(101) அழகான தோட்டத்தை சீரழிச்ச போலீஸ் கும்பல்!
வீட்டு மாடியில எங்களுடைய அறை. அதுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு தோட்டம். அந்தத் தோட்டம் ஆயிரம் ஸ்கொயர்ஃபீட்டுக்குள்ள இருக்கும். தொட்டியில செடி வச்சு மத்தவங்க வளர்க்கிறது மாதிரியான தோட்டம் கெடையாது நம்மது. என்னோட நண்பர் ஒருத்தரு ஓயாசிஸ் ராஜான்னு. அவர வச்சு சின்னதா கிரியேட்டிவ்வா இருக் கும். அது எதுக்காகன்னா... எங்க பிள் ளைங்களுக்கும், எங்க குடும்பத்துல இருக் கிறவங்களுக்கும் வெளிய அவுட்லெட் கெடையாது. ஃப்ரீயா வெளிய போக்கு வரத்து அவ்வளவா இருக்காது. ஏன்னா... எப்ப, என்ன எழவு வரும்னும் தெரியாது.
அதனாலதான் வீட்டுல உள்ளவங் களுக்கான அவுட்லெட்... அதாவது கொஞ்சநேரம் பொழுதுபோக்கணும்னா மேல தோட்டத்துக்குப் போய் பொழுதக் கழிக்கலாம்னு பண்ணுனது. அதுல ஒரு ஊஞ்சல் இருக்கும். ஒரு சிட்அவுட்... அங்க ரெண்டு தென்ன மரம் இருக்கும். சப்போட்டா, மாதுளை, திராட்சை... சின்னச் சின்ன போன்சாய் மரங்கள் எல்லாம் வச்சிருப்போம். அந்த தோட்டம் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருக்கும்னு வச்சுக்கங்களேன்...!
வந்த போலீஸ்காரய்ங்க தோட்டத்துக் குள்ளல்லாம் போவாங்கன்னு நானும் நினைக்கல, எங்க வீட்டம்மாவும் நினைக்கல. வருவாங்க, வந்து பாத்துட்டுப் போயிருவாய்ங்கன்னுதான் நெனைச் சோம். ஆனா வந்த படுபாவிய்ங்க... "சோளக்காட்டுக்குள்ள புகுந்த ஏதோ கூட்டம்...'னு சொல்லுவாங்கள்ல அது மாதிரி... உள்ள போயிட்டாய்ங்க.
அந்த 2012, ஜன. 8-ந் தேதி நைட்டு போலீஸ் வீட்டுக்குப் போறாய்ங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும்... நாங்க அந்த வீட்டுல குடியேறுனது 2005. 2005-ல இருந்து 2012 ஜன.8-ந் தேதி வரைக்கும்... அழகா ரம்யமா இருந்தது தோட்டம்.
ஒரு விஷயம் தெரியுமா? எங்க வீட்டுக்குள்ள கொசுவே வராது. சென்னையில கொசுவால மக்கள்படுற பெரிய அவஸ்தை எல்லாருக்கும் தெரியும். அந்த படுபாவி போலீஸ்காரங்க, நான் ஒளிஞ்சிருக்கேன்னு நெனைச்சு, தோட்டத்துக்குப் போய் அங்க செடிகளுக்கு போட்டுருந்த எரு மண்ணு, சகதி எல்லாத்தையும் கையில வச்சிருந்த லத்தியால கிண்டிக் கிளறி, கஷ்டப்பட்டு வளர்த்த திராட்சைக் கொடிய எல்லாம் பிச்சு எரிஞ்சுட்டாய்ங்க. தோட்டத்தையே பாழாக்கிட்டுப் போயிட்டாய்ங்க நாசமாப்போறவய்ங்க... அப்படிப் பண்ணுனதுனால அடுத்த நாள்ல இருந்தே வீட்டுக்குள்ள ஏகப்பட்ட கொசு வர ஆரம்பிச்சிருச்சு.... அது இன்னிக்கு வரைக்கும் தொடருது... கொசுத்தொல்ல தாங்க முடியல. ஆள வச்சு என்னக் கொல்லற துக்குப் பாத்தாய்ங்கன்ற விஷயம்லாம் தெரிஞ்சு அன்னிக்கு தப்பிச்சுட்டோம்னு வச்சுக்கங்க. அந்தப் பொம்பள போயும் தொலஞ்சிருச்சு. ஆனா... அந்தக் கைங்கர்யத்துல நமக்கு கொசுவாலயும் தொல்லைய அள்ளிக் குடுத்துட்டுப் போயிருச்சு. இன்னிக்கு வரைக்கும் அது நமக்குப் பெரிய பிரச்சினையாவே இருக்கு.
