தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் முக்கிய அம்சங்கள் :
2014-ஆம் ஆண்டிலி-ருந்து 8 ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து வந்தது. முதல்முறையாக இந்த ஆண்டு சுமார் 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை குறையவுள்ளது. நிதிப் பற்றாக்குறையும் 4.51 சதவிகிதத்திலி-ருந்து 3.80 சதவிகிதமாகக் குறைகிறது.
அதேசமயம், உக்ரைன் போரின் தாக்கம், தமிழக பொருளாதாரத்திலும் எதிரொ-லிக்கும்.
இதேபோல, யஆப நடைமுறையில் இருந்தபோது அடைந்த வருவாய் வளர்ச்சியை ஏநப வந்தபின் தமிழக அரசால் அடைய முடியவில்லை. கோவிட் இன்னும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு வழங்கும் ஏநப இழப்பீடு வரும் ஜூன் 30 உடன் முடிகிறது. இதனால் வரும் நிதியாண்டில் சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி இழப்பை தமிழகம் சந்திக்க நேரிடும் என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
அரசுப்பள்ளிகளில் பயின்று பின்னர் உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கெனவே அவர்கள் வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்றுவந்தாலும், இது கூடுதலாக வழங்கப்படும்.
இதேபோல, ஒஒப, ஒஒநஈ, ஆஒஒஙந உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங் களில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில், அம்மாணவர்களின் இளநிலை பட்டப்படிப்பு செலவை அரசே ஏற்கும்; 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டமான ஷநான் முதல்வன்’ திட்டத்துக்கு 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து கல்வியை இடைநிறுத்தம் செய்து திரும்பிய மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும், அதன்பின் மாணவர்களுக்கான வசதிகளைத் தமிழக அரசு செய்யும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகரில் வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 135 கோடி செலவில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப் படவுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒ-லிம்பிக் வீரர்களை தமிழகத்தில் உருவாக்க, ஷதமிழக ஒ-லிம்பிக் பதக்க தேடல் திட்டம்' செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 25 கோடி ரூபாய் இதற்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வடசென்னை இளைஞர் களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஆர்.கே.நகரில் சிறப்பு விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
தந்தை பெரியாரின் கருத்துகளை இந்திய மற்றும் உலகின் 21 மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவை மின்நூல்களாக வெளியிடப் படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வானிலையை முன்கூட்டியே துல்-லிய மாகக் கணிப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் 10 கோடி ரூபாய் செலவில் நவீன கட்டமைப்பு ஒன்றை அமைக்கவுள்ளது தமிழக அரசு. இதில் வானிலை பலூன் அமைப்பு, 2 வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் ஆகியவை இடம்பெறவிருக்கின்றன.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளி களை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ. 13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட 120 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை கொடுங்கையூரில் பல ஆண்டு களாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘இண்ர்-ம்ண்ய்ண்ய்ஞ்’ முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.
திடக்கழிவு மேலாண்மை உட்பட, முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும்.
பிரதமரின் கிராம சாலைத்திட்டம் ஒஒஒ-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை 791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை 221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 புதிய கூட்டுகுடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்திற்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை உயர்த்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 322 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்புப் பகுதிகளின் மறுமேம்பாடு (ழ்ங்-க்ங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற்) மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு “மறுமேம்பாட்டுக் கொள்கை” இந்த ஆண்டு வெளியிடும்.
மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் (ஞதத) கிழக்குப் பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக (உங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் ஈர்ழ்ழ்ண்க்ர்ழ்) மேம்படுத்தப்படும்.
திட்ட அனுமதி, கட்டிடம் கட்டுதல், மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்து வதற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,737.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலி-ருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங் களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப் படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பஆசநஒங-க்கு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும், 1000 புதிய வீடுகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர் களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடி யாகச் செலுத்தப்படும்.
விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும்.
சென்னையில் நடைபெறும் சதுரங்க ஒலி-ம்பியாட் நிகழ்ச்சியில் 150 நாடு களைச் சேர்ந்த 2000 முன்னணி சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டின் விளையாட்டு துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும்.
கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH)தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS)என்ற உயர்நிலை அமைப் பாக மேம்படுத்திட அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
முதல்வரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை உலகத் தமிழர்களுடன் இணைந்து செயல்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங் களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.
TIDCO, SIPCOT, TANSIDCO போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங் களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங் களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.
அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் படும்.
அரசுக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய பங்களிப்புடன், அறிவு சார் நகரம் (Knowledge City)உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.
வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை(Eco#Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டிடங்களை புனரமைக்க சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு “ரோவர்” (தர்ஸ்ங்ழ் ஙஹஸ்ரீட்ண்ய்ங்) கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 2800 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதி நிர்வாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.135 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்கப்படும்.
கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக, இம்மதிப்பீடுகளில் ரூ.2,787 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும்.
கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத் துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.
அகரமுதலி- உருவாக்கும் சிறப்புத் திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும்.
நகர்ப்புற உள்ளாட்சித் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர தமிழக அரசு உதவி செய்யும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
வரையாடுகளை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு.
புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங் களில் ரூ. 36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மருத்துவத்துறைக்கு ரூ.17,091 கோடி நிதி ஒதுக்கப்படும்.
சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு ஒ-ம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு..
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான அம்ருத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.
நகர்ப்புற பூங்காக்களை மேம்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்கீடு.
சேத்துமடை, ஏலகிரியில் சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வட சென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறை
கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டி ருந்ததன் காரணமாக, மாணவர் களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப் படும்.
மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms),இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வானிலை முன்னறிவிப்பு கட்டமைப்பை உருவாக்க ரூ. 10 கோடி ஒதுக்கப்படுகிறது. இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்திற்கு ரூ.8008 கோடி நிதி ஒதுக்கீடு.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங் களுக்கு ரூ.4816 கோடி ஒதுக்கப்படும் சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங் களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும் பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ. 5 கோடி செலவில் தொகுக்கப்படும்.
வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ. 20 கோடியில் செயல்படுத்தப்படும்.
பழமையான தர்காக்கள், தேவாலயங் களை புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.
இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ. 162 கோடி ஒதுக்கப்படும்.
தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங் களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயி களுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.
முதற்கட்டமாக ரூ.190 கோடி செலவில் 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் ரூ.7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.61%-ல் இருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.
உக்ரைன் போரால் வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்.
தமிழக அரசின் மின்பகிர்மான கழகத்திற்கு அளிக்கப்பட்ட மானியம், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றின் தாக்கம் இந்த பட்ஜெட்டில் காணப்படும்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும்.
முதல்வரின் முகவரின் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கொற்கையில் ரூ. 5 கோடியில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
கூட்டாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர் முயற்சி நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆனால், மாநில உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும்.
அவையில் அதிமுக அமளி: தமிழக சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு கோரி அமளியில் ஈடுபட்டார். அதிமுகவினரின் கூச்சல், குழப்பத்திற்கும் இடையே நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
சபாநாயகர் கண்டனம்: அவையில் அமளி செய்த அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வன்மையாகக் கண்டித்தார். எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவராக இருந்தவர்கள் ஏற்கெனவே முதல்வர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு பட்ஜெட் நாளன்று வேறு அலுவலுக்கு இடமில்லை என்று தெரியாதா? சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று அமைதி காத்திருக்கலாம் இல்லா விட்டால் அவையிலி-ருந்து வெளியேறி யிருக்கலாம். அமளியில் ஈடுபடுவதா நியாயமா? என்ற கேள்வியை முன்வைக் கிறேன் என்றார்.
திருக்குறளுடன் உரை: பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து (குறள் -738) மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.
இந்தத் திருக்குறளைக் கூறி உரையை அவர் தொடங்கினார்.
