’""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருக்காராம்.''
’""அது சம்பந்தமா நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந்திருக்கு.''
""என்கிட்ட உள்ள தகவலையும் சொல்லிடுறேன்.. தேசிய சுகாதார நிதியில் இருந்து 2,500 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கிய மத்திய அரசு, அதன் மூலம் கொரோனாவை ஒடுக்க உருப்படியான காரியங்களை எடப்பாடி அரசு மேற் கொள்ளும்ன்னு எதிர்பார்த்ததாம். ஆனால் எடப்பாடி அரசோ, கொரோனா உபகரணக் கொள்முதலை சாக்காக்கி ஏகத்துக்கும் விளையாட ஆரம்பிச்சிடுச்சி. இது தொடர்பான ரிப்போர்ட்டுகள் மோடியின் டேபிளில் குவிஞ்சதால்தான் அவர் அதிருப்தியில் இருக்காராம்.''
’""ஆமாம்பா, டெல்லி உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு, கொரோனா உபகரணக் கொள்முதல்களில் கமிஷனுக்கு மேல் கமிஷன்னு சுருட்டி இருக்காங்களே?''
’""உண்மைதாங்க தலைவரே, உதாரணத்துக்கு ஒரு விசயத்தை மட்டும் சொல்றேன். சுகாதாரத்துறைக்கு 100 வெண்டிலேட்டர்களைக் கொள்முதல் செய்ய எடப்பாடி அரசு முடிவெடுத்துச்சு. இருப்பதிலேயே காஸ்ட்லியான, தரமான வெண்டிலெட்டர்னா அது தலா 15 லட்ச ரூபாய்க்கு விற்குது. ஆனால், மிக மிகக் குறைந்த தரம்கொண்ட, மலிவான வெண்டிலேட்டர்களைக் கொள்முதல் செய்துவிட்டு, காஸ்ட்லி வெண்டிலேட்ட ருக்கான ரேட்டைக் கணக்கில் எழுதியிருக்காங்க. இதேபோல் பி.சி.ஆர்., கருவிகளையும், பாதுகாப்புக் கவசங்களையும் அதிக ரேட்டுக்கு வாங்கியதாக் கணக்குக் காட்டி, பெருசு பெருசா ஏப்பம் விட்டிருக்காங்க.''
’""இதிலேயே பல கோடி ரூபய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை நம்ம நக்கீரன் ஆதாரங்களோடு வெளிப்படுத்துச்சேப்பா.''
’""ஆமாங்க தலைவரே, இந்த ஏடாகூடக் கொள்முதல் விவகாரத்துக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர், சுகாதாரத் துறையில் திட்ட இயக்குநரா இருக்கும் டாக்டர் செந்தில்ராஜ் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரிதானாம். அவரும் மருத்துவக் கழக கன்சல்டண்ட் ஆனந்த் என்பவரும் சொன்ன ரூட்டில் போய்தான், எடப்படி அரசு திருவிழா கொண்டாடியிருக்கு. இந்தக் கொள்முதல் குளறுபடிகளை, இன்னொரு திட்ட இயக்குநரான நாகராஜ் ஐ.ஏ.எஸ். கடுமையாக எதிர்த்திருக்கார். இவர் மதுரையில் கலெக்டராக இருந்தபோது, அமைச்சர்களின் தவறான பரிந்துரைகளை ஏற்க மறுத்ததோடு, சத்துணவு தொடர்பான முறைகேடுகளையும் தடுத்தவராம். அதனால் அவரை இனியும் விட்டுவைக்கக் கூடாதுன்னு, எடப்பாடி அரசு டிரான்ஸ்பரில் ஒரேயடியாத் தூக்கியடிக்க, இதுவும் ஐ.ஏ,எஸ் அதிகாரிகள் தரப்பிலிருந்து மோடியின் கவனத்துக்குப் போயிருக்கு.''
’""ஓஹோ...''
