(148) கரணம் தப்புனா மரணம்!
லைட்ட "டக்'னு ஆஃப் பண்ணி ஏதோ பெரிய காரியத்தப் பண்ணுன நெனைப்புல இருந்தனா... அதுதான் நான் பண்ணுன பெரிய முட்டாள்த்தனம்னு வெளிய நின்ன பெருசு போட்ட சத்தத்துல களிமண் மண்டைக்கு ஏறுச்சு. கதவு இடுக்குல லைட் வெளிச்சம் தெரியும்ல... அது ஆஃப் ஆச்சுன்னா தெரியாதா? இந்த மரமண்டைக்கு அது ஏறல. நானே என்னப் போட்டுக் குடுத்த மாதிரி ஆகிப்போச்சு. என்ன பண்ணித் தொலையுறது ஆத்தா, அவசரத்துல புத்திய கடன் கொடுத்துரு வோம்ல... அது மாதிரிதான்! போச்சு... இன்னைக்கு நம்மள பொலி போடப் போறாய்ங்க. "மவனே இத்தன நாளு அல்வா குடுத்தேல்ல... இப்ப இருக்குடி உனக்கு'ங்கிற கணக்காப் போச்சு நம்ம நெலம.
இப்ப கன்பார்மா அவிய்ங்களுக்குத் தெரிஞ்சுபோச்சு. ஒருத்தன் உள்ள இருக்குறது கன்பாம். "ஒரு திருட்டுப்பய இருக்கான்யா... உள்ள இருக்கான்யா...! தம்பிக்குத் தெரியுமா? தம்பி இங்க வந்தானா? வந்து எவ்வளவு நாளா குது? இங்க எப்படி ஒருத்தன் உள்ள வந்தான்னு உனக்குத் தெரியுமா...?'ன்னு கேக்குறாரு.
நமக்குப் பணிவிடை செய்ற அந்தத் தம்பியும், அப்ப அங்க இல்ல. அவரு அந்த நேரம் எனக்கு டிபன் வாங்குறதுக்காக கடைக்குப் போயிருந்தாரு. டிபன் கடை எல்லாம் 4, 5 கி.மீ. தொலைவுல இருந்துச்சு. டாக்டரும் இல்ல... போன் பண்ணுனாலும் லைன் கிடைக்கமாட்டேங்குது. "என்னடா சனியன் குறவர்கணக்கா மாறுவேஷம் போட்டு தப்பிச்சு, கிப்பிச்சு வந்து, இங்க வந்து இப்படி குண்டக்க மண்டக்க மாட்டிக்கிட்டியேடா கோவாலு'ன்னு தலையில அடிச்சுக்கிட்டேன். நெஞ் செல்லாம் பட... படங்குது. இந்த ஆளு பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஒரு கண்டாங்கிரஸ் போலீஸ். எடுத்த வுடனே அடிதான். நான் இருக்கிறது ஒண்ணு மட்டும் தெரிஞ்சா போதும்... காலத்துக்கும் அவங்க டிபார்ட் மெண்ட்ல இதவச்சே ஓட்டிருவாரு. கதவத் தொறந்துட்டுப் போனாக் கூட வேற எத்தன எருமைக வெளிய நிக்குறாய்ங்களோ, அது வேற...!
எனக்கு உசுரே போச்சு...!
உள்ள பேந்தப் பேந்த முழிச்சிக்கிட்டு பூனையாட்டம் நறுங்கிப்போய் குத்தவச்சுக் கிடந்தேன். நேரம் ஆகுது.... கதவ உடைக்க கடப்பாரை எடுத்துட்டு வாடான்னு வெளிய இருக் குற ஆள் மூர்க்க னாட்டம் கத்து றான்.
ஏன் கேக்கு றீங்க... சவுண்டு அப்படி காதப் பொளக்குது. "யோவ்! யாருய்யா உள்ள? போலீஸ் வந்திருக்கேன்.... மரி யாதையா கதவத் தொற. இல்லன்னா கதவ உடைச்சிட்டு உள்ள வந்தேன்னா அவ்வளவுதான்...''னு சவுண்ட் வந்துக்கிட்டி ருக்கு. எனக்கோ ஈரக் குலயெல்லாம் ஆடிப் போச்சு.
