பழி வெறியும் பதவிக் கனவும்!
இது என்ன புதுக்கதையா இருக்குன்னு யோசிக்கிறீங்கள்ல... புதுக்கதை இல்ல, அது பழைய கதைதான். ஆனா நெறைய பேருக்கு நாம சொல்றது புதுக்கதையா இருக்கும். இப்ப நம்மள மாதிரி அந்தம்மாவ தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு வர்றவங்களுக்கு அது பழைய கதைதான். ஏன்னா... 91-ல ஆட்சிக்கு வர்றாங்க ஜெயலலிதா. அதுவும் ஒரு உல்டாதான்... காரணம் ராஜீவ் கொலை. ராஜீவ் கொலைக்கு முன்னாடி அந்த அம்மா பதவிக்கு வர்றதா யார் சர்வேயிலயும் சொல்லல. ஆனா ராஜீவ் கொலைக்குப் பிறகு அந்தம்மா லம்ப்பா நெறைய எம்.எல்.ஏ.க்களோட ஜெயிச்சி வந்திடுச்சி. வந்ததும் வராததுமா உடன்பிறவா சகோதரிகள் ரெண்டுபேரும் சேர்ந்து காய்ஞ்ச மாடு கம்மங் கொல்லையில மேய்ஞ்ச மாதிரி லம்ப் லம்ப்பா குண்டக்க மண்டக்கன்னு சொத்துக்கள வாங்கிக் குவிச்சு மாட்டிக்கிட்டாங்க. அதுக்கப்புறம் பழிக்குப் பழி வாங்குறதெல்லாம் நெறைய பண்ணிச்சி. அதெல்லாம் விடுங்க... அது பெரிய எபிசோட். அப்புறம் 96 எலெக்ஷன்ல செம அடி வாங்கிச்சி. 2001-ல மறுபடியும் ஜெ.வோட பேய்த்தனமான ஆட்சி. அப்பதான் கலைஞர் அரெஸ்ட்டு, வைகோ அண்ணன், ஐயா நெடுமாறன், சுப.வீ. அண்ணன் நெக்ஸ்ட் நான். இப்படி எல்லாரையும் ஜெயில்ல போட்டாங்க. அடேங்கப்பா... அப்படி ஒரு கோரதாண்டவம்
இப்ப அந்தம்மா தமிழக முதல்வர்ங்கிற ஒரு எல்லைய முடிச்சிருச்சி. இதுக்கு அடுத்த எல்லைய தொடணும்னு ஆசைப்படுது அதுதான்... ட.ங.. 2004 பாராளுமன்றத் தேர்தல் வரப்போகுது.
தமிழ்நாடு எம்.பி. ஒருத்தரு எங்கிட்ட ஒரு விஷயத்தச் சொன்னாரு. "ஜெயலலிதா, சசிகலா இவங்க ரெண்டு பேரையும் உங்களுக்குத் தெரியும். அவங்க ரெண்டு பேருதான் இப்ப இருக்காங்க. இவங்கள கவனிக்கிறதுக்கு, சமைச்சுப் போடறதுக்கு விரல்விட்டு எண்ணுற அளவுக்கு வேலைக்காரங்க இருக்காங்க, அவ்வளவுதானே... அப்புறம் எதுக்கு இந்த பிரம்மாண்டமான கொடநாடு பங்களாவும் பையனூர் பங்களாவும்? கொடநாடு பங்களாவுல மட்டும் பைவ் ஸ்டார் ரேஞ்சுல 90 சொகுசு அறைகள் இருக்கு. அதே மாதிரி சிறுதாவூர் பங்களாவுலயும் அதைவிட கொஞ்சம் குறைவான எண்ணிக்கைல சொகுசு அறைகள் இருக்கு. அத்தனை அறைகள் அங்க எதுக்கு? பரந்து விரிஞ்ச ஒரு ஏரியாவுல பெரிய, பெரிய அளவுல இத்தனை பங்களாக்கள் ஏன் இருக்கணும்''னு கேட்டார். நான் உடனே, "ஆமா ஏன் அப்படி''ன்னு அவர்ட்டயே திரும்பக் கேட்டேன். "எல்லாம் ஒரு காரணத்துக்காகத் தான்'' அப்படின்னாரு அவரு.
