த்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிலீஜியம் முறை நியமனங்கள் குறித்து பேசினார். அப்போது, "

"கொலிலீஜியம் அமைப்பை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நீதித்துறை நியமனங்கள் விரைவில் நடைபெறும். தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் விவாதிக்கப்படும். நீதிபதிகள், சட்ட அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் இருந்த அனைவருக்கும் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன்” என்றார்.

ரிஜிஜுவின் அறிக்கைகள், உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பான நீண்ட கால விவாதத்தை மீண்டும் தொடங்குகின்றன. பணி நியமனங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சட்டத்தை கொண்டு வர அரசு மேற்கொண்ட முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத் தால் முறியடிக்கப்பட்டது. அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டில், ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற பெஞ்ச், ‘இரண்டாவது நீதிபதிகள் வழக்கு’ என்று அழைக்கப்படும் அதன் 1993 தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான மனுவை நிராகரித்தது, இது தற்போதுள்ள ‘கொலிலீஜியம் அமைப்பை’ நிறுவுவதில் பிரதானமாக இருப்பதாக கூறப்படுகிறது.

dd

Advertisment

கொலீஜியம் அமைப்பு

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யப்படுவதற்கான வழி கொலிலீஜியம் அமைப்பாகும். கொலீஜியம் அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது பாராளுமன்றத்தால் பிரகடனப்படுத்தப் பட்ட ஒரு குறிப்பிட்ட சட்டத்திலோ வேரூன்றவில்லை; அது உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புகள் மூலம் உருவானது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் என்பது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும், இது தற்போதைய தலைமை நீதிபதியின் (ஈஓஒ) தலைமையிலானது மற்றும் அந்த நேரத்தில் நீதிமன்றத்தின் மற்ற நான்கு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது.

உயர் நீதிமன்ற கொலீஜியம் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் அந்த நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளால் வழிநடத்தப்படுகிறது. அதில் இயல்பாகவே கொலீஜியத்தின் அமைப்பு தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது, மேலும் அதன் உறுப்பினர்கள் ஓய்வுபெறும் முன், பெஞ்சில் மூப்பு பதவிகளை வகிக்கும் காலத்திற்கு மட்டுமே பணியாற்றுவார்கள். உயர் நீதித்துறையின் நீதிபதிகள் கொலிலீஜியம் அமைப்பின் மூலம் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.

கொலீலிஜியத்தால் பெயர்கள் முடிவு செய்யப்பட்ட பின்னரே அரசாங்கத்தின் பங்கு உள்ளது. உயர் நீதிமன்றக் கொலீஜியத்தால் நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்படும் பெயர்கள், தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றக் கொலீஜியத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்துக்குச் சென்றடையும்.

ஒரு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத் திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நீதிபதியாக உயர்த்தப்பட வேண்டு மென்றால், புலனாய்வுப் பணியகம் (ஒஇ) நடத்தும் விசாரணையைப் பெறுவதற்கு மட்டுமே இந்த முழு செயல்முறையிலும் அரசாங்கத்தின் பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

கொலீஜியத்தின் தேர்வுகள் குறித்து அரசாங்கம் ஆட்சேபனைகளை எழுப்பலாம் மற்றும் விளக்கங்களைப் பெறலாம், ஆனால் கொலீலிஜியம் அதே பெயர்களை மீண்டும் வலியுறுத்தினால், அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்புகளின் கீழ், அவர்களை நீதிபதிகளாக நியமிக்க அரசாங்கம் பிணைக்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் அரசாங்கம் நியமனங் களை தாமதப்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில சமயங்களில் இத்தகைய காலதாமதங்கள் குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2) மற்றும் 217 ஆகிய பிரிவுகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங் களுக்கு நீதிபதிகள் நியமனம் பற்றி கூறுகின்றன.

நியமனங்கள் குடியரசுத் தலைவரால் செய்யப்படுகின்றன, அவர் “உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் போன்றவர்களுடன்” ஆலோசனை நடத்த வேண்டும்.

ஆனால் இந்த நியமனங்களைச் செய்வதற்கான எந்தவொரு செயல்முறையையும் அரசியலமைப்பு வழங்கவில்லை. பிரிவு 124(2) உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவார் என்று வரையறுக்கிறது. அதேபோல் பிரிவு 217, உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும், இந்தியத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்தபின் பிற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறுகிறது.

