ந்திரா மாநிலத்தில் மந்தராலாயா போகும் வழியில் முக்கியமான சிமெண்ட் ஃபேக்டரி ஒன்று உள்ளது. இதில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு முதலீடு செய்திருக்கிறார் வீரமணி. தென்னிந்தியாவில் புகழ் பெற்ற தனியார் பால் நிறுவனமான திருமலா பால் டைரி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் பிரமானந்தமும் வீரமணியும் நண்பர்கள்.

vvv

சில வருடங்களுக்கு முன்பு திருமலா பால் நிறுவனத்தை விற்றுவிட்டு தற்போது சீனிவாசா பால் டைரியை நடத்தி வருகிறார் பிரமானந்தம். திருமலா பால் நிறுவனத்தை விற்ற வகையில் பிரமானந்தம் உள்பட 8 ஷேர்ஹோல்டருக்கும் பல நூறு கோடிகள் பங்குத் தொகையாக கிடைக்கிறது.

இந்த நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த வீரமணி, தம்மிட மிருந்த 700 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பிரமா னந்தம் மூலமாக குறிப்பிட்ட சிமெண்ட் தொழிற்சாலை யில் முதலீடு செய்திருக்கிறார் இரண்டாவது தவணையாக 300 கோடி இதே வழியில் மடைமாற்றம் செய்யப் பட, வீரமணிக்கு சொந்தமாகிறது அந்த சிமெண்ட் தொழிற்சாலை.

Advertisment

பிரமானந்தத்தின் உறவினரான ராமு ஆஞ்சநேயலு என்பவரை தனது பொலிட்டிக்கல் பி.ஏ.வாகவும் பினாமியாகவும் வைத்திருந்தார் வீரமணி. வருடத்துக்கு 500 கோடி ரூபாயை ஆஞ்சநேயலு வீரமணிக்கு கொடுத்து விடவேண்டும். அதற்கு பதிலாக, பத்திரப் பதிவுத்துறையை யும், வணிகவரித் துறையையும் ஆஞ்சநேயலு விடம் வருடத் துக்கு 300 சி என குத்த கைக்கு விட்டு, வருமானம் பார்க்க வைத் தார் வீரமணி.

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை யில் சிமெண்ட் தொழிற்சாலை வரவில்லை. தற்போது பிடிபட்டுள்ள பணம், மணல், நகை எல்லாவற்றுக்கும் ஏதாவது கணக்கு காட்டிவிடலாம். சிமெண்ட் ஆலை முதலீட்டுக்கு கணக்கு கேட்டால் சிக்கிக் கொள்வார் என்கிறார்கள் அவரது குடும்ப உறவுகளும் நட்பு வட்டத்தினரும்.

cc

Advertisment

தி.மு.க. ஆட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட போதே பதட்டமடைந்த வீரமணி, குறிப்பிட்ட சிமெண்ட் ஃபேக் டரியால் தான் தனக்கு சிக்கல் வரும் என உணர்ந்து கடந்த ஜூன் மாதம் அந்த ஃபேக்டரியை விற்றிருக்கிறார். அதனால், சிமெண்ட் ஃபேக்டரியின் ஜாதகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை தோண்டித் துருவினால் வீரமணி என்கிற விலாங்கு மீன் தப்பிக்கவே முடியாது” என்று கூறுகின்றனர். அந்த சிமெண்ட் ஃபேக்டரி தொடர்பான சில டாகுமெண்டுகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தற்போது கிடைத் திருப்பதாகவும் தெரிகிறது.

சிமெண்ட் தொழிற்சாலையில் வீர மணியின் முதலீடு குறித்து கருத்தறிய பிரமானந்தத்தை தொடர்பு கொண்டபோது, ஃபோனை அட்டெண்ட் செய்த சீனிவாசா பால் நிறுவனத்தின் மேனேஜர் சுப்ரமணியம், "பிரமானந்தம் சார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். சாரும் முன்னாள் அமைச்சரும் நல்ல நண்பர்கள்தான். அதனால் இப்படிப்பட்ட செய்தி பரவுகிறது. மற்றபடி, இருவருக்கும் தனித்தனி பிஸினெஸ்தான். சிமெண்ட் ஃபேக்ட ரிக்கும் பிரமானந்தம் சாருக்கும் சம்மந்த மில்லை'' என்றார்.