தோட்டத்துக்குள்ள போன அந்தக் கும்பலு, தோட்டத்துல இருந்து சுரங்கப்பாத வச்சு நான் தப்பிச்சுப் போயிருப்பேன்னு சொல்லித் தேடியிருக்காங்க. நம்ம ஆளுக காதுபடவே பேசியிருக்காங்க. "மொட்ட மாடியில இருக்குற இத்துனூண்டு இடத்துல எப்படிய்யா சுரங்கம் தோண்ட முடியும்'னு. அவங்க யோசிக்க வேணாம்? கொடும... இத எங்க போய்ச் சொல்ல?
எங்க வீட்டுத் தோட்டத்தப் பாக்கும்போது... அவ்வளவு அழகா இருக்கும். மனசுக்கு அவ்வளவு சந்தோஷத்த குடுக்கும். அதுவரைக்கும் அந்தத் தோட்டத்த வேற யாருமே பாத்தது கூட இல்ல. எங்க நக்கீரன் தம்பிங்க எல்லாருமே அந்தத் தோட் டத்த முழுசா பாத்துருக்க மாட் டாங்க. கொஞ்சம்பேரு குடும்பத் தோட பாத்திருப்பாங்க. அப்புறம் அண்ணன் நடிகர் பொன்வண்ணன் இருக்காருல்லியா அவரும் சரண்யா அக்காவும், அவங்க பிள்ளைங்களும் எங்க வீட்டுக்கு ஒருமுறை வந்தப்ப, பாத்துட்டு ரொம்ப நல்லாருக்கு தோட்டம்னு சொல்லிருக்காங்க. எவ்வளவோ பேரு ஷூட்டிங்குக்கு கேட்டாங்க. அங்க வச்சு ஷூட் எடுக்கலாமான்னு கேப்பாங்க. அதுக்கெல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்.
அந்த தோட்டத்து நடுவுல சின்னதா ஒரு அழகான நீர்வீழ்ச்சி இருக்கும். அதச் சுத்தியும் பாறை மாதிரி வடிவமைச்சு டெரக்கோட்டா பொம்மைகள், குதிரைகள் எல்லாம் வச்சு கலைநயத்தோட அமைஞ்ச அடக்கமான ஒரு தோட்டமா பராமரிச்சுட்டு வந்தோம்.
அப்படி நாங்க பாத்துப் பாத்து ரசிச்சு உருவாக்குன அந்தத் தோட்டத்துக்குள்ள போலீஸ்காரய்ங்க வந்த நாள்ல இருந்து இன்னிக்கு வரைக்கும் அது விளங் காமயே போச்சு. இவிய்ங்க போட்ட ஆட்டத்துனால ஒரு தென்ன விழுந்துருச்சு. நாசமா போறவிய்ங்க, பேதியில போறவிய்ங்க, கழிச்சல்ல போறவிய்ங்க... இப்படி எத்தன திட்டும் திட்டலாம். ஜெயலலிதாவால நமக்கு ஏற்பட்ட நட்டத்துல இது பெருத்த நஷ்டம்.
