செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக கடந்த ஜூன் மாதம் முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப் பட்டார். அப்போதே, அந்தப் பதவிக்குத் தகுதியுள்ள தணிகா சலம் உள்ளிட்ட மூத்தவர்களை பின்னுக்குத் தள்ளி, தகுதி குறைவான இவர், பா.ஜ.க. சீனியர் லீடர்களில் ஒருவரான சி.பி.ராதா கிருஷ்ணனின் பரிந்துரையில் சமுதாய அடிப்படையில் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் என்ற சர்ச்சைகள் கிளம்பின. நக்கீரனில் விரிவாக வெளிளிட்டிருந்தோம்.
மோடியின் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம்- இந்தி திணிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது. முதல்வர் எடப்பாடி, அண்ணாவின் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் தமிழ் நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி பயிலும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்காது’ என்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
செம்மொழி ஆராய்ச்சி நிறுவன இயக்குநரான சந்திரசேகரனோ, ""தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. பிறமொழி திணிப்பு கிடையவே கிடையாது. தேசியக் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளமும் மொழித் திட்டம் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது’’ என்று முனைவர் கு.சிதம்பரம் என்பவரின் கருத்தில் தன்னை இணைத்து கடந்த 2-ந் தேதி வெளியிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவை, திருச்சி இனாம்குளத் தூரில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான முனைவர் ஜானகிராமன் தன் நண்பர்களுக்கு பர வசத்தோடு பார்வேர்டு செய்து மகிழ்ந்திருக்கிறார்.
""செம்மொழி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதல்வர் எடப்பாடி மும்மொழி பாடத்தை ஏற்கமாட்டோம் என்று அறிவிக்கும் போது, அதன் இயக்குநராக இருக்கும் சந்திரசேகர், தேசிய கல்விக் கொள்கைக்கு லாலி பாடி இருப்பது, அரசு ஊழியர்களின் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானதும் விரோதமானதும் ஆகும்'' என்கிறார்கள் அரசுத்துறை அதிகாரிகள். கு.சிதம்பரம் என்பவர் செம்மொழி நிறுவன இயக்குநரை முகநூல் பதிவில் இணைத்திருந்தால் அதை உடனே நீக்கம் செய்திருக்க வேண்டியது இயக்குநரின் கடமை.
அதிலும் ’அரசு ஊழியரான செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், அரசின் கருத்துக்கு எதிரான கருத்தை முகநூலில் பதிவிட்டி ருப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதோடு, இந்தக் கருத்தைப் பரப்பிய இனாம்குளத்தூர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜானகிராமனும், இக்குற்றத்துக்கு உடந்தையாகி இருக்கிறார். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்’என்றும் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.
வள்ளுவருக்கு காவி பூசியவர்கள் செம் மொழியிலும் கறையான்போல புகுந்திருக்கிறார்கள்.
-ஜெ.டி.ஆர்.