பக்குவப்படுதலின்
ஞானவெளி
கதவுக்குவெளியே
எனைநிறுத்தியிருக்கிறது
அடைத்தகதவுதிறந்து
மீட்டெடுக்கஒப்புக்கொள்ளும்
தருணங்களின்பொறுமைக்காக
புடம்போடும்காலத்தின்
கட்டளைக்குகாத்திருப்பேன்
இருண்மைக்கும்இம்மைக்கும்
இடையேஉழலும்பேரியக்கம்
நிபந்தனையென்றபெயரில்
சுழலும்இப்பிரபஞ்சம்முழுதும்
அலுப்பற்ற
அன்பினைச்சொல்லும்படி
ஏவுகிறதுஎன்னை
இடரினும்தளரிலா
பொழுதாக்கிக்கொள்ள
அமைதியையும்
பொறுமையையும்
போதித்தபுத்தனை
எனக்கும்சிறிதுஇரவலாய்
தரக்கேட்கிறேன்
பதிலற்றுஇன்னும்
மௌனித்தேகடக்கிறான்.
மௌனம்வன்மையானஆயுதம்
அதைக்கைக்கொள்வது
எப்படிஎன்றால்
ஓயாதபுன்னகையை
வீசிவீற்றிருக்கிறான்.
-உமா மஹேஸ்வரி பால்ராஜ்