றிவியல் தொழிலியல் ஆராய்ச்சி சபை யின் 5 வகையான ஆய்வுகளில் 3 குறித்து ஆராய்ந்து வரும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கோவிட் - 19 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரசின் மரபணு வரிசையைக் காண்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது.

c

லக்னோவில் உள்ள இந்த ஆய்வகம், தொடக்கத்தில் சில நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் வகைகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தும். இந்தச் செயல்பாடு முதல் வகை ஆராய்ச்சிப் பணியான டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு ஆய்வு என்பதின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும்.

இப்போதைய ஆய்வுகளின்படி, இந்த வைரஸின் 8 வெவ்வேறு வகைகள் கோவிட்-19 தொற்றினை ஏற்படுத்துகின்றன எனத் தெரியவந்துள்ளது. வைரஸின் மரபணு வரிசை மாற்றங்கள் உத்தேச சிகிச்சை அணுகு முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Advertisment

தனிநபர் உபயோகத்திற்கு பாதுகாப்பு கவச உடை பெங்களூருவில் உள்ள CSIR ஆய்வகத்தின் ஒரு பகுதியான, தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL), MAF ஆடை நிறுவனத்துடன் இணைந்து, முழு பாதுகாப்பு கவச உடையை உருவாக்கி சான்றளித்துள்ளது. கோவிட்-19 காரணமாக இரவு பகலாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பல அடுக்கு பாலிப்ரொப்பிலீன் (Polypropylene) துணி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த கவச உடையைப் பயன்படுத்தலாம்.

CSIR-NAL குழுவின் தலைவர் டாக்டர் ஹரிஷ் சி பார்ஷிலியா, டாக்டர் ஹேமந்த் குமார் சுக்லா, மற்றும் MAF இன் எம். ஜே விஜு ஆகியோர் உள்நாட்டு பொருட்கள் மற்றும் புதுமையான உற்பத்தி செயல்முறைகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரை வாக பணியாற்றியுள்ளனர். இந்த கவச உடைகள் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு தகுதி பெற்றன. CSIR-NAL மற்றும் MAF-ம், நான்கு வார காலத்திற்குள் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு சுமார் 30,000 உடைகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.

c

Advertisment

புதிய கொரோனா வைரசின் மரபணு

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB), மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (IGIB) ஆகியவற்றுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கழகத்தின் (CSIR) மேலும் ஒரு நிறுவனம் புதிய கொரோனா வைரஸின் முழு-மரபணு வரிசையைக் கண்டறியும் ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. சண்டிகரை தளமாகக் கொண்ட நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் (IMTech) வைரசினுடைய மரபணு வரிசையைக் கண்டறியப் பெரியள விலான ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளது.

முழு-மரபணு வரிசைமுறை என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்துடைய மரபணுவின் முழுமையான DNA வரிசையை கண்டறியப் பயன்படுத்தப் படும் ஒரு முறையாகும். CSIR-இன் IMTech நிறுவனம் நுண்ணுயிர் மற்றும் மரபணு ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், மருத்துவ மாதிரிகளி லிருந்து தனிமைப்படுத்தப்பட்ட SARS-Cov-2 RNA மரபணுவின் வரிசை முறையைக் கண்டறியும் ஆய்வை மேற்கொள்ளும். மரபணு வரிசைகளை வெவ்வேறு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் வகையில், 2008-இல் உலக சுகாதார அமைப்பால், சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட பொதுத்தளத்தில் (GISAID) அனைத்து ஃப்ளூ காய்ச்சல் தரவையும் பகிர்வதற்கான உலகளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் இதுவரை சர்வதேச அளவில் 9000 மாதிரிகள் வரிசைப்படுத்தும் ஆய்வு நடைப்பெற்றுள்ளது. இந்த வரிசைப்படுத்தும் முறையிலிருந்து பெறப்பட்ட மரபணு மூலமாக, ஈஞயஒஉ-19 நோய்த் தொற்றைக் கண்டறியும் பரிசோதனையை செய்து, அதற்கான மருந்தையும் எளிதில் கண்டறிய முடியும்.

பரிசோதனை கருவி

COVID-19 தொற்று உள்ளதா என்பதை இரண்டு மணி நேரத்திலேயே உறுதிப்படுத்தக் கூடிய, குறைந்த செலவிலான, கோவிட்-19 தொற்று கண்டறியும் பரிசோதனை கருவி ஒன்றை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான, திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது.

கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்து வதற்கான, இந்தப் பரிசோதனை, வைரல் நியூக்ளிக் அமிலத்தில், ரிவர்ஸ் டிரன்ஸ்கிரிப்டேஸ் மீடியா ஆம்பிளிஃபிகேஷன் எனப்படும், முறையைப் பயன்படுத்தி சர் கோவ்-2வில் என் மரபணுவைக் கண்டறியும். இது உலகில் முதன் முறையான பரிசோதனை முறை என்றில்லாவிட்டாலும், முதல் சில பரிசோதனை முறைகளுள் ஒன்றாக இருக்கும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட் பத்துறை நிதி உதவியுடன் தயாரிக்கப் பட்ட, சித்ரா ஜீன் லாம்ப் என் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசோதனை கருவி, சார்ஸ் கோவ் 2 என் மரபணுவை மிகக் குறிப்பாக கண்டறியவல்லது. அதுமட்டுமல்லாமல், மரபணுவின் இரண்டு பகுதிகளைக் கண்டறியவல்லது. வைரஸ் மரபணு, அதன் அப்போதைய வேகத்தில், ஒரு பகுதியில் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டிருந்தாலும், மற்றொரு பகுதியில் அதைக் கண்டறிந்து விட முடியும் என்பதால், இந்தப் பரிசோதனை தோல்வியடையாது என்பதை இதனால் உறுதிப்படுத்த முடியும்.

cc

தடுப்பு மருந்து தயாரிக்க ஆராய்ச்சி அச்சுறுத்தும் நோவல் கொரோனா வைரசுக்கு எதிராக செயலிழக்கப்பட்ட வைரஸைக் கொண்ட தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிப் பணிகளை செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம் (The Centre for Cellular & Molecular Biology - CCMB) தொடங்கி யுள்ளது. செயலிழக்கச் செய்யப்பட்ட வைரசைக் கொண்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானது மற்றும் எளிதில் தயாரிக்கக் கூடியது ஆகும். கொரோனா வைரஸ் பரவுவதையும், அதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் கட்டுப்படுத்துவதற்கு நமக்குள்ள உறுதியான மற்றும் பலன் அளிக்கும் ஒரே வழி தடுப்பு மருந்து மட்டுமே ஆகும். உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது தடுப்பு மருந்துத் தயாரிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நம்பிக்கை தரும் 42 நிறுவனங்களின் பெயர்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) பட்டியலிட்டுள்ளது. செயலூக் கமான வைரஸ் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு பிறகு அவை ஒரு வேதிப்பொருளால் அல்லது வெப்பத் தால் கொல்லப்படும். நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் கொல்லப்பட்டாலும் - அதன் மறுஉற்பத்தித் திறன் செயலிழக் கப்பட வைக்கப்பட்டாலும் கூட அந்த வைரஸின் பல்வேறு பாகங்கள் உயிர்ப்புடன் தான் இருக்கும். உதாரண மாக செல்களுக்குள் ஊடுருவும் வைரசின் சூரியக்கதிர் வடிவிலான புரத மானது உயிர்ப்புடன் தான் இருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பால் கண்டுணரப்படும் வைரசின் ஆன்ட்டிஜன் (வேதிப்பொருள் கட்டமைப்பு) சேதம் அடையாமலேயே இருக்கும். இறந்துபோன நுண்ணுயிரியானது உடலுக்குள் உட்செலுத்தப்படும்போது, சேதம் அடையாமல் விடுபட்டு இருக்கும் குறிப்பிட்ட எதிரியாக்கிகளுக்கு (Antigen)எதிராக நோய் எதிர்ப்புப் பொருள்களை உருவாக்குமாறு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு தந்திரமாகத் தூண்டி விடப்படுகிறது. அதாவது நுண்ணுயிர்க் கிருமி இறந்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படும். இந்த வழிமுறையில் தான் செயல் இழக்கச் செய்யப்பட்ட போலியோ சொட்டு மருந்தும், ரேபீஸ் தடுப்பு மருந்தும் தயாரிக்கப்படுகின்றன. நுண்ணுயிர்க்கிருமி இறந்து விட்ட தனால் அதனால் மறு உற்பத்தி செய்து கொள்ள முடியாது. மிகச் சிறிய அளவில்கூட நோயை உண்டாக்க முடியாது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்குக் கூட இந்த தடுப்பு மருந்துகளை தருவது என்பது பாதுகாப்பானது ஆகும். அதாவது வயதானவர்கள், பல நோய்கள் ஒரு சேர இருப்பவர்கள் என யாருக்கு வேண்டுமென்றாலும் இதனை வழங்கலாம். இந்த ஆராய்ச்சி தவிர, சி.சி.எம்.பி நிறுவனமானது மாதிரிகளை சேகரித்துத் தொகுத்து வைத்து வைரஸ் தொற்று உள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் பலரின் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்க்கும்.

கோவிட்-19 தொற்று

கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளில். வளர்சிதை மாற்றத்தில், மாற்றங்கள் கொண்டு வருவது பற்றி, மும்பையில் உள்ள சில மருத்துவமனைகளுடன் இணைந்து மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) நடத்தும் ஆய்வுகளுக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் சட்டபூர்வமான அமைப்பாகிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் ஆதரவளிக்கும். கோவிட்-19 தொற்று ஆரம்ப கட்ட நிலைகளிலிருந்து முற்றிய நிலைகளுக்குச் செல்லுமா என்பதைக் கண்டறியக் கூடிய உயிரியல் குறிப்பான்களை இந்த ஆய்வு கண்டறி யும். உயிரியல் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான இந்த ஆய்வில், பல்வேறு பிரச்னைகளுடன் உள்ள வெவ்வேறுவிதமான நோயாளிக் குழுக்களை, அவர்களின் வளர்சிதை மாற்ற விவரங்களைக் கண்டறிவதும் அடங்கும். மெட்டாபொலைட்ஸ் எனப்படும் வளர்சிதை மாற்ற வேதியியல் கூறுகள், உயிரினங்களை எல்லாவற்றிலும் உள்ள பல்வேறு பாதைகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உயிரியல் கூறுகளாகும். ப்ரோட்டோமிக்ஸ் மற்றும் மெட்டாபாலமிக்ஸ் ஆய்வுக்காக, பல்வேறு தரப்பட்ட மனிதர்களை கையாளும் நிபுணத்துவம் கொண்ட, 20-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, இப்பணியில் ஈடுபடும். வளர்சிதை மாற்றம் அல்லது ப்ரோட்டியம் பற்றிய விரிவான ஆய்வுகளின் மூலமாக, உயிரியல் குறிப்பான்களை உறுதிப் படுத்துவதன் அடிப்படையில், கோவிட்-19 தொற்று மிதமாக அல்லது தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளி களை வேறுபடுத்திப் பார்க்க இது ஒரு நல்ல அணுகுமுறை. இது வெற்றி பெற்றால், முற்றிய நிலையில் உள்ள நோய்களைக் கண்டறிவது; சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுக்குமான உத்திகளுக்கு இது உதவும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா கூறினார்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)