ரு விசாரணை கமிசனின் ரிப்போர்ட், கேபினெட்டில் விவாதிக்கப்படுவது சமீபகாலத்தில் இதுதான் முதல்முறை என்கிறார்கள். ஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை கேபினெட்டில் எதற்காக விவாதிக்கப்பட வேண்டும் என்று உயரதிகாரிகளிடம் கேட்டபோது,’

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொது மக்களிட மும் அ.தி.மு.க. தொண்டர்களிடமும் சந்தேகம் இருக்கிறது. அதை தெளி விப்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஒரு விசாரணை ஆணையத்தின் அறிக் கையை அரசு நினைத்தால் மக்களுக்கு தெரியும் விதத்தில் வெளியிடலாம். அல்லது கிடப்பில் வைக்கலாம். மக்களுக்குத் தெரிவிக்க விரும்பினால், அமைச்ச ரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த வகையில், இந்த அறிக்கையை மக்க ளிடம் தெரிவிக்க அரசு விரும்புவ தாகத் தெரிகிறது” என்கிறார்கள்.

dd

Advertisment

இந்நிலையில், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., தினகரன் உள்ளிட்ட பலரிடமும் ஒருவித எதிர் பார்ப்பு பரபரப்பானது. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதட்டம் தெரிந்தது. சசியின் ரீ-என்ட்ரியை எப்படியும் தடுத்து விட வேண்டும் என எடப்பாடி நினைப்பதால், ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலாவுக்கு எதிராக ரிப்போர்ட் வர வேண்டுமென எதிர்பார்க் கிறார். ஆனால், அப்படி ரிப்போர்ட் வருமா என்ற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது.

இது குறித்து எடப்பாடியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, "அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சின்னம்மா (சசிகலா)வுக்கு எதிராக வாள் சுழற்றி, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியவர் ஓ.பன்னீர் செல்வம்தான். அதன்படி விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.

அம்மாவுக்கு இந்த நிலை உருவானதற்கு காரணமே சசிகலாதான் என்ற சந்தேகத்தை ஆணையம் அமைக்கப்பட்ட சமயத்தில் எங்களிடம் சொன்னவரே ஓ.பி.எஸ்.தான். ஆட்சியில் அ.தி.மு.க. இருந்தபோது, ஆணையத்திடம் சாட்சியமளிக்க பலமுறை சம்மன் வந்தும் ஓ.பி.எஸ். ஆஜராகவில்லை. ஆட்சியை இழந்த பிறகு ஆணையத்தில் ஆஜராகிறார். இரட்டை வேடம் போட்டு நாடகம் ஆடுவதில் கெட்டிக்காரர். இதெல்லாம் தொண்டர்களுக்குத் தெரியும். அந்த வகையில் ஆணையத்தின் அறிக்கையை நாங்களும் எதிர்பார்க்கிறோம்''’என்கிறார் மிக இயல்பாக.

ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வழக்கறி ஞர் ஒருவரிடம் பேசியபோது, "ஒற்றைத் தலைமை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓ.பி.எஸ். ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததிலிருந்தே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும், தொண் டர்களும் ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். உதயகுமாரின் வலதுகரமாக இருந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் முயற்சியால் எங்கள் பக்கம் வந்துவிட்டார். இதற்கான பேச்சுவார்த்தையில் சில ரகசியங்கள் பேசி முடிக்கப்பட்டன.

ss

Advertisment

குறிப்பாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, ஓ.பி.எஸ். தலைமையை ஆதரிக்க சசிகலாவுக்கு டெல்லியின் வலியுறுத்தல், எடப்பாடி செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் கிடைக்கவிருக்கும் தீர்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவையெல்லாம் அய்யப்ப னிடம் ஜெயபிரதீப் எடுத்துச் சொல்லி யிருக்கிறார். அய்யப்பனைப் போல, பலரும் ஓ.பி.எஸ்.ஸை வெளிப்படையாக ஆதரிக்க முன் வருவார்கள். அதற்கு ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட் வெளியாக வேண்டும்''’என்கிறார்.

ஆணையத்தின் ரிப்போர்ட் பற்றி சசிகலாவின் ஆதரவாளர் என்.வைத்தியநாதனிடம் நாம் பேசியபோது, "அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சொல்லிவருகிறோம். அதைத்தான் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவும், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப் பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்த தவறும் நடக்க வில்லை என்று தனது அறிக்கையை ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் தந்திருக்கிறது.

ஆணையத்தில் சாட்சியமளித்த சாட்சிகள் யாரும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லவே இல்லை. அதனால் ஆணையத்தின் அறிக்கை சின்னம்மாவுக்கு எதிராக இருக்காது. ஆணையத்தை வைத்து விளையாட எடப்பாடி நினைத்திருக்கலாம். ஆனா, அவரது நினைப்பு ஈடேறாது.

ss

பினாமிகள் தடுப்புச் சட்டத்தில் சில பல ஷரத்துகளை மாற்றி, புதிதாக பினாமிகள் திருத்தச் சட்டத்தை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது மோடி அரசு. இது சின்னம்மா சசிகலாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அப்போது எதிரொலித்தது.

இந்த நிலையில், அந்த பினாமிகள் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், ’இந்த சட்ட மசோதா, 2016-க்கு முந்தைய வழக்குகளுக்குப் பொருந்தாது’என சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். அதனால், பினாமிகள் சட்ட திருத்தமும் கூட பாதிப்பை ஏற்படுத்தாது.

அதேபோல, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயரை மத்திய அரசு சேர்க்கவில்லை. ஆக, இவைகளின் மூலம் மத்திய அரசின் ஆதரவு சின்னம்மாவுக்கு இருக்கிறது என்பது புலனாகும். ஆணையத்தின் அறிக்கை வெளியானதும் சசிகலாவைச் சுற்றித்தான் அ.தி.மு.க. அரசியல் சுழலும்'' ‘’ என்கிறார் அதிரடியாக.

இதற்கிடையே, ”"அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் எங்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். விரைவில் அவர்களும் எங்களிடத்தில் வருவார் கள்'’என்று ஓ.பி.எஸ். போட்டுத் தாக்கியிருக்கிறார். இது குறித்து விசாரித்தபோது,”"தனக்கு துரோகம் செய்த எடப்பாடியிடம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உடைக்க வேண்டுமென சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகிறார் சசிகலா. அண்மைக்காலமாக எடப்பாடிக்கு எதிராக நடக்கும் விசயங்கள் எம்.எல்.ஏ.க்களிடமும் பொதுக்குழு உறுப்பினர்களிடமும் சில விவாதங்களை உருவாக்கி வருகிறது.

இதைப் பயன்படுத்தி சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் தரப்பிலிருந்து தலா ஒரு குழு என 3 குழுவினர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ரகசிய பேச்சுவார்த் தையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் ddமொத்தமுள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் ஓ.பி.எஸ்.ஸை ஆதரித்து 4 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். 62 பேர் எடப்பாடியை ஆதரிக்கிறார்கள். ஆனால், தற்போது நடந்துவரும் ரகசிய பேச்சுவார்த்தையின் முடிவில், 30 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியை விட்டு விலகி, எங்கள் பக்கம் வர ஒப்புதல் தந்துள்ளனர். இதில் எடப்பாடிக்கு எப்போதும் ஆதரவாக உள்ளவர்களும் அடக்கம்.

தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தை யில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். எடப்பாடி யிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப் படும். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களில் 1,102 பேரின் ஆதரவு அஃபிடவிட் பெறப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் விசயத்திலும் எடப்பாடி சரிவை சந்திப்பார்'' என்கிறார்கள் ஓ.பி.எஸ். தரப்பினர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் விசாரித்தபோது, "கட்சிக்குள் நடக்கிற அதிகார மோதல்களை ரசிக்க முடியவில்லை. தலைவர்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டுமென நினைக் கிறோம். ஆனால், தலைவர்களின் ஈகோவால் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவருக்கு சாதகமான நிலை உருவாகிறது. அதனால் எங்களிடம் குழப்பம் ஏற்படுகிறது. தெளிவான இறுதியான முடிவுகள் எட்டப்படும் போதுதான் எங்களின் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்க முடியும். அதுவரை எல்லா மூவ்களும் ரகசியம்தான்'' என்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் நடக்கும் அரசியல் கணக்குகள் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, ’"எடப்பாடியும் பன்னீரும் இணைந் திருந்தபோதே, மு.க.ஸ்டாலினை தோற்கடிக்க முடியவில்லை. இப்போது பிரிந்திருக்கும் சூழலில், அ.தி.மு.க.வின் 33 சதவீத வாக்குகளை இவர்களால் எடுக்க முடியாது. மேலும், தமிழகத் தில் தமிழ்த் தேசியத்தின் தாக்கம் அடிமட்ட மக்களிடமும், இந்துத்துவா வின் தாக்கம் மேல்மட்டத்திலும் நிறையவே இருக்கிறது. இதனால் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பிளவாக மாறும். சாதி ரீதியாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸுக்கு தனிப்பட்ட பலம் இருந் தாலும் மக்களை ஈர்க்கும் சக்தி இருவருக்குமே கிடையாது.

பா.ஜ.க. தலைமையை பொறுத்தவரை, முன்பு மாதிரி அ.தி.மு.க.வில் ரோல் வகிக்குமா என்பது தெரியவில்லை. இதற்கு முன்பு, ஓ.பி.எஸ்.ஸையும் இ.பி.எஸ்.ஸையும் இணைத்து வைத்து... சசிகலாவை அப்புறப்படுத்திவிட்டு அ.தி.மு.க.வில் லாபத்தையும் பார்த்தது பா.ஜ.க. இப்போ பா.ஜ.க.வுக்கு லாபத்தை கொடுக்கும் வகையில் தகுதியிலும் செல்வாக்கிலும் இவர்கள் இருவரும் இல்லை. அதனால் இவர்களை பா.ஜ.க. மதிப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் அ.தி.மு.க.வின் வலிமை முன்பு மாதிரி எழும்பும் என்பது சந்தேகம்தான்'' என்கிறார் அழுத்தமாக.

ஆணையத்தின் அறிக்கையும் உயர்நீதி மன்றத்தின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பும் வரும்போதுதான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி என்பதை தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் நிரூபிக்க இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் திட்டமிட்டுள்ளனர் என்பதே இறுதிக்கட்ட தகவல்.