அதுக்கப்புறம் அத சரி பண்ணணும்னா திரும்பவும் அதுக்கு கொஞ்சம் மெனக்கெடணும்... செலவும் பண்ணணும். இருக்கிற பிரச்சினையில மறுபடியும் எங்க அதையெல்லாம் செஞ்சு சரி பண்றது... அது முடியாமலே போச்சு... அதுல வச்சிருந்த நீர்வீழ்ச்சியும் அன்னியோட போச்சு. நம்மகிட்ட கேட்டிருந்தா அந்த நீர்வீழ்ச்சிய அணைச்சு செக்பண்ணுங்கன்னு சொல்லியிருக்கலாம். ஆனா இவங்க என்ன பண்ணிட்டாய்ங்க... படார்னு போய் சுவிட்ச்ச ஆஃப் பண்ணி... அந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில சுரங்கம் இருக்குதுன்னு மோட்டார நிறுத்தி... அத கடப் பாறைய வச்சுப் பேத்து எடுத்து வெளிய வச்சு... அதுக்குக் கீழ அலிபாபா குகை இருக்கான்னு பாத்து... ஏன் கேக்குறீங்க... அது வழியா தண்ணி வர்ற பைப் எல்லாத்தையும் குருவிக்கூட்டை குரங்கு பிச்சிப் போட் டது மாதிரி பிச்சுப் போட்டுட்டுப் போயிட்டாய்ங்க. குதிர பொம்மை களையும் இரக்கமே இல்லாம ஒடைச்சிட்டாய்ங்க. அந்தத் தோட் டத்தப் பத்தி இன்னிக்கு நெனைச்சா கூட மனசு ரொம்பவே வலிக்கும். ஏன்னா... நானும் சரி... எங்க வீட்டம்மாவும் சரி, எத்தனயோ துன்பங்கள பாத்துட்டோம்... அனுபவிச்சிட்டோம். அப்படி பாத்திருந்தாலும்கூட தோட்டத்தப் பத்தி நெனைக்கும்போது... (தமிழ்ல எத்தனையோ முக்கியமான சொற்கள்லாம் இருக்கும். நெறைய தவிர்க்க முடியாத சொற்கள் இருக்கு. அதுல முக்கியமான ஒரு சொல் வலி...) எங்களுக்கு ஏற்பட்ட வலி... என் நெஞ்சுல ரணமாவே ஆயிருச்சு. ஏன்னா, நான் என் குடும்பத்துக்காக அந்த தோட்டத்துல சில சின்னச் சின்ன விஷயங்கள அழகா செஞ்சு குடுத்திருந்தேன்.
அப்படிப்பட்ட அந்த தோட்டத்த, எருமைக் கூட்டம் மாதிரி வந்த அந்த போலீஸ் கும்பல் அநியாயமா அழிச்சிட்டுப் போயிருச்சு. நம்ம வயசுக்கு நக்கீரன ஆரம்பிச்சு இத்தன வருஷத்துல எத்தனையோ பாத்துட்டோம். நமக்கு நேர்ந்த அழிவு... நம்ம கூட இருந்த வங்களுக்கு நேர்ந்த அழிவுன்னு நெறையவே பாத்தாச்சு. நெறைய துரோகத்தையும் பாத்துட்டோம்.
ஆங்... துரோகம்னவுடனதான் ஞாபகத்துல வருது. இப்ப, நம்ம கூடவே இருந்து குழி பறிச்ச நாதாரி ஒருத்தன். இத அவாய்ட் பண்ண முடி யாது. எப்பேர்ப்பட்ட வல்லவனா இருக்குறவங் களுக்கே குழிபறிக்கிறதுக்குன்னு நெறைய பேரு இருந்திருக்கானுவோ. குறிப்பா நம்ம தம்பி விடுதலைப்போராளி வீரன் பிரபாகரனுக்கு ஒரு கர்ணாங்கிற எடுவட்ட நாய் துரோகம் பண்ணுச்சுல்ல, அதுமாதிரி இல்லன்னாலும்... அதுல ம்னிக்கோண்டா... சின்னதா...
நாம ரொம்ப சாதாரண ஆளு. நமக்கு நம்பிக் கையா இருந்து... அதாவது நாம நாலு கவளம் சோறு சாப்புட்டா, அதுல ஒரு கவளம் சோறாவது சாப்புடுன்னு குடுத்துருப்போம்ல.... அப்படித் தின்னு வளந்த ஒரு பொசகெட்ட நாய் பண்ணுன காரியம்...
