இப்ப நடந்திருக்கும் ஆட்சி மாற்றம், பெரும் நிம்மதிய ஏற்படுத்தியிருக்கு. இந்த நேரத்தில், கடந்த காலத்தை லேசா திரும்பிப் பார்த்தாலே சொர சொரங் குது. அப்படிப்பட்ட கடுமையான கால கட்டத்தை எல்லாம் தாண்டி, தமிழ்நாடு இப்ப ஒரு பாதுகாப்பு எல்லைக்குள்ள வந்த மாதிரி தோணுது. காரணம், கடந்த காலங்கள்ல ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அப்படி.
’கிளியோபாட்ராவின் மூக்கு மட்டும் கொஞ்சம் வளைஞ்சிருந்தா, ரோமாபுரியின் வரலாறு நேரா இருந்திருக்கும்னு சொல்வாங்க. அதே மாதிரி, ஜெயலலிதா மட்டும் அரசியலுக்கு வராம, நடிகையாவே இருந்துட்டுப் போயிருந்தா, தமிழ்நாட்டோட வரலாறே வேற மாதிரி இருந்திருக்கும்.
ஜெயலலிதா இல்லைன்னா, அ.தி.மு.க.ங்கிற கட்சி, 1991-ல் இருந்து கடந்த 30 வருசங்களா நடத்திக்கிட்டு இருக்குற அரசியல் நொண்டியடிப்பை, தமிழ்நாடு பார்த்திருக்காது. மதவாத சக்திகள், இப்ப மாதிரி இங்கே, கால் பதிச்சிருக்காது. குறிப்பா, பா.ஜ.க.வின் ஆக்டோபஸ் கைகள், இங்கே கண்ட இடங்கள்லயும் சுதந்திரமா நுழைஞ்சிருக்காது. நீட் தேர்வுங்குற ’உயிர்க்கொல்லி’ இங்க நடைமுறைக்கு வந்திருக்காது. மாநில உரிமைகளுக்கு இப்ப இருக்கற மாதிரியான, நெருக்கடிகள் உண்டாகி இருக்காது. டெல்லியின் எடுபிடிகளா-அடிமைகளா வளைஞ்சி குழைஞ்சி நின்னவங்க கூட அரசியலுக்கே வந்திருக்க மாட்டாங்க.
இன்னும் சொல்லணும்னா...
கடந்த காலங்கள்ல, தமிழ்நாட்டு அரசியல், மன்னார்குடிக் கும்பலின் சூதாட்டக் களமா மாறி இருக்காது. நீதித்துறையே திகைச்சிப் போற அளவுக்கு அ.தி.மு.க.வின் மிக மோசமான ஊழல் கைகள், இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்திருக்காது. அடாவடி அரசியல், தமிழ்நாட்டுக்குள்ள தலையைக் காட்டியிருக்காது. கொடூரமா பழிவாங்கற ஈனபுத்தி கூட, இப்ப உள்ள அளவுக்கு, அரசியல்ல பரவியிருக்குமாங்கிறது சந்தேகம்தான்.
ஜெயலலிதாவின் கோணல் வரலாற்றில் அவர் தோழி சசிகலாவுக்கும் முக்கிய பங்கு இருக்கு. அதை எந்தக் காலத்திலும் மறந்துட முடியாது. 82-கள்ல, நடிகையா இருந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் எந்த நேரத்துல சந்திச்சாங்களோ, அப்பவே தமிழ்நாட்டுக்கு சனி பிடிக்க ஆரம்பிச் சிடிச்சி. அந்த சனி, இப்பவும் விடமாட்டேன்னு அடம்பிடிக்கிது. செத்துப் போனவங்களை விமர் சிக்கிறது நாகரிகம் இல்லைன்னு சொன்னாலும், அரசியல்லயும் பொது வாழ்க்கைலயும் இருந்த ஒருத்தரை, மரணத்தைக் காரணம் காட்டி, நாம் விட்டுட்டுப் போகமுடியாது. ஜெயலலிதாங்கிற பிம்பம், தமிழக அரசியலை, ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுப் போயிருக்கு.
அதே மாதிரி ஜெயலலிதா இல்லைன்னா, நக்கீரன் வரலாறு சுவாரஸ்யம் இல்லாமப் போயிருக்கும். மோசமான சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, இந்தியாவே இதுவரை கண்டிராத, தன்னை விமர்சிக்கும் பத்திரிகைகளை காலால் மிதித்து நசுக்க நினைத்த கொடுங் கோலாட்சி ஒன்றைச் செய்த ஜெயலலிதாவை எதிர்த்து, நக்கீரன் குடும்பம் உயிரை பணயம் வைத்து 33 வருடங்களாக போராடி குறைந்தபட்ச வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம்.
நக்கீரனைப் பரம எதிரியா நினைச்ச ஜெயலலிதா, தனக்கு நினைவு இருந்தவரை, நக்கீரனுக்கு எதிரா களத்தில் வாள் சுத்தினார். அவர் மூலம் கிடைச்ச ஒவ்வொரு காயமும், நக்கீரனுக்குப் பதக்கமா ஆயிருக்கு.
