கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசன் எழுதிய ’எழுதுகோல் பேசுகிறேன்’, ’ஒரு மழை நாளும் சில தூறல்களும்’ஆகிய இரு நூல்களில் வெளியீட்டு வி,சென்னை வடபழனியில் உள்ள மேப்பிள் ட்ரீ ஓட்டலில் கவித்துவமாய் நடைபெற்றது. ’நந்தவனம்’ அறக்கட்டளை நிறுவனர் சந்திரசேகரன் விழாவை சுவைபடத் தொகுத்து வழங்க, மணல்மேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரி முதல்வர் சுமதி நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அவர் தன் உரையில் ’’மணிமேகலையின் கவிதை, காதலைத் தாலாட்டுகிறது. இப்படிப்பட்ட உயர்ந்த, சிறந்த கவிதை வரிகள் தமிழுக்கு நலம் பயக்கும். எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் அப்போது மணிமேகலையின் காதலராகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அந்த அளவிற்கு அவரது கவிதைகள் ஈர்க்கின்றன’’ என்று சொல்லி அவையைக் கலகலப்பாக்கினார்.
நூலின் முதல் படிகளை தொழிலதிபர்களான ’லிம்ரா பேக்ஸ்’ சாதிக்பாட்சாவும், கே.எம்.ராஜேந் திரனும் பெற்றுக்கொண்டனர். கவிஞர் தென்றல் தன் வாழ்த்துரையில் ’’எனக்கு முகநூல் மூலம் சுடர்வீசும் முத்தாகக் கிடைத்தவர் மணிமேகலை. அவரது கவிதை களின் ரசிகை நான். அவர் கவிதைகளைப் படிக்க வில்லை என்றால். அன்றைய நாள் எனக்கு சுவையாகக் கழியாது’’ என்றார் உற்சகமாய். கவியரசு கண்ணதாச னின் புதல்வரான கோபி கண்ணதாசனோ’’ மணிமேகலை அட்சய பத்திரம் போல் அன்பைச் சொரிபவர். கனடா வுக்குப் போகும் போதெல்லாம் அவர் அன்போடு அழைத் துச்சென்று விருந்துகொடுத்து உபசரிப்பார்’’ என்று கவிஞரின் விருந்தோம்பலைப் பாராட்டினார்.
மூத்த தமிழறிஞர் முனைவர் நா. நளினிதேவியோ ’அந்தக் கால மணிமேகலையின் கைகளில் அட்சய பாத்திரம் இருந்தது. இப்போதைய நம் மணிமேகலையின் கைகளில் தமிழுக்கு விருந்து கொடுக்கும் கவிதையெனும் அட்சயபாத்திரம் இருக்கிறது’’ என்று வாழ்த்தினார்.
திறனாய்வுரை வழங்கிய கவிஞர் பாரதி பத்மாவதி, ‘வாழ்க்கை என்னும் காசோலையில் இறைவனின் கையெழுதுதான் புன்னகை. அதைத் தன் எழுத்துக்களின் வழியாகவும் மலர்த்துகிறார் நம் மணிமேகலையம்மா’’ என்று நெகிழ்ந்தார்.
கவிஞர் சொர்ணபாரதியோ “இந்த நூலை காதலுக்கு அர்ப்பணம் என்று கவிஞர் மணிமேகலை குறிப்பிட்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து பாடு பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூல் இதுதான்’’ என்று பாராட்டினார்.
தேனியில் இருந்து வந்திருந்த கவிஞர் புருசோத்தம குமரகுருவோ “ முகநூலில் கவிஞர் மணிமேகலை கவிதைகளை எழுதும் வேகம் அலாதியானது. அவரது கவிதையை ரசித்து நம் கருத்துக்களைப் பதிவிட்டு முடிப்பதற்குள் அவரது அடுத்த கவிதை அங்கே மலர்ந்திருக்கும்’’ என்று வியந்தார்.
நிறைவாக வாழ்த்திய நக்கீரன் முதன்மைத் துணை ஆசியரான ஆரூர் தமிழ்நாடன் ’’மணிமேகலை ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர். தன் குடும்பத்தினரையும் உறவுகளையும் பிரிந்த வலியை அனுபவித்தவர். அவரது தந்தையார் என்ன ஆனார் என்றே தெரியாத நிலை. போர்க்களத்தில் தொலைந்து போன தன் தந்தை யைத் தேடி, அவர் ஆண்டுதோறும் இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார். வலிகளை யும் காயங்களையும் சுமந்த போதும், அவர் புன்னகையையும் தன்னம்பிக்கையையும் மட்டுமே தன் கவிதைகளில் விதைக்கிறார்.இப்படிப்பட்ட தன்னம்பிக்கை மிக்க பெண் கவிஞர்கள், திரைப் படங்களுக்கும் பாட்டெழுத முன்வரவேண்டும்’’ என்று பாராட்டி னார். ஏற்புரையாற்றிய கவிஞர் மணிமேகலை “கனடாவில் சாப்பிடக் கