தி..மு.க. அரசுக்கு எதிராகத் தீர் மானங்களை நிறைவேற்றி, அரசியல் அரங்கைத் திகைக்க வைத்திருக் கிறார்கள் கம்யூனிசத் தொழிற் சங்கத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டமும், மா.செ.க்கள் கூட்டமும் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில், ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடந்தது. சங்கத்தின் மாநி லத் தலைவரான எஸ். காசிவிஸ்வ நாதன் தலைமை ஏற்க, ஏ.ஐ. டி.யு.சி.யின் தேசியத் துணைத் தலைவரும் திருப்பூர் தொகுதி எம்.பி.யுமான கே.சுப்பராயன், ஏ.ஐ.டி.யு.சி. தேசிய செயலாளர் கள் டி.எம்.மூர்த்தி, வஹிதா நிஜாம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ் ணன் செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.

cc

Advertisment

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சின்னச்சாமி, "தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 12 ஆம் தேதி, தொழிற்சாலைகள் சட்டத்தைத் திருத்தி மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் சட்டம் ஒரு மத்திய சட்டமாகும். அதன் 51, 52, 54, 55, 56 மற்றும் 58 ஆம் பிரிவுகளில் திருத்தம் செய்யும் வகையில்தான் தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி, தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆபத்து வரும் என்பதால், அதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மேற்குறிப்பிட்ட விதிகளின் கீழ் இனிமேல் தொழிலாளர்கள் தமது உரிமைகளைக் கோர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்ற உரிமையில் கைவைக்கும் வகையில், காலையில் ஒரு மூன்று மணி நேரம், பிறகு இடைவெளி, மதியம் ஒரு மூன்று மணி நேரம், பிறகு இடைவெளி, இரவில் ஒரு இரண்டு மணி நேரம் என்று பிரித்துப் பிரித்துக் கூட வேலை கொடுக்கலாம் என்று இந்த திருத்த மசோதா வழிவகை செய்கிறது. இதனால் 8 மணி நேர உழைப்பு குறையாது. ஆனால் மாறாக, தொழிலாளர்கள் இனி தொழிற்சாலைக்குள் 12 மணி நேரம் வரை இருந்தாக வேண்டிய நிலை ஏற்படும்.

தொழிலாளர்களுக்கு இது அதிக நன்மையை ஏற்படுத்தும் என்று முதலாளிகளும், முதலாளிகளின் சங்கங்களும் கூறியதாக அரசின் மசோதாவே சொல்கிறது. இது சரிதானா? என தொழிலாளர்களிடமோ, தொழிற்சங்கங்களிடமோ அரசு ஒரு போதும் விவாதிக்கவோ கருத்துக்களைக் கேட்கவோ முயலவில்லை. குரல் வாக்கெடுப்பில் சில வினாடிகளில் இது நிறைவேற்றப்பட்டுவிட்டது. சட்ட மசோதாக்களை விவாதிக்க விடாமல் அவசர கதியில் நிறைவேற்றுவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் நீண்ட காலம் போராடிப் பெற்ற 150 ஆண்டுகால உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை, 40 வினாடிகளில் பா.ஜ.க. மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒன்றிய மோடி அரசின் அந்தச் சட்டங்களில் சொல்லப்பட்டு இருப்பவற் றையே, இப்போது தமிழ்நாட்டில் அமுலாக்கு வதற்காகவே இந்தச் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தமிழக அரசு தொழிலாளர் விஷயத்தில் தொடர்ந்து முதலாளிகள், கார்ப்ப ரேட்டுகள் சொல்லுகிறபடி நடந்து, தொழிலாளர் உரிமைகளை பறிப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. பல்வேறு துறைகளிலும் தொழிலாளர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்''’என்றவர், மேலும் விவரிக்கத் தொடங்கினார்....

"எட்டு மணி நேர வேலைக்காக நடத்தப் பட்ட போராட்டங்களின் நினைவாக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில், சென்னை கடற்கரையில்தான் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக மே தினத்தை 1923-ல் கொண்டாடினார். அதன் நூறாண்டு நிறைவாக இந்த வருட மே தினம் வரு கிறது. அதே கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் சட்டப்பேரவையில், 8 மணி நேர வேலையை அதிகரிக்கும் மசோதா, அவரை போற்றுபவர் களாலேயே நிறைவேற்றப்படுவது வருத்தத்திற் குரியது. எனவே, தமிழ் நாடு அரசின் தொழிற் சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானம் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்களின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநக ரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisment

இந்தக் கூட்டத்தில், ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, ஒன்றிய அரசு, தொழிலாளர் விரோதப்போக்கில் தயாரித்த நான்கு சட்டத் தொகுப்புகளையும் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூபாய் 21,000/- என நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 6000/- என நிர்ண யிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட இருக்கும் மாவட்ட, மாநில மாநாடுகள், துறைவாரியான கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள், பெருந்திரளான அமர்வு உள்ளிட்ட அனைத்தையும் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் முழுமை யாகப் பங்கெடுத்து வெற்றி பெறச் செய்வதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் ஏ.ஐ.டி.யு.சி.யின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் திருப்பூரில் நடத்துவதெனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது'' என கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளே தொழிலாளர் உரிமைக்காகக் போர்க் குரல் கொடுப்பதை உணர்ந்து, முதல்வர் ஸ்டா லின் இந்த விவகாரத்தில் கவனம் கொள்ளவேண் டும் என்ற எதிர்பார்ப்பு, பரவலாக இருக்கிறது.