இப்ப சமீபத்துல தமிழகத்தையே உலுக்கி யிருந்த ஒரு கொடூர மரணம்... ஸ்ரீமதி. பிஞ்சு மாதிரியான ஒரு பிள்ள. அந்தப் பிள்ளைய கசக்கி கந்தலாக்கிக் கொண்டுபோய் போட்டுட்டாய்ங்க. இந்த மாதிரி பெண் பிள்ளைகளுக்கு எதிரா ஒரு சம்பவம் நடக்கறப்ப நாம எத்தன எதிர்ப்பு வந்தாலும் விடவே மாட்டோம். நக்கீரன் எப்பவும்... ஆரம்பத்துல இருந்தே உண்மைய வெளிக் கொண்டுவர மெனக்கெடுவோம். அந்த ரீதியிலதான் இந்த விஷயத்த நானும், தம்பி பிரகாஷ், வீடியோ தம்பிகள் நவீன், அஜீத், விவேக், எங்க எஸ்.பி.சேகர் அண்ணன் எல்லாரும் தொடர்ந்து பண்ணிட்டு வர்றோம். முக்கியமா இதுல பிரகாஷ் நல்ல ஸ்கோர் பண்ணிட்டாரு. இதுக்கு உறுதுணையா எங்க நக்கீரன் குடும்பத்து தம்பி மதியோட சகோதரர் ராமுவும் பெரிய ஒத்துழைப்பு குடுத்தாங்க. கள்ளக் குறிச்சி பக்கம் உள்ள கச்சிராப்பாளையம்தான் அவங்க சொந்த ஊர்.
ஆனா... இந்த கொடூர சாவப் பத்தி நக்கீரன் எழுதுனத, பேசுனத கொச்சைப்படுத்துறது மாதிரி, அந்த சைடுல உள்ள பொறுக்கி தாளாளர் ரவிக் குமார், சாந்தி... இவங்களுக்கு சப்போர்ட் பண் றோம்ங்கிற போர்வையில அந்த இனத்தச் சேர்ந்த ஒரு படவா, நம்ம கூடவே இருந்து நமக்கே குழி பறிச்சி, பெரிய பள்ளமா தோண்டி நம்ம மேல மண் அள்ளிப் போடலாம்னு எதிர்பார்த்துச்சு அந்த நாய். அதுல நாம சுதாரிச்சுட்டோம்... அது ஒரு பக்கம். அந்த துரோகி... பச்சப் புள்ளைங்களுக்கு துரோகம் செய்றவங்களோடு சேர்ந்து, அந்தப் பாதகத்த வழிமொழிஞ்சு, "ஆமா அது தற்கொலை தான். நக்கீரன்காரங்கதான் பிளாக்மெயில் செய்றாங்க' அப்படின்னு வழிமொழியுறதுங்கிறது எவ்வளவு மோசமான ஒரு காரியம்.
ஏன் இவ்வளவு கடுமையா பேசுறேன்னா... ஒரு பச்சப் புள்ளைய கொன்னு தூக்கிப் போட்டுருக் கானுவோ... அத, நம்ம கூடவே இருந்து... நம்ம சோத்தையே தின்னு... இத்தனைக்கும் அந்த நாய்களுக்கும் பொட்டப் புள்ள இருக்கு. பொட் டப்புள்ளைகள சீரழிச்ச ஒரு கல்நெஞ்சக் கயவ னுக்கு ஒத்து ஊதுற இதுகள்லாம் ச்சே... கேவலம். அதப் பாத்துட்டு எனக்கு ரொம்பவே மனசு உடைஞ்சிடுச்சு. ஏன்னா... இப்படிப்பட்ட துரோகி களையெல்லாம் நாம கூட வச்சிருந்தோமேன்னு... இந்த நேரத்துல எனக்கு ஞாபகத்துல வந்ததுனால அதச் சொல்றேன். இருக்கட்டும்... இருக்கட்டும்...!
தோட்டத்துல ஒரு பெரிய எழவ நடத்திட்டு குசு.... குசு...ன்னு பேசிக்கிட்டே என்ன பண்ணிட் டாய்ங்க, மறுபடியும் மொட்டமாடிக் கதவ தொறக்கச் சொல்லி, ஒரு குரூப் ஏ.சி. தலைமைல மேல ஏறிப் போறாய்ங்க. இன்னொரு குரூப் தட... தட... தட...ன்னு படி வழியா இறங்கி, மறுபடியும் ஆபீஸ் மெசலேன் ப்ளோர்னு ஒண்ணு இருக்கு. அங்க பப்ளிகேஷன்ஸ்ல பிரிண்ட் பண்ணுன நூல் கள் எல்லாம் வச்சிருப்போம். அது பாக்குறதுக்கு கொஞ்சம் ரகசிய அறை மாதிரிதான் இருக்கும். அத மஃப்டியில வந்த ஒரு நாதாரி பார்த்துட்டு, உடுப்புப் போட்ட போலீஸ்காரய்ங்ககிட்ட போய்ச் சொல்ல... வந்தது வினை...!
(புழுதி பறக்கும்)