(250) நரியோட நாட்டாமை!
"போராடித் தோற்பதும் வெற்றிக்கு சமம் என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லி வளருங்கள்'னு ஒரு பொன்மொழி. போராடித் தோற்பது வெற்றிக்கு சமம்ங்கிறத நம்ம பிள்ளைகளுக்குச் சொல்றோமோ இல்லையோ... இந்தப் "போர்க்கள'த் தொடர விடாம படிக்கிற வாசக சகோதரர்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்.
ஏ...யப்ப....யப்பா... எத்தன கஷ்டம்... எத்தன போராட்டம்... எத்தன துரோகம். எல்லாத்தையும் கடந்துதான் இந்த 250-வது போர்க்களத் தொடர்.
"இன்றைய உலகத்துல சரியா இருக்கிறவன் சங்கடத்த அனுபவிக்கிறான்... நரியா இருக்கிறவன் சந்தோஷத்த அனுபவிக்கிறான்'. நாங்க சங்கடத்த மட்டுமே அனுபவிச்சுட்டு ஓடுறோம்... ஓடுறோம்...
சீனியர் பெருமாள் சொன்னதைக் கேட்டு எனக்கு கொஞ்சம் வேர்த்துப் போச்சு. என்னடா இது மறுபடியும் ஒரு "க்'கன்னா... வைக்கிறாருன்னு. மறுபடியும் இன்னொரு டீக்கடையில நிறுத்தி, இன்னொரு டீ அடிச்சுட்டு வர்றது வரட்டும்னு யோசனையிலயே கௌம்புனேன்.
அடுத்த நாள் டி-1 போலீஸ் ஸ்டேஷன்ல நம்ம அட்வகேட் சிவகுமாரோட ஆஜர். டி-1 ஸ்டேஷன் ஏ.சி.பி. செந்தில்குமரன். "சாயங்காலம்தான் உங்கள விசாரிக்கிறதாச் சொன்னார்'னு சொன்னாங்க.
திரும்பவும் சாயங்காலம் டி-1 போலீஸ் ஸ்டேஷன். மாலை சரியா 5 மணி.
கேள்வி மேல கேள்வி. இருபது பக்கம்கேள்வி எழுதி வச்சு கேட்டுக்கிட்டே இருந்தாரு.
"நீ யாரு... எங்க பொறந்த... எங்க வளர்ந்த....? ஏன் பத்திரிகை ஆரம்பிச்ச... எப்படி ஆரம்பிச்ச? பணம் எங்க இருந்து வந்துச்சு? குடும்பம் எங்க... குடும்பத்துல, யார், யார்...? குடும்பத் தொழில் என்ன? உங்க வீட்டுல யாராவது பத்திரிகை நடத்தியிருக்காங்களா? அப்பா பியூன்... ஏன் சார் நீங்க தேவையில்லாம இந்த பத்திரியை ஆரம்பிச்சு, எங்களுக்குத் தொல்ல குடுக்குற'ன்னாரே பாக்கலாம்.
"சரிதான், சனியன் சடுகுடு விளையாட ஆரம்பிச்சுருச்சு'னு நெனைச்சுட்டு... "ஏன் சார், பியூன் பையன் பியூனாதான் வேலை செய்யணுமா? எனக்கு உங்க கேள்வியே புரியல?''ன்னேன்.
உடனே அந்த போலீஸ்கார் சுதாரிச்சுட்டு, "இல்ல... சும்மாதான் கேட்டேன்''ன்னாரு.
இப்படி எசகுபிசகா ஒரே ரவுண்டு கட்டி கேள்வி மேல கேள்வி.
சளைக்காம பதில் சொன்னோம்.
"இந்தச் செய்தி போட்டதுக்கு ஆதாரம் எங்கே? யார் எழுதுனது? உமர் முக்தார் யார்? உமர்முக்தார்னு ஏன் பேரு வச்சீங்க? தீவிரவாதி பெயராட்டம் இருக்கு. இதுக்கே உன்ன உள்ள வைக்கலாம் தெரியுமா?''ன்னு அந்த ஆளுபாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்காப்டி.
சரிதான்... நாம நினைச்ச மாதிரி இன்னிக்கு எஃப்.ஐ.ஆர போட்டு தூக்கப்போறாங்க போலன்னு நெனைச்சுக்கிட்டிருக்கும்போது... டக்குன்னு அந்தாளு, "சரி சார் வாங்க உங்க ஆபீசுக்குப் போய் அந்த ஆதாரத்த எடுப்போம்''னு தொப்பிய மாட்டிட்டு நின்னாரு.