முதல் முழுமையான பட்ஜெட்: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தாக்கல் செய்தார். ‘காகிதம் இல்லா சட்டப்பேரவை’ என்ற திட்டத்தின்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதவடிவில் இல்லாமல் மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) தாக்கல்செய்தார். முதல்முறையாக வேளாண் துறைக் கென தனி பட்ஜெட்டை ஆக. 14-ஆம் தேதி துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
நாட்டில் மக்கள் தொகையில் தமிழ்நாடு மக்கள் தொகை 6.1 சதவீதம் ஆகும். நாட்டின் வளர்ச்சியில் 10 சதவீத பங்களிப்பு உள்ளது. ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி மாநிலத்திற்கு ஒதுக்கப்படவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கு அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
தமிழ் தொல்-லியல் மரபு குறித்து மாணவர்களுக்கு சொல்லவும், பாதுகாக்கவும் ரூ. 10 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள அருங்காட்சியகங்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
சமூக நீதியை நிலைநாட்ட கடைசி வரை போராடிய பெரியாரின் சிந்தனைகள் கொண்ட நூல்களின் தொகுப்பு 21 இந்திய, மொழிகளில் அச்சு மற்றும் மின்னணு வழியாக வெளியிடப்படும். இதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சமூக ஊடக குற்றங்களைத் தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும். கூட்டுறவு, பொது விநியோகம், உணவுத் துறைக்கு ரூ. 13, 176 கோடி. சுய உதவிக் குழுக்கள், வேளாண் கடன்களுக்கு ரூ. 4, 130 கோடி. நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 2, 787 கோடி.
காவிரி வடிநிலப் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 3, 384 கோடி.
காவிரி டெல்டாவின் 10 மாவட்டங்களில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4, 964 கி.மீ தூரத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு.
ரூ. 20 கோடியில் வள்ளலார் கால்நடைப் பாதுகாப்பகங்கள் அமைக்கப்படும்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கான வரையாடுகளைப் பாதுகாக்க ரூ. 10 கோடியில் திட்டம்.
பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 36, 895 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்படும் இல்லம் தேடி கல்வி 1.8 லட்சம் தன்னார் வலர்களைக் கொண்டு இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் நடப்பாண்டும் தொடர்கிறது. இதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு. ஏற்கெனவே 10 மாவட்டங் களில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளிகள் மேலும் 15 மாவட்டங்களில் தொடங்கப்படும். இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு.
புத்தக வாசிப்பு மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். இதற்காக மாவட்டங்களில் புத்தக காட்சிகள். ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ. 5.60 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 36, 895 கோடிகள் ஒதுக்கீடு. ஒலி-ம்பிக் போட்டி களில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒ-லிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு 293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரால் தமிழ்நாடு திரும்பி யுள்ள மாணவர்களின் கல்வி தடைபடாமல், எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். மருத்துவ துறைக்கு மொத்தம் ரூ. 17,901 கோடு ஒதுக்கீடு.
நிதிப்பற்றாக்குறை குறையும்
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு, ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. இந்த சவாலான ஆண்டிலும் நிதிப் பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.
அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச அனுமதித் திட்டத்தால் பெண்கள் வருகை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்திட்டத்திற்கு 1,520 கோடி ஒதுக்கீடு.தரைப்பாலங்களை மேம்பாலங்களாக கட்ட ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு.பயிர் உற்பத்தி துறையில் தமிழ்நாடு முத-லிடத்தில் உள்ளது. மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்களை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ. 5 கோடி.
கோவை, பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ. 75 கோடியில் புத்தொழில் உருவாக்க (ஸ்டார்ட் அப்) மையம் அமைக்கப்படும்.
மனித வள சீர்திருத்தக் குழு அமைக்கப் படும். பழமையான, சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு. இந்து சமய அறநிலையத் துறைக்கு மொத்தம் ரூ. 340 கோடி ஒதுக்கீடு.
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ. 19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்விச் சேர்க்கை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படும் திட்டத்தை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகளைக் கண்டறியும் வகையில் தரவுகளைத் திரட்டி, திட்டத்தை செயல்படுத்த வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.