கதவத் தொறந்து, "இல்லங்க ஒங்க தம்பி தான் என்ன இங்க தங்க வச்சிருக்காரு'' அப்படின்னு சொல்லலாம்னாலும், போலீஸ் புத்தின்னு ஒண்ணு இருக்குல்ல. இவ்வளவு நாளா தமிழ்நாடே தேடிக் கிட்டிருக்க ஒருத்தன் இங்கதான் அட காத்துக்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சா, அந்த தகவல போலீஸுக்குச் சொல் லாமலா இருப்பாங்க. அதுதான போலீஸ் புத்தி. யோசிச்சுப் பாருங்க..!
நம்ம கிரகச்சாரம்... கடைசி யில இங்க வந்து கேணத்தனமா மாட்டிக்கிட்டோமேடான்னு நினைச்சுப் புலம்பித் தள்ளிட் டேன். பின்னாடி தப்பிச்சுப் போலாம்னாலும் அதுக்கு நாதி இல்ல. ஜன்னல் வழியா குதிச்சும் ஓட முடியாது. பாத்ரூம்லயும் சின்ன ஜன்னல்தான். என்ன பண்ணலாம்?... யார், யாருக் கோ போன் பண்ணியும் சனியன்... அதுவும் போய்த் தொலையல. அது தெரிஞ்சுபோயிடும் வெளிய இருக்கிறவங்களுக்கு. இந்நேரம் டாக்டர் வந்தாலாவது நம்மள காப்பாத்திருவாரு, டாக்டரும் இல்ல. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம்... அப்படியே போய்க்கிட்டே யிருக்கு. சாவிக்கொத்த கொண்டு வந்து, ஒவ் வொரு சாவியா போட்டு திறந்து பாக்குற சத்தம் கேக்குது. "சீக்கிரம் தொறடா'ன்னு அந்த ஆளு வேற கத்துறான். சாவி தொறந்தாலும், நான் மேலயும், கீழயும் தாழ்ப்பாள் போட்டுருக்கிறது னால திறக்கவே முடியாது. கதவ அடிச்சி உடைச்சி தொறந்துருவாங்களோன்னு மனசுக்குள்ள ஒரு பயம். உயிர் போய் உயிர் வந்துச்சுன்னு சொல்லுவாங்கள்ல அந்த மாதிரி இருந்துச்சு.
நம்ம வாழ்க்கையில ஜெயலலிதா புண்ணி யத்துலயும், வீரப்பன் புண்ணியத்துலயும் இது போல நூத்துக்கு மேல நடந்திருக்கு. வீரப்பன் காடு -நாமளா ரோட்டுல ஓரமா போற பாம்பப் புடுச்சு தோள்ல போட்ட கதை. நாம விரும்பித் தான் போனோம். ஜெயலலிதா, ரோட்டு ஓரமா போய்க்கிட்டிருந்த நம்மள நடு ரோட்டுல இழுத்துப் போட்டு கொண்டேபுடணும்னு கங்கணம் கட்டித் திரிஞ்ச பொம்பள.
திடீர்னு... "டேய்... லோக்கல் போலீசுக்கு போன் போடு... சப்-இன்ஸ்பெக்டர இப்ப உடனே கூப்பிடு. உள்ள இருக்கிறவன உண்டு, இல் லைன்னு பண்ணிப்புடணும். தம்பிக்குத் தெரியாம என்னல்லாம் நடக்குது. ஒருத்தன் ஒரு பெரிய காம்பவுண்டத் தொறந்து தனியா இருக்குற ரூமுக்குள்ள இருக்குறான்னா... அவன எப்படி சும்மா விடமுடியும்? நீ போலீசுக்கு போன் போடு, கிடைக்கலன்னா நேரா போ... என் பேரச் சொல்லு, அதுவரைக்கும் நானும் இங்கேயே இருக்கேன் ஓடு... ஓடு...! தம்பி வர்றதுக் குள்ள உள்ள இருக்கிற இந்த ராஸ்கல வெளிய இழுத்துப்போட்டு நாலு காட்டு காட்டணும். அப்பதான் தம்பி சந்தோஷப்படுவான். தம்பிய பாத்தும் நாளாகுது''ன்னு சொல்லிக்கிட்டே கெட்ட, கெட்ட வார்த்தையில நம்மளத் திட்றாப்டி. நமக்கு அது ஒரு கசப்பான அனுபவம்.
