அடையாளம்இல்லாததொண்டன்
அறிவாலயம்வந்தபோதும்
அவனைப்பெயர்சொல்லி
அழைத்தாய்
கண்ணுக்குத்தெரியாத
ஒருமகுடம்முளைத்தது
அவன்தலையில்.
வகுப்பறையில்உட்கார்ந்து
தமிழ்படிக்காதஎங்களை
உன்பொதுக்கூட்டங்களில்
இரண்டுமணிநேரம்
நிற்கவைத்துத்
தமிழ்சொல்லிக்கொடுத்தாய்.
கரகரவென்ற
உன்குரலின்இனிமையில்
சரசரவென்று
சேகரமாயிற்று
சங்கத்தமிழ்எங்களுக்குள் .
உன்உதடுகளில்உச்சரிக்கப்படும்
ஒவ்வொருபெயரும்
தமிழ்நாட்டின்வரலாற்றில்
இடம்பெற்றது.
ஆகவேஉன்னைஎதிர்த்தாவது
தம்பெயரைநிலைக்கவைக்க
உன்எதிரிகள்கூட
தவம்கிடந்தனர்.
துரோகங்கள்உன்னை
நிழல்போல்துரத்தின.
நீயோஅவற்றை
மிதித்துக்கொண்டேநடந்தாய்.
வெயிலுக்கோமழைக்கோ
உனக்குக்குடைகள்
கிடைத்ததில்லை .
ஆனால்எங்கள்மீது
வெயிலும்மழையும்
படாதிருக்க
நீயேகுடையாய்ஆனாய்.
தமிழ்நாட்டின்
வெண்கொற்றக்கொடை
அல்லவாநீ.
2000 ஆண்டுப்போருக்கு
20 வயதுஇளைஞனாய்
இருந்தபோதே
முரசொலிகொட்டினாய்.
போர்என்றால்
வேட்டியைவரிந்துகட்டிக்கொண்டு
முதல்ஆளாய்க்
களத்தில்நிற்பாய்.
புயல்மழைவந்தால்
வேட்டியைமடித்துக்கட்டிக்கொண்டு
முதல்ஆளாய்
நிலத்தில்நிற்பாய்.
போருக்குநெருப்பாகவும்
வேருக்குநீராகவும்இருந்தவன்நீ.
பேருக்குத்தலைவன்இல்லைநீ
அதனால்தான்
ஊருக்குள்
யாருக்கும்உன்போல்புகழில்லை.
காயங்களையே
அலங்காரமாக்கிக்கொண்ட
களப்போராளியே
ஆதிக்கவெறியோடு
நுழையமுயன்றரயில்களை
தண்டவாளத்தில்
தலைவைத்துப்படுத்துத்
தடுத்தாய் .
பெரியாரின்மூளையையும்
அண்ணாவின்
இதயத்தையும்
ஒருசேரபெற்றவன்நீ.
உன்கல்லறையும்
தமிழ்ப்பகைவர்களின்
சிம்மசொப்பனம்.
எங்களுக்கோஅதுஅன்பகம்.
உன்பேனாவுக்குள்தான்
எத்தனைகற்பனைகள்
ரோமாபுரிமுதல்
சமத்துவபுரம்வரை?
கருக்கொடுத்த
எல்லாவற்றுக்கும்
உன்காலத்திலேயே
உருக்கொடுத்தாய்.
காட்சிகளைஎழுதிய
உன்பேனாவால்தான்
ஆட்சிகளையும்எழுதினாய்.
அதுவேதமிழரின்மீட்சியானது.
வள்ளுவத்தை
முதலில்
குறளோவியமாக
ஏட்டில்எழுதியாய்.
பின்
வள்ளுவர்கோட்டமாக
சென்னையில்கட்டினாய் .
பிறகு
வானுயர்ந்தசிலையாக
குமரியில்எழுப்பினாய்.
தமிழ்க்கப்பலுக்குஅதுதான்
கலங்கரைவிளக்குஎன்று
எளிதாய்உணர்த்தினாய்
எங்களுக்கு.
இறவாப்புகழ்பெற்றவனே
தமிழ்நாட்டின்
தலைமைச்செயலகம்நீ
தமிழ்இலக்கியத்தின்
அறிவாலயம்நீ.
பேருந்தில்வரும்போது
குமரியில்இருந்து
சென்னைவரும்வரை
பாலங்களில்எல்லாம்
உன்பெயரைப்
பார்த்துக்கொண்டேவருவேன்.
அதுடெல்லிவரை
நீளவேண்டும் .
நீஅமைத்த
வள்ளுவர்சிலையின்நிழல்
நாடாளுமன்றத்தின்மீதும்
விழவேண்டும்.
ஐ.நா. வையும்
தமிழ்ஆளவேண்டும்.
தமிழன்தலைநிமிர்ந்து
வாழவேண்டும்.