’""இப்படிப்பட்ட தொடர் புகார்களால் எடப்பாடியின் மதிப்பு, டெல்லியில் ஏகமாய் சரிஞ்சிருக்கு. இதையறிந்து ரொம்பவே கலங்கிப்போன எடப்பாடி, இங்கே ஆட்சியி லும் அரசியலிலும் தன் காலை அழுத்தமாக ஊன்றிக்கொள்ளும் எண்ணத்தில் ஓ.பி. எஸ்.சுடன் அதிக மாக ஒட்டி உறவா டத் தொடங்கிவிட் டாராம். 30-ந்தேதி கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர்களின் ஆலோ சனைக் கூட்டத்தின் போதுகூட, சுகாதாரத் துறையின் வழிகாட்டு புத்தகத்தைவெளியிட்ட எடப்பாடி, அதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக ஓ.பி.எஸ்.சைப் பெற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். அதன்பின் ஓ.பி.எஸ்.சுடன் தனித்துப் பேசிய எடப்பாடி, தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. நமக்கு எதிராக நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், நமக்குள் கோஷ்டி மோதல்கள் ஏற்படாமல் நாம் கவனமாக இருக்கனும்ன்னு சொல்லியிருக்காராம்.''
’""சரிப்பா, தமிழகத்தில் கொரோனா பரவல் மிதமிஞ்சிப் போய்க்கிட்டிருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலேயே கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காத நிலையில் பரவிக்கிட்டு இருக்கு. இது பற்றி பொதுத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு அவசர ரிப்போர்ட்டை அனுப்பி, அதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு போகும்படி கோரிக்கை வச்சிருக்காங்க. ஆனால், தலைமைச் செயலாளரோ, அந்த ரிப்போர்ட்டை பொதுத் துறைக்கே திருப்பி அனுப்பிட்டாராம். தலைமைச் செயலகத்தில் மட்டுமல்லாது, காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைன்னு சகல துறைகளையும் இப்ப கொரோனாத் தொற்று ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சிருக்கு.''’’
""ஆவின் துறையிலும் பெரும் பதட்டம் தெரியுதேப்பா.''
""உண்மைதாங்க தலைவரே, கடந்த மாதமே மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கொரோனா தொற்று ஏற்பட்டது பற்றி நாம்தான் முதன் முதலில் பேசிக்கிட்டோம். அப்போதே மாதவரம் பால் பண்ணையை மூடி, சுகாதார ஆய்வுக்கு உட்படுத்தணும்னு நம் நக்கீரன் எச்சரிக்கை மணி அடிச்சிது. ஆனால், திடீர்னு மூடினால் தங்கள் குளறுபடிகள் எல்லாம் வெளிப்பட்டுடும்னு நினைத்து ஆவின் அதிகாரிகள் வாய்மூடி அமைதி காத்தனர். இந்த நிலையில் இப்போது ஆவின் நிறுவன இணை நிர்வாக இயக்குநரான மணிவண்ணனும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். இவர், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் உள்ளிட்ட ஆவின் பண்ணைகளுக்கும், நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்துக்கும் அடிக்கடி வந்துபோகிறவர் என்பதால் யார் யாருக்கு இவர் மூலம் தொற்று பரவியதோ என்கிற அச்சத்தில் ஒட்டுமொத்த ஆவினும் அதிர்ந்துபோயிருக்குதாம். இப்போதே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று பரவியிருக்க, டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்பவர்களாலும் கொரோனாவின் பரவல் கடுமையாகலாம் என்கிறார்கள்''
’""தமிழகத்தில் மிதமிஞ்சிப் பரவிக்கிட்டிருக்கும் கொரோனாவை எப்படி மேனேஜ் பண்ணப்போறார் எடப்பாடி?''