ஜெயலலிதாவுக்கு இயல்பாவே பிடிவாத குணமும், மொரட்டுத்தனமும், சாகஸ புத்தியும் ஜாஸ்தி. அதை எம்.ஜி.ஆரே அதிகம் அனுபவிச் சிருக்கார். அதுக்குள்ள போறதுன்னா நிறைய போகணும். எம்.ஜி.ஆரால். செயல்பட முடியாது. என்னை முதல்வராக்குங்கன்னு பிரதமரா இருந்த ராஜீவ்காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதிய அந்த ஒரு சம்பவமே, உதாரணத்துக்குப் போதும். ஜனநாயகத்தைப் பத்தியோ, கருத்துச் சுதந்திரத்தைப் பத்தியோ கவலைப்படாதவர் ஜெயலலிதா.
சந்தர்ப்ப வசத்தால் தமிழக முதல்வரா ஆன ஜெயலலிதாவுக்கு, சினிமா நடிகைங்கிற முகத்தைத் தாண்டி, அடாவடி, பழிவாங்கல், ஊழல்னு சில வேண்டாத முகமூடிகள் இருந்துச்சு. அதனால் தான், அவருடைய முகமூடியை ஊடக தர்மத் தின்படி, நக்கீரன் தொடர்ந்து கிழிக்க ஆரம்பிச்சிது. அதனால்தான் நக்கீரனை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிச்சிடணும்னு அவர் தொடர்ந்து முயற்சி செஞ்சார். நக்கீரன் அவ்வளவையும் தைரியமா எதிர்கொண்டு ஜெயிச்சிது.
நக்கீரனுக்கு மிக மோசமான எதிரியா போயஸ் கார்டன் இருந்துச்சு. கார்டனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்க என்கிற கதை எல்லாம் நக்கீரனுக்கு நல்லாத் தெரியும். பிடிக்காதவங்களைப் பழிவாங்கணும். அப்படிப் பழிவாங்கறதுக்குதான் பதவிங்கிற மனோபாவம் கார்டனுக்கு இருந்தது.
பழிவாங்கத் திட்டம் தீட்டறது ஜெய லலிதான்னா, அதை மன்னார்குடி கும்பல் மூலமோ, கட்சி நிர்வாகிகள் மூலமோ, திரைமறை வில் இருந்து அதை செயல்படுத்தறவரா சசிகலா இருந்தார். இவங்க ரெண்டு பேரும் போயஸ் கார்டனை மர்ம மாளிகையா ஆக்கி, அங்கே பழி வாங்கும் சதுரங்க ஆட்டத்தை ஆட ஆரம்பிச் சாங்க. ஜெயலலிதா முதல் முதலா 1991-ல் முதலமைச்சரா ஆனார். அப்ப அவருக்குப் பின்னால் இருந்துக்கிட்டு, அதிகாரத்தை வச்சி, சொத்துக்களை குவிச்சதெல்லாம் சசிகலா கும்பல்தான். கங்கை அமரனுக்கு சொந்தமான இடத்தை கூட ஜெயலலிதா பெயரைச் சொல்லி, சசிகலா கும்பல் ஆட்டயப்போட்டுச்சு.
ஆட்சியில் உட்கார்ந்த வேகத்திலேயே, தி.மு.க. ஆட்சியின் உள்துறைச் செயலாளரா இருந்த நாகராஜன் ஐ.ஏ.எஸ். கைது செய்யப்பட்டு, ஜெயில்ல அடைக்கப்பட்டார். காரணம், அரசியலை விட்டே விலகப் போறதா ஜெயலலிதா, எழுதிவச்சிருந்த கடிதத்தை, நாகராஜன் வெளியிட்டார்ங்கிற கோபம் அவருக்கு.
அடுத்ததா கார்டனின் பழிவாங்கும் பார்வை, நக்கீரன் மேல் திரும்புச்சு. ஆட்சியை விமர்சிச்சி தலையங்கம் எழுதினோம்ங்கிற காரணத்துக்காக, ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிச்சபடி, என்னைக் கைது செய்தது அ.தி.மு.க. அரசு.
இப்படிப் பழிவாங்கும் வரிசையில் போயஸ் கார்டனிடம் அடுத்ததா, சிக்கியவர், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம். டான்சி ஊழல் விவகாரத்தை அவர் கிளறினார்ங்கிற கோபத்தில், அவரைத் தீர்த்துக்கட்ட நினைச்சது இந்த அதிகாரக் கும்பல். அதுக்காக, வெல்டிங் குமார்ங்கிற ரவுடி தலைமையிலான ஒரு கூலிப்படையை அனுப்பி, சண்முகசுந்தரத்தை வெட்டித் தள்ளினாங்க.