நரியோட நாட்டாமை நமக்கு புரிஞ் சுருச்சு. சடுகுடு விளையாட ஆரம்பிச்சுருச்சு நரி. அப்படியே நம்மளக் கொத்தா தூக்கி ஆபீஸ் பக்கம் தலையக் காட்டிட்டு மறுபடியும் உள்ள வைக்க பெருசா ஏதோ ப்ளானோடதான் இருக் காய்ங்கன்னு மட்டும் எனக்குத் தெரிஞ்சுச்சு. நாங்க ஒருத்தருக் கொருத்தர் மூஞ்சப் பாத்துக் கிட்டோம்.
"வாங்க சார்...''னு எங்களக் கௌப்புனாரு. பெல் அடிச்சு ஜீப்ப ரெடிபண்ணச் சொன்னாரு.
"சார்... இங்க பாருங்க, நாங்க எங்கயும் வரமாட்டோம். கண்டிசன் பெயில்ல உங்க கிட்ட ஆஜராகத்தான் சொல்லியிருக்கு. ஆனா நீங்க கூப்புடுற இடத்துக்கு கூடவரணும்னு ஒண்ணும் முன்ஜாமீன்ல சொல்லல. நாங்க யாரும் இதுக்கு ஒத்துழைக்க முடியாது''ன்னு சொன்னோம். சொல்லிட்டோமேயொழிய மனசுக்குள்ள கிதுக்... கிதுக்...னுதான் இருந்துச்சு. தோள் ஏறி உக்காந்த சனியன் இன்னும் இறங்குறபாடு இல்ல.
உடனே அந்த போலீஸ்கார், "சார்... நீங்க எங்க விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கு றீங்கன்னு நான் கோர்ட்ல சொல்லவேண்டி வரும்''னாரு.
எங்க அட்வகேட், "நாங்களும் சொல்றோம் சார். நீங்க குடுத்த கண்டிஷன் பெயில்ல இவர் சொன்ன மாதிரி இல்லன்னு சொல்றோம்''னார்.
தலையச் சொறிஞ்சுட்டு உக்காந்தாரு.
"யெஸ்... நீங்க கிளம்பலாம்.''
"இதுல ஒரு கையெழுத்துப் போட்டுட்டுக் கிளம்புறோம்''னு சொன்னோம்.
வேண்டா வெறுப்பா கையெழுத்து வாங்குனாரு. கையெழுத்து போடாம கிளம்புனா, அதுவே நமக்கு எதிரா போயிரும்ல... அதான்.
"யோவ்...''னு வெளிய நின்ன போலீஸ கூப்புட் டாரு. "இவங்கள அனுப்பு''ன் னாரு.
ஒரு விஷயம்... நம்ம சீனியர் பெருமாள் சார் சொன்ன மாதிரி, புது எஃப்.ஐ.ஆரு, கிப்.ஐ.ஆருன்னு ஒரு சனியனும் இல்ல... அதுவரைக்கும் சுத்தம்.
நேரம் 8:30 மணி. 5 மணிக்கு ஆரம்பிச்சு ஒண் ணுக்குக்கூட போகாம 3 1/2 மணி நேரம் கேள்வியா கேள்வி கேட்டு ஆள கொண்டேபுட்டாரு அந்த ஏ.சி.பி.
வெளிய போய் போன் பேசினாப்டி.
"சரி சார்... கிளம்புங்க. நாங்க கூப்பிட்டா எப்பன் னாலும் வரணும்''னு சொல்லி அனுப்புனாரு.
"கஷ்டம் வரும்போது கண்ண மூடாத. அது உன்னக் கொண்டே போடும். கண்ண நல்லா தொறந்து பாரு... அத ஜெயிச்சுடலாம்''னு சொல்லுவாங்க.
எஃப்.ஐ.ஆர்ங்கிற மொத்த கஷ்டத்தையும் டேபிள் மேல குமிச்சு வச்சாரு அட்வகேட் சிவா. வச்சது போதாதுன்னு, "இருங்கண்ணே... இன்னைக்கு ஒரு அஞ்சு எஃப்.ஐ.ஆர் வந்துச்சுன்னு அதையும் அதுக்கு மேல வச்சாரு. அம்மாடி... அம்மாடியோவ்...
(புழுதி பறக்கும்)