அந்தக் காரணம்தான், இப்ப நான் சொன்னேன்ல ஒரு புது கதை... அதாவது, 2004-ல பாராளுமன்ற எலெக்ஷன். அப்ப அந்த அம்மாவுக்கு பிரதமர் ஆசை வருது. முதல்வர் நாற்காலி சலிச்சிடுச்சி. அந்த அதிகாரத்த வச்சி, நெறைய பணம், சொத்து சம்பாதிச்சாச்சு. பழிவாங்க வேண்டியவங் களயெல்லாம் பழி வாங்கியாச்சு. அந்தப் பதவிய வச்சி என்னென்ன அநியாயம் லாம் பண்ணணுமோ அதெல்லாத் தையும் பண்ணியாச்சு. ஒரு முத லமைச்சரா இருந்து என்னென்ன உச்சத்த தொடணுமோ, அதை யெல்லாம் அந்தம்மா தொட்டு டிச்சு. உங்க எல்லாருக்கும் நல்ல ஞாபகம் இருக் கும்னு நெனைக்கிறேன்.
1998 பிப்ரவரி, கோவை குண்டு வெடிப்பு.
பி.ஜே.பி. கூட் டணியில இருக்குற அ.தி.மு.க. பாராளு மன்றத் தேர்தல்ல ஜெயிச்சது. இவங்க எம்.பி.க்கள் ஆதரவு கணிசமா இருந்தா தான் வாஜ்பாய் பிரதமராக முடியும். அதற்காக ஆதரவுக் கடிதத்த (கூட்டணி யில் இருக்கிறதால ஆட்டோமேட்டிக்கா குடுக்கணும்) இந்தப் பொம்பள குடுக்கல, இழுத்தடிச்சது. அத வாங்க வந்த ஜஸ் வந்த்சிங் (மத்திய அமைச்சர்) வாசல் லயே காத்துக் கிடந் தார். நல்லா இழுத் தடிச்சி ஆதரவுக் கடிதம் குடுத்துச்சி. ஆனா நிறைய டிமாண்ட் வச்சுதான் குடுத்துச்சு.
டிமாண்ட் 1: சட்டத் துறை. அதற்குக் காரணம் தன்னை கைது பண்ணச்சொன்ன நீதிபதி, அதற்கு காரணமானவங்கள பழிவாங்கணும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறணும். (மொத்தம் 13 வழக்குகள்).
டிமாண்ட் 2: தி.மு.க. ஆட்சிய கலைக்கணும்.... இதுதான் முக்கியமான அஜெண்டா. இத வைச்சுதான் கூட்டணியில சேர்ந்தாங்க.
வாஜ்பாய் கவர்மெண்ட். அதோட ஆயுசு வெறும் 13 மாசம்தான். 13 மாசம் மத்திய அரச உலுக்கி எடுத்துருச்சு புண்ணியவதி ஜெயலலிதா. அப்டியே ரீ-கலெக்ட் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும். 13 மாசம் முடிஞ்ச பிறகு ஜெயலலிதா, சோனியா, சு.சாமியோட கூட்டு சேர்ந்து டெல்லியில ஒரு டீ-பார்ட்டி வச்சு முடிஞ்ச கையோட வாஜ்பாய் ஆட்சிய எடுத்தேன் கவுத்தேன்னு கவுத்திட்டாங்க.
ஆட்சிய கவுத்தவுடனே மெஜாரிட்டி போயி, பதவி போன அடுத்த நாள், வாஜ்பாய் சொன்ன ஒரு முக்கியமான வார்த்த... "நேற்று இரவுதான் நான் நிம்மதியா தூங்கினேன்'. காரணம்... அவரு வேற யாரையும் சொல்லல, ஜெயலலிதாவத்தான் சொன்னாரு. அதாவது... மத்திய அமைச்சர் பதவிய வச்சு நொய் நொய்யுனு வாஜ்பாய போட்டு பிச்சு எடுத்து தனக்கு வேண்டாதவங்கள பழிவாங்கி முடிச்சிடிச்சின்னு சொன்னேன்ல, அதுக்கு ஒரு சின்ன உதாரணமும் சொல்றேன். அது என்னன்னா...?