என்கிட்ட டாக்டர் சொல்லியிருக்காரு. "எங்க அண்ணன் ஒருத்தன் போலீஸ்ல இருக்கான். எனக்கும் அவனுக்கும் பிரச்சினை, எங்களுக்குள்ள பேச்சுவார்த்தை கிடையாது''னு சொல்லியிருக்காரு. ஆனா நமக்கு கெட்ட நேரம், "அந்த ஆளு இப்போ வந்து தொலைச்சிட் டாரே...'ன்னு நெனைச்சிக்கிட்டிருக்கும்போதே...
"டேய்... யார்ரா நீ?''ன்னு சத்தமா ஒரு கேள்வி.
"நான் உன்னோட அண்ணன்டா?''
"அண்ணனாவது... மயிராவது...''
"எதுக்கு வந்திருக்க?''
"உன்ன பார்க்கணும்னுதான் வந்தேன்.''
"ஒண்ணும் பாத்துப் புடுங்க வேணாம்...''
"சரி... என்னப் பாக்கிறதுக்கு இங்க ஏண்டா வந்த?''
"யாரோ ஒரு திருடன் உள்ள கதவப் பூட்டிக் கிட்டு இருக்கான்... உனக்குத் தெரியல. என் சத் தத்த கேட்டு லைட்ட ஆஃப் பண்றான்'' அப்படின்னு வந்திருந்த அந்த போலீஸ்காரன் சொல்றான்.
"திருடனா இருக்கட்டும்... யாரா இருக்கட்டும்... நீ ஏன் இங்க வந்த? முதல்ல நீ கிளம்பு... கிளம்பு...'' அப்படின்னு சொல்லி அந்த ஆள அனுப்பி வச்சிட்டு... அதோட, அந்த மனு ஷன் வந்து சத்தம் போட்டவுடனதான், எனக்கு போன உசுரு அப்படியே "யு' டேர்ன் அடிச்சுது. மேக்கொண்டு அங்க வந்து கூடுனவங்களையும் அந்த இடத்தவிட்டு அனுப்பி விட்டுட்டு, அதுக்குப் பிறகு அரைமணி நேரம் கழிச்சுத்தான் தொறந்து விட்டாரு. அதுக்கப்புறம்தான் என்னால ஆசுவாசப்படுத்திக்க முடிஞ்சது.
"ஏண்டா டேய்... ஊரான் வீட்ல ஒளிஞ் சிருக்க. அவன் சம்பந்தப்பட்டவன் வந்து தட்டுறான். நீ தொறக்கல...'' இதுதான... இதுக்கு ஏன் இத்தன பில்டப்புன்னு நினைச்சுறாதீங்க. சம்பந்தப்பட்டவன் போலீசா இருந்ததுனால, கரணம் தப்புனா மரணம் மாதிரி ஆகிப்போச்சு. பொழைச்சுக் கிடந்ததால ஈஸியா எழுதிப்புட் டோம். அதுவே இழவு விழுந்திருந்தா... "போர்க் களம்' எழுதுறக்கு நான் இருந்திருக்கமாட்டேன்.