’""எடப்பாடி அரசு பிரகடனம் செஞ்சிருக்கும் இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கையும், அதோடு அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வையும் பார்த்து அரசு அதிகாரிகளே, இது உண்மையிலேயே லாக்டவுன் காலம்தானாங்கிற குழப்பத்தில் இருக்காங்க. இப்படிப்பட்ட தளர்வுகளால் கொரோனாவின் வேகம் அதிகரிக்கிதுன்னு எதிர்க்கட்சிகள் தொடங்கி, மருத்துவ அமைப்புகள் வரை கண்டனக் குரலை எழுப்பிவருது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த எடப்பாடி, சிவப்பு மண்டலமாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை கொரோனாக் காலம்வரை அரசின் மூலமே கையகப்படுத்தி, அவற்றின் வழியாக இலவச கொரோனா சிகிச்சைகளை மேற் கொள்வது பற்றியும் ஆலோசிச்சாராம்.''
’""இதற்குத் தனியார் மருத்துவமனைகள் சம்மதிக்கனுமே?''
’""சரியாச் சொன்னீங்க தலைவரே, எடப்பாடி தனது இந்த முடிவை டெல்லிக்கும் தெரியப்படுத்தி இருக்கார். ஆனால் இதற்கு பல தனியார் மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவிக்குதாம். இவர்களில் பலரும் டெல்லி சோர்ஸ் மூலம் எடப்பாடியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கறாங்க. குறிப்பா இந்தப் பட்டியல்ல இருக்கும் குளோபல் மருத்துவமனைக்காக களமிறங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தரப்பு, இதற்கு ரெட் சிக்னல் காட்டிக்கிட்டே இருக்காராம்.''
’""இந்த பேரிடர் நேரத்திலும் டீலிங்குகளும், பேரங்களும் நிக்கலையே?''
’""ஆமாங்க தலைவரே, கொரோனா தாக்கம் அதிகரிச்சிக்கிட்டே இருப்பதால், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்த குழப்பத்திலேயே இருக்கிறது எடப்பாடி அரசு. இந்த நிலையில், கல்லா கட்டியே பழகிப்போன தனியார் கல்வி நிறுவனங்களின் கைகள், பரபரக்க ஆரம்பிச்சிடிச்சி, அதனால், சீக்கிரம் கேட்டைத் திறக்கவிடுங்கன்னு துறையின் மேலிடங்களை அவை நச்சரிக்க ஆரம்பிச்சிடிச்சி. இதனால் நிமிர்ந்து உட்கார்ந்த மேலிடம், முதல்ல, தனியார் பள்ளிகள் எல்லாம் தலைக்கு 10 “எல்’’ வீதம் மொய் எழுதுங்க. கல்லூரிகளுக்கு அதன் விஸ்தீரணத்துக்கு ஏற்ப வேற ரேட்டு. இதை நீங்க செய்ததும் விரைவில், உங்கள் கல்லாவை நிரம்ப வைக்றோம்ன்னு உத்தரவாதம் கொடுத்திருக்குதாம்.''
’""நாம் தொடர்ந்து பேசிவந்த மாதிரியே, தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யா ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப் பட்டிருக்காரே?''
""ஆமாங்க தலைவரே, போன முறை நாம் பேசிக்கிட்டப்பவும், உளவுத்துறை ஐ.ஜி.யா ஈஸ்வரமூர்த்தி நியமிக்கபடுவார்னு அழுத்தம் திருத்தமாச் சொன்னதோட, அந்தத் துறையின் ஏ.டி.ஜி.பி. பதவியை நிரப்புவது குறித்த ஆலோசனையிலும் எடப்பாடி இருப்பது பற்றியும் பேசிக்கிட்டோம். நாம் சொன்னது போலவே உளவுத்துறை ஐ.ஜியா நியமிக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரமூர்த்தியே, அதன் ஏ.டி.ஜி.பி. பதவியையும் கூடுதலாகக் கவனிப் பாருன்னும், அதுபோல் அவர் இப்ப வகித்துவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பதவியிலும் தொடர்வாருன்னும் அறிவிக்கப்பட்டிருக்கு’’
’""ஆமாம்பா, அவருக்கு துறையில் நல்ல பேரு இருக்குதே’’
’""உண்மைதாங்க தலைவரே, ஈஸ்வரமூர்த்தியைப் பொறுத்தவரை, 98-ல் காவல்துறையில் இணைந்தவர். அவருக்கு 2000-ல் ஐ.பி.எஸ்.அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. 22 வருட காவல்துறை பணியில், சி.பி.ஐ.யில் 7 வருசமும், உளவுத்துறையில் 12 வருசமும் இருந்து, உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்டவரை அதன் தலைவராக நியமித்திருப்பது ஏகப்பொருத்தம்னு ஐ.பி.எஸ். வட்டாரமே மனம் திறந்து சொல்லுது. பொதுவாக அவர் அனைவரிடமும் இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல்கட்சிக்கும் ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளாதவர். அரசுக்கு எதிரான கசப்பான தகவல் என்றாலும் அதில் சமரசம் செய்துகொள்ளாமல் உண்மைத் தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பதில் உறுதியாக இருப்பவர்னும் யூனிபார்ம் ஆட்களே பாராட்டறாங்க.''