98-ல மத்திய அரசுல அ.தி.மு.க. பங்கெடுத்தாங்க இல்லியா... அதுல தம்பிதுரைக்கு சட்ட அமைச்சர் பதவி கேட்டாங்க. சட்டத்துறை அமைச்சரானவுடனே தம்பித்துரைக்கு மொத வேல என்ன தெரியுங்களா?
மறுபடியும் ஒரு பிளாஷ்பேக்...
1996-ல் இந்தம்மா மேல பல ஊழல் வழக்குக அப்ப ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசாங்கத்தால போடப்பட்டுச்சு. அதுல ஒண்ணு கலர் டி.வி. வழக்கு. அந்த வழக்குல இந்தம்மா மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணம் ஆகுற மாதிரி பிரைமாபேசி (முகாந்திரம்) இருந்தது. இருந்தும் அரெஸ்ட் பண்ணாம காலந்தள்ளுனது போலீஸ்.
ஒருகட்டத்துல விஷயம் கோர்ட்டுக்குப் போச்சு. உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா, "இந்த வழக்குல இவ்வளவு ஆதாரம் இருக்கு... ஜெயலலிதாங்கிறவங்க மேல பிரைமா பேசியும் இருக்கு... ஏன் கைது பண்ணல? உங்களுக்கு அவங்க மேல எதும் பயமா?''ன்னு ஓபன் கோர்ட்ல கேட்டுப்புட்டார்.
அதற்கு அரசாங்க P.P., Your Honour நீங்க warrant issue பண்ணினா arrest செய்யுறோம்னார். உடனே issue the warrant-ன்னு சொன்னதன் பேரில் ஜெயலலிதாவை 96, டிசம்பர் 7 அன்னிக்கு arrest பண்ணினாங்க.
இத மனசுல வச்சுக்கிட்டு அந்த நீதிபதிய பழிவாங்கத் தான் சட்ட அமைச்சர் பதவி வேணும்னு அடம்பிடிச்சு வாங்கி, அதே சிவப்பாவ, மத்திய சட்ட அமைச்சரா இருந்த தம்பிதுரை, சிவப்பா மேல ஏதோ அவரோட Birth Certificate பிரச்சினை ஒண்ண வச்சு அவரை பதவி இறக்க ஆணைய வாங்கிட்டு டெல்லியில் இருந்து ஒரு ஸ்பெஷல் ப்ளைட்ல சென்னைக்கு வர்றாரு.
சென்னை ஹைகோர்ட். மத்தியானம் 3:00 மணி இருக்கும். டயஸ்ல உக்காந்திருந்த நீதிபதி சிவப்பாவ பார்த்து, "மிஸ்டர் சிவப்பா "யு ஆர் நாட் எலிஜிபிள்'னு கடுமையான வார்த்தைகளச் சொல்லி, நீங்க அங்க உக்கார்றதுக்கான அருகதைய இழந்துட்டீங்க... மொதல்ல கீழ இறங்குங்க அப்படின்னு ஒரு மத்திய அமைச்சர் ஓப்பன் கோர்ட்ல போய் கத்துறாரு. அதாவது... எந்த ஒரு சிவப்பா தன்ன கைதுபண்ண வாரண்ட் கொடுத்தாரோ, அந்த சிவப்பாவ பழி வாங்குறதுக்குன்னே மத்திய அரசுல பங்கெடுத்து சட்டத்துறை அமைச்சர வாங்கி ஓப்பன் கோர்ட்ல போயி சிவப்பாவ அசிங்கப்படுத்துறதுக்கு வாஜ்பாய் ஆட்சியை பயன்படுத்திக் கிச்சு. இதுதான் பழிக்குப்பழி. இப்படி, தான் வகிச்ச பதவி மூலமா யாரை யெல்லாம் பழி வாங்கணுமோ அவங்களயெல்லாம் பழி வாங்கியாச்சு. அடுத்து ஜெயலலிதாவுக்கு ஒரு யோசனை வந்துச்சு. இப்படியே நம்ம ஏன் வேற வேற ட.ங.கள தொங்கணும். நாமளே P.M.. ஆயிட்டா... அட்றா சக்க... அட்றா சக்க!
(புழுதி பறக்கும்)