அதாவது... வாழ்க்கையில எத்தனையோ கஷ்டங்கள அனுபவிச்சிருக்கோம். ஆனா அன்னிக்கு... அந்த ஒண்ணரை மணி நேரம், இருட்டுக்குள்ள பதுங்கி இருந்து நான் பட்ட கஷ்டம் இருக்கே... அப்பப்பா! இதுக்கு முன்னாடி வீரப்பன் காட்டுலயும் பதுங்கிப் பதுங்கி இருந்திருக்கோம். 2002லிலயும் தலைமறைவு வாழ்க் கையில இருந்திருக்கோம். இந்த மாதிரி அங்கங்கே தலைமறைவா பதுங்கி இருந்ததுல... கூட்டிக் கழிச்சுப் பாத்தோம்னா ஒரு இரண் டரை... மூணு வருஷம் நம்ம வாழ்க்கைய இதுவே தின்னுருச்சு. அந்த போலீஸ்காரன் கண்ணுல படாம இருக்கணும்கிறதுக்காக நான் பட்டபாடு இருக்கே... அய்யோ! அத வார்த்தையால விவ ரிக்கவே முடியாது. அப்படியெல் லாம் போராடுனதுனாலதான் நம்மளால இந்த 35-ஆவது வருஷத்துக்குள்ள போக முடிஞ்சதுன்னு நான் அடிக்கடி சொல்லிக்கிட்டேயிருப்பேன்.
அந்த போலீஸ் வருத்தமா சொன்னது... "நாங்க ஒரு பொட் டலத்த கொண்டுவந்து வச்சிர லாம்னு பார்த்தோம்... ஆனா எல்லாருமா சேர்ந்து முறியடிச் சீட்டீங்களே''ன்னு ஏதோ அவங்க காசை நாம எடுத்துக்கிட்டது மாதிரி ரொம்ப வருத்தத்தோட சொன்னாய்ங்க. ஆனா அந்த நேரத்துல அவங்கள வைக்கவிட் டிருந்தா எவ்வளவு அசிங்கப் பட்டுருப்போம்? நம்ம குடும்பத்த எவ்வளவு அசிங்கப்படுத்தியிருப் பாய்ங்க... யோசிச்சுப் பாருங்க!
ஜனனிங்கிற ஒரு பொம் பளப்புள்ள. நடராஜன் அந்தப் புள்ளைய ஆசைநாயகியா வச்சிக் கிட்டாருங்கிற காரணத்துக்காக... அல்லோலப்படுத்திட்டாய்ங்க பாருங்க. அப்படி... அவ்வளவு பெரிய பூதத்துக்கிட்ட இருந்து அந்தப் பெரிய ஆபத்து நம்மள அண்டாமப் பாத்துக்கிட்டது நக்கீரன் குடும்பம்தான். இத நான் எத்தனையோ முறை சொல்லியிருப்பேன். இப்ப மறு படியும் சொல்றதுனால ஒண் ணும் குறைஞ்சு போயிறாது.
நக்கீரன் குடும்பத்துல உள்ள தம்பிகள் மாத்திரம் இல்ல... தம்பிகள் குடும்பத்தச் சேர்ந்த சகோதரிமார்களும், தம்பிகளோட துணைவியார், அவங்களோட மாமனார், அத்தைமார்னு எல்லாருமே அவ்வளவு அனுசரணையா இருந்தாங்கங்கிறத என் துணைவியார் சொல்லிக் கேட்டிருக்கேன்.
மனசுக்குள்ள நெறைய சோர்வு கவ்விருச்சு. அந்த நேரத் துல என் துணைவியார்ட்ட பேசுனா கொஞ்சம் ஆறுதலா இருக்கும், மனச ஆறுதல்படுத் திக்கலாம்னுதான் வீட்டுக்குப் போன் பண்ணுனேன். அதுவும் நம்ம போன்ல இல்ல... அதுல பேசுனாத்தான் எடுவட்டப் பயலுக போன டேப் பண்ணி கூண்டோட கைலாசம் அனுப்பி வச்சுப்புடுவாய்ங்களே எமகாதகய்ங்க. அதனாலத்தான் ஒளிஞ்சு இருந்த நேரத்துல நமக்கு உதவிக்கு இருந்த அந்த தம்பி போன வாங்கி, அந்தப் பக்கம் டிரைவர் கணேசன் போனுக்கு போன் பண்ணி, எதாவது செய்தி இருக்கான்னு என் துணைவியார்கிட்ட கேட்டேன். அப்பதான் வீட்ல நடந்தது... வெளிய நடந்தது... அப்புறம் இந்த மீசை கதைன்னு எல்லாத்தையும் என் மக ளோட சேர்ந்து அவங்களும் எங்கிட்டச் சொன்னாங்க.
சொல்லச் சொல்ல...
(புழுதி பறக்கும்)