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரின் மகன் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவரது பெயரில் சென்னை ஆழ்வார் பேட்டையில் ஒரு பங்களா இருக்கிறது. கடன் பிரச்சனையால் அந்த பங்களாவை அந்த காங்கிரஸ் தலைவர் விற்க முயற்சிக்கிறார். இதனையறிந்த கே.சி.வீரமணி, தனது பினாமியான ஆஞ்சநேயலு மூலமாக, தம்மிடம் குவிந்திருக்கும் லஞ்ச பணமான கறுப்பு பணத்தைக் கொடுத்து அந்த பங்களாவை வாங்குகிறார்.

c

சென்னையில் நடத்தப்பட்ட ரெய்டில் இந்த பங்களா தொடர்பான விபரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு கிடைத்துள் ளது. இதில் தனக்கு சிக்கல் வரலாம் என அந்த காங்கிரஸ் தலைவர், தமிழக ஆட்சித் தலைமையின் தயவுக்காக காய்களை நகர்த்தி வருகிறாராம்.

கே.சி.வீரமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கும் அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் விவாதித்தபோது, ’"வீரமணி 2012 முதல் 2021 வரை 9 ஆண்டு காலம் அமைச்சராக இருந்திருக்கிறார். 2011-ல் மிக குறைவாகத்தான் சொத்துக் கணக்கையே காண்பித் திருக்கிறார். 10 ஆண்டு காலத்துக்கான கணக்கு வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்தால்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என நிரூபிப்பது எளிதாகும். கடந்த 10 ஆண்டுகளில் 76.65 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிக மான சொத்து சேர்த் திருப்பதாக புகார் கொடுத்தோம். ஆனால், லஞ்சஒழிப்புத்துறை 5 ஆண்டுகளுக்கு மட்டும் கணக்கிட்டு 28 கோடி ரூபாய் என வழக்கு பதிவு செய்கிறது.

தவறாக சொத்து சேர்த்துள்ளவர்களை தண்டிப்பது ஒரு பக்கம் எனில், அப்படி சேர்த்த சொத்துக்களை அரசு கஜானாவுக்கு ddகொண்டு வரவேண்டும் என்பது இன்னொரு பக்கம். மீதமுள்ள 5 வருடத்தில் சேர்க்கப்பட்ட வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வீரமணியின் குடும்பத்துக்கு சட்டரீதியான சொத்தாக மாறிவிடும். வீரமணி தனது அஃபிடவிட்டில் சொல்லாத சொத்துக்களின் ஆவணங்களையும் நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருக்கிறோம். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போதுதான் முழுமையான விபரங்கள் தெரியவரலாம்.

வருமானவரித்துறையினர் பல நேரங்களில் துரிதமாக ஆக்ஷன் எடுப்பது கிடையாது. அரசியல் கருவியாகத்தான் அந்த துறை பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் பெனால்டி தொகை கட்டுவதுதான் அதிகபட்ச நடவடிக்கையாக அங்கு இருக்கிறது. லஞ்சஒழிப்புத் துறையை பொறுத்தவரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகுதான் ரெய்டே நடத்தமுடியும். ரெய்டில் கைப் பற்றப்பட்டதெல்லாம் குற்றப்பத்திரிகையில் கொண்டுவர முடியும். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அதுதான் நடந்தது. அதனால்தான் 18 ஆண்டுகளானாலும் அவர்களால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அந்த வகையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு கொஞ்சம் வலிமையானதுதான்.

அதேசமயம், வழக்கை துரிதமாக முடித்து தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்பு வதுதான் முக்கியம். துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், தினமும் ட்ரையல் நடத்தி விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கிறது. ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்போம் என வாக்குறுதி தந்தது தி.மு.க. அதற்கான முயற்சியை காணோம். அரசியல்வாதிகளுடன் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் ஊழலுக்குத் துணை போகக்கூடாது என அவர்களுக்கு பயம் வரும். வேலுமணிக்கு எதிரான வழக்கில் அதிகாரிகள் சிலரின் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. குறைந்த பட்சம் அவர்களை சஸ்பெண்ட் கூட செய்யவில்லை இந்த அரசு. அமைச்சர்களின் பெயர்களை மட்டுமே குற்றப்பத்திரிகை யில் லஞ்ச ஒழிப்புத்துறை சேர்க்குமானால், ஊழலை ஒழிப்போம் என்ற நோக்கமே சிதைந்துவிடும்'' என்கிறார் ஜெயராம் வெங்கடேஷ்.

_________________________________

இறுதிச்சுற்று

vaiko

கருப்புக்கொடி போராட்டம்!

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி சோனியா தலைமையில் கூடிய 19 எதிர்க்கட்சிகள், மத்திய அரசை எதிர்த்து நாடெங்கும் 10 நாள் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்தன. அதன்படி வேளாண் சட்டம், பெட்ரோல், எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், மக்கள் விரோதச் சட்டங்கள் ஆகியவற்றைக் கண்டித்தும் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆ.ராசா தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்திலும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தேனாம்பேட்டையிலும் வைகோ தலைமையில் அண்ணா நகரிலும் மற்றும் தமிழகமெங்கும் மத்திய அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

-மணி