அதேமாதிரி, அரசு நிறுவனமான சிட்கோ வின் இயக்குநரா இருந்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ்., ஸ்பிக் நிறுவனத்துக்கு சாதகமா நடக்கலைன்னு, அவரைத் தீர்த்துக்கட்ட நினைச்ச கார்டன், மும்பைல இருந்த சுர்லாங்கிற கேடியை விட்டு, அவர் முகத்தில் ஆசிட் அடிக்க வச்சாங்க. 1992 மே 19-ம் தேதி நடந்த அந்த கொடூரம், தமிழ்நாட் டையே அப்ப பதைபதைக்க வச்சிது. முகமெல் லாம் உருக்குலைஞ்ச நிலையில், அவரும் நல்லவேளையா உயிர் பொழைச்சிட்டார். இப்ப அவங்க இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க, அது வேற விஷயம்.... இப்படி தனக்குப் பிடிக்காதவங்க யாரா இருந்தாலும் அவங்களை சும்மா விடக்கூடாதுங்கிற அரக்கத்தனம் கார்டனுக்கு இருந்துச்சு.
அந்த வரிசைல, 2001-ல் மறுபடியும் அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா முதல்ல கலைஞரை குறிவச்சார். சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. கவர்மெண்டு, தன்னையும் சசிகலாவையும் கைது செய்து ஜெயில்ல வச்சதுக்கு, கலைஞரைப் பழிவாங்கியே ஆகணும்னு துடிச்சார். அதுக்கு அவர்மேல் போடப்பட்ட மேம்பால வழக்கை சாக்காக்கி, படுபாதகத் திட்டம் உருவாக்கப்பட்டுச்சு. அதன்படி, 2001 ஜூன் 29-ந் தேதி நடு இரவுல, ஜெயலலிதாவின் கூலிப்படை மாதிரி, அப்ப இருந்த காவல்துறை அதிகாரி முருகேசன் தலைமையில் ஒரு போலீஸ் படை, கலைஞரின் ஆலிவர் ரோடு வீட்டுக்கு போச்சு. அந்த டீமில் அப்ப சிட்டி கமிஷனரா இருந்த முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.ஐ.ஜி. முகமது அலி, டி.ஐ.ஜி. ரவீந்திரநாத்தெல்லாம் இருந் தாங்க. அங்க கலைஞர் வீட்டு கேட்டில் இருந்த பூட்டைப் பார்த்ததும், அதைத் துப்பாக்கியின் பின் கட்டையால் உடைச்சித் திறந்துக்கிட்டு, கிடுகிடுன்னு வீட்டுக்குள்ள போய், மாடியில் இருந்த கலைஞரின் பெட்ரூம் கதவை உடைச்சுட்டு, அந்த போலீஸ் டீம் உள்ளே போனது. பெட்ல கைலியோட படுத்திருந்த கலைஞர்.... தன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள...
”உங்கள அரஸ்ட் பண்றோம்னு சொல்லிட்டு, அவருக்கு உடை மாத்தக் கூட அவகாசம் கொடுக்காம, முத்துக்கருப்பனும், முகமது அலியும் அவர் கையைப் பிடிச்சி இழுக்க, தெலுங்கு பட வில்லன் மாதிரி ஆஜானுபாகுவா இருந்த முருகேசன், கலைஞரின் எலும்புகள் நொறுங்கற மாதிரி, அவரை அப்படியே இறுக்கிப் பிடிச்சி, மாடிப் படிக்கட்டுகள்ல, அங்கும் இங்கும் ஆட்டியபடியே, இழுத்துக்கிட்டு வந்தார். அந்த கொடூரக் காட்சியையும், அப்ப வலி தாங்கமுடியாத கலைஞர் “ஐயோ கொல்றாங்கப்பா... கொல்றாங்கப்பா....”ன்னு அலறியதையும் இப்ப நினைச்சாலும், அது மனசப் பிசையுது. போயஸ்கார்டனுக்கு அவ்வளவு வன்மம்.
இதேபோல் ஸ்ரீரங்கத்தில் 2011-ல் ஜெயலலிதா போட்டியிட் டப்ப, கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், அவருக்கு எதிராக் களத்தில் இறங்கி கடுமையா வேலை பார்த்தார். அந்தக் கோபமும், வெறுப்பும், ராமஜெயத்தின் மேல் கொலை வெறியாமாறுச்சு. அதன் விளைவு?
2012 மார்ச் 29-ந் தேதி, ராமஜெயம், தன் வீட்ல இருந்து வாக்கிங் போன நேரத்தில், அதிரடியாக் கடத்தப்பட்டு, படுகொடூரமா, உடலெல்லாம் குதறப்பட்ட நிலையில், கல்லணைக்குப் பக்கத்தில் சடலமாக் கிடந்தார். அவங்க ஆட்சிக் காலம்கிறதால், கொலைக் குற்றவாளிகள் கண்டறியப்படலை. இப்போவரை ஆட்சி மாறியதால், விரைவில் குற்றவாளிகள் அகப்படுவாங்கன்னு நினைக்கிறேன்.
இதே போலத்தான் என்னையும் நக்கீரனையும் கார்டன் குறிவச்சிது. அதுக்காக கார்டன் தீர்மானிச்ச ’கொலை முகூர்த்த நாள்தான் 2012 சனவரி 7.
(புழுதி பறக்கும்)