’""தேர்தல் ஆணையத்தின் பக்கமும் பரபரப்பு தெரியுதே?''
’""உண்மைதாங்க தலைவரே, அமெரிக்காவில் 3 மாதங்களாகத் தங்கியிருந்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அண்மையில் இந்தியா திரும்பியிருக்கார். பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை எப்போது நடத்துவதுன்னு அங்குள்ள அரசோடும் அம்மாநில தேர்தல் அதிகாரிகளோடும் ஆலோசிச்சிக்கிட்டு இருக்கார். அதேபோல், அடுத்த மே மாதம் நடத்தவேண்டிய தமிழகத் தேர்தலை வரும் டிசம்பர் வாக்கிலேயே நடத்தும்படி, தேர்தல் ஆணையத்தை மூவ் பண்ணியிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் ஆணைய அதிகாரிகளோ, அதற்குள் தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தி விடுவீர்களான்னு கேட்டிருக்கிறார்கள். எடப்பாடியோ, தென்கொரியாவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருக்கிறார்களே, அதுபோல் நாமும் நடத்தலாமேன்னு சொல்லியிருக்கார். தேர்தல் ஆணையமும் இது பற்றிய ரிப்போர்ட்டுகளைக் கேட்டு, தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துதாம்.''
’""எடப்பாடியின் முயற்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசின் ஒத்துழைப்பு உண்டா?''
’""அது சம்பந்தமா நான் சொல்றேன்... எடப்பாடியின் தேர்தல் அவசரம் பற்றிய தகவல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கும் போயிருக்கு. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தமிழகத்தில் தங்கள் கட்சிக்கான சாதகமான நிலையை உருவாக்கத்தான் அ.தி.மு.க. அரசை நீடிக்க விட்டிருக்காங்க. கூட்டணி நீடித்தால், எடப்பாடியின் தேர்தல் விருப்பம் நிறைவேறலாம். அதில் பா.ஜ.க.வின் கை ஓங்கியிருக்கும். எடப்பாடி மூவ் பற்றி மோடிகிட்ட அமித்ஷா டிஸ்கஸ் பண்ணியிருக்காரு. இப் போதிருக்கும் நெருக் கடியில் அவசரமாகத் தேர்தலைக் கொண்டு வரத் தேவையில்லை. மே மாதம் நடத்தவேண்டிய தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங் களின் தேர்தல்களை, கொரோனாவால் ஏற்பட்டி ருக்கும் நிதி நெருக் கடியைக் காரணம் காட்டி, மேலும் 6 மாதங்களுக்கு தள்ளிவைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை அமல்படுத்துவோம். அதன் மூலம் மேற்கண்ட மாநிலங் களை நாம் கையில் எடுத்து, பா.ஜ.க.வுக்கு ஏற்றவாறு பதப்படுத்தி விட்டு, அதன் பின்னர் தேர்தலை நடத்தலாம்னு சொல்லியிருக்காராம்.''