடு வேலை செய்! லஞ்சம் பெற்ற மேயர்!'’என்ற தலைப்பினில் எக்ஸ்குளூசிவ் செய்தி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, ’"நெல்லை மாநகராட்சியில் நடப்பதை உள்ளது உள்ளபடியே நக்கீரனே பதிவு செய்திருக்கிறது. இனியும் எங்களால் பொறுக்க முடியாது. மேயர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்'’என்ற ரீதியில் மொத்தமுள்ள 55 மாமன்ற கவுன்சிலர்களில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் உட்பட 46 கவுன்சிலர்கள் இணைந்து முதல்வருக்குக் கடிதம் எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் அந்த கடிதத்தில் ’ "திராவிட மாடல் ஆட்சியில் உருவான நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள், மனமுடைந்து எழுதும் கடிதம் இது'’ என்று குறிப்பிட்டிருப்பதோடு,’"இனி இந்த மேயர் எங்களுக்கு வேண்டாம்'’ என்று அழுத்தமாக எழுதிக் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதில் முதல் கையெழுத்துப் போட்டிருப்பவர் துணைமேயராம்.''”

"தொழிலதிபர் ஸ்டெர்லிங் சிவசங்கரன் சைடில் சலசலப்பு தெரியுதே?''”

"டெலிகாம் எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில் 1990-களில் கோலோச்சியவர் ஸ்டெர்லிங் சிவசங்கரன். ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமை யாளரான இவர், தொழில் துறையில் பெரும் சரிவை சந்தித்தார். அவர் ஈடுபட்ட தொழில்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில் கடன்காரர் ஆனார். அவர் மீது சி.பி.ஐ. வழக்குகள் தொடுத்தது. அந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில்தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட சிவசங்கரன், சில மாதங்களாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் முகாமிட்டிருக்கிறார். மருத்துவம் சார்ந்த பொருட்களைத் தருவித்து இங்கே விற்பனை செய்துவருகிறாராம். இதன் அடிப்படையில் சிவசங்கரனை மையமாக வைத்து விரைவில் சில சர்ச்சைகள் வெடிக்கலாம் என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.''”

"நானும் எனக்குக் கிடைச்ச முக்கியமான தகவல் ஒன்றை உன்மூலம் பகிர்ந்துக்கறேன். ஐந்து நாள் கஸ்டடி விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த அத்தனையும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதோடு அவரது பதில்கள் ஸ்க்ரிப்டாகவும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட அனைத்தும் அன்றைய தினமே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பார்வைக்காக அமலாக்கத் துறையினர் அனுப்பிவந்தனராம். இப்போது அந்த பதிவுகளையும் ஏற்கனவே டெல்லி சேகரித்த ஆதாரங் களையும் ஒப்பிட் டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடக்கிறதாம்.”