நீதிபதிகளின் வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சியான தீர்ப்புகளில் இருந்து கொலீஜியம் அமைப்பு உருவானது. இந்த நீதிபதிகள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் செய்த அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளின் விளக்கங்கள் கொலிலீஜியம் அமைப்பு உருவாக காரணம் ஆகும்.

முதல் நீதிபதி வழக்கு

‘எஸ்பி குப்தா யள் இந்திய அரசாங்கம்’, இடையேயான வழக்கில் 1981-இல், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் தலைமை நீதிபதியின் முதன்மைக் கருத்து உண்மையில் அரசியலமைப்பில் வேரூன்றவில்லை என்று கூறியது. உயர் நீதிமன்றத் திற்கு நியமனம் செய்வதற்கான முன்மொழிவு, சட்டப்பிரிவு 217-இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்த அரசியலமைப்புச் செயலாளரிட மிருந்தும் வெளிவரலாம் என்றும், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்து அவசியமில்லை என்றும் அது கூறியது. முதல் நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் உள்ள அதிகார சமநிலையை நிர்வாகத்திற்கு ஆதரவாக சாய்த்தது. இந்த நிலை அடுத்த 12 ஆண்டுகளுக்கு நீடித்தது.

இரண்டாம் நீதிபதி வழக்கு

இது உச்ச நீதிமன்ற ஆன் ரெகக்கார்ட் வழக்குரைஞர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துக்கு இடையேயானது. 1993-இல் இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பெஞ்ச் விசாரித்தது.

இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் “ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும்” செயல்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இந்த வழக்கின் பெரும்பான்மை தீர்ப்பு, நியமனம் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான விஷயங்களில் தலைமை நீதிபதிக்கு முன்னுரிமை அளித்தது. மேலும் அரசியலமைப்பில் பயன்படுத்தப்படும் “ஆலோசனை” என்ற வார்த்தை நீதித்துறை நியமனங் களில் தலைமை நீதிபதியின் முக்கிய பங்கைக் குறைக்காது என்று தீர்ப்பளித்தது.

கொலிலீஜியம் முறையை அறிமுகப்படுத்தி, இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பில், சி.ஜே.ஐ தனது இரண்டு மூத்த சக ஊழியர்களுடன் கலந்தாலோசித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், அத்தகைய பரிந்துரை பொதுவாக நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட பெயருக்கு ஆட்சேபனை இருந்தால், கொலீலிஜியம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்வாகத்திடம் கேட்கலாம் என்றாலும், மறுபரிசீலனையில், கொலீலிஜியம் பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், நிர்வாகி நியமனம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதும் கூறப்பட்டது.

மூன்றாவது நீதிபதி வழக்கு

1998-இல், அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், “ஆலோசனை” என்ற வார்த்தையின் பொருள் குறித்து அரசியலமைப்பின் (ஆலோசனை அதிகார வரம்பு) 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு குறிப்பு ஒன்று அளித்தார். அப்போது, தலைமை நீதிபதியின் கருத்தை உருவாக்குவதற்கு பல நீதிபதிகளுடன் கலந்தாலோசிப்பது “ஆலோசனைக்கு” தேவையா அல்லது தலைமை நீதிபதியின் கருத்து மட்டுமே “ஆலோசனையாக” அமையுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நியமனங் கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கோரமின் செயல்பாட்டிற்கு உச்ச நீதிமன்றம் ஒன்பது வழிகாட்டுதல்களை வகுத்தது. இது கொலீஜியத்தின் தற்போதைய வடிவமாக இருந்து வருகிறது, அன்றிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.

இரண்டாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பின்படி, சி.ஜே.ஐ மற்றும் அவரது நான்கு மூத்த சகாக்களால் பரிந்துரைக்கப் பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. உத்தேசிக்கப்பட்ட பெயர் வந்த உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் இரண்டு நீதிபதிகள் பாதகமான கருத்தை தெரிவித்தாலும், தலைமை நீதிபதி பரிந்துரையை அரசுக்கு அனுப்பக் கூடாது என்றும் கூறப் பட்டது.

கொலீஜியம் அமைப்பு மீதான விமர்சனம் தகுதிக்கான அளவுகோல்கள் அல்லது தேர்வு நடைமுறை போன்றவற்றில் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் இல்லாத மூடிய கதவு விவகாரமாக இது பார்க்கப்படுகிறது. ஒரு கொலீஜியம் எப்படி, எப்போது கூடுகிறது, அதன் முடிவுகளை எப்படி எடுக்கிறது என்பது பற்றிய பொதுவான அறிவிப்புகள் இல்லை.

மேலும், கொலிலீஜியம் நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ நிமிடங்கள் எதுவும் இல்லை. வழக்கறிஞர்களும் தங்கள் பெயர்கள் நீதிபதி பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்பட்டதா என்பது அறியாமல் இருளில் உள்ளனர்.

உயர் நீதித்துறையின் நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான கொலிலீஜியம் அமைப்பு நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, சில சமயங்களில் நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதல்கள் மற்றும் நீதித்துறை நியமனங்களின் சுணக்கம் ஆகியவையும் சுட்டிக் காட்டப் படுகின்றன.

நீதித்துறை நியமன வரலாறு பிஜேபி தலைமையிலான பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் (1998-2003) அரசாங்கம், கொலீஜியம் முறையை மாற்ற வேண்டுமா என்பதை ஆராய நீதிபதி எம் என் வெங்கடாசலையா ஆணையத்தை நியமித்தது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (சஓஆஈ) அமைக்கப்பட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது, அதில் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத் தின் இரண்டு மூத்த நீதிபதிகள், இந்திய சட்ட அமைச்சர் மற்றும் பொதுமக்களில் இருந்து ஒரு பிரபல நபர் ஆகியோர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனையும் முக்கிய பங்கு வகிக்கும்.

அந்த வகையில், சஓஆஈ உருவாக்கம் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும், 2015-ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், உயர் நீதித்துறைக்கான நியமனங்களில் நிறைவேற்று அதிகாரி களுக்கு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட சஓஆஈ -ஐ உருவாக்க முயன்ற அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நிராகரித்தது.

மேலும், நீதிபதிகளின் நியமனங்கள் கொலீலிஜியம் அமைப்பால் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கிடையில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மற்றொரு மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அவருக்கு பின் சரத் பாப்டே, என்.வி. ரமணா மற்றும் யூயூ. லலித் ஆகியோர் பதவி யேற்றுள்ளனர்.

_________________

நீதிபதிகள் நியமன முறை முன்னேற்றமடைந்த நாடுகளில் மூன்று முறைகளில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

Advertisment

அவை 1. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை இம்முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சில மாகாணங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. லாஸ்கி மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை மோசமானது. எனவே அவர்கள் வழங்கும் தீர்ப்புகளும் நியாயமானவை களாக, உண்மையானவைகளாக இருக்க முடியாது என்று கூறுகிறார் கார்னர்.

2. சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறை இம்முறை சுவிட்சர்லாந்தில் உள்ள கான்டன்கள் (ஈஹய்ற்ர்ய்ள்) என்று அழைக்கப்படும் மாகாணங்களில் பின்பற்றப்படுகிறது. இது ஒரு சிறந்த முறையாகாது. அதிகாரப் பிரிவு கோட்பாட்டிற்கு மாறானது. அல்லாமலும் அப்போது ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக நீதிபதிகள் செயலாற்றுவார்கள்.

3. நிர்வாகத்தால் நியமிக்கப்படும் முறை இம்முறை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பின்பற்றப் படுகிறது. உலகின் இதர பல நாடுகளும் இம்முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றன. இந்த முறையில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தேர்வுகள் எழுதுவதன் மூலமாகவும் நேர்காணல் மூலமாகவும் இதர தகுந்த தேர்வு முறை அடிப்படையிலும் நியமிக்கப்படுகிறார்கள். நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், அனுபவங்கள் எல்லாம் பார்த்து அந்த அடிப்படையில் அவர்கள் நீதித்துறை தொடர்புடைய அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு நிர்வாகத்திற்குக் தலைமையாக இருப்பவரால் நியமிக்கப்படுவதால் அவர்கள் சுயமாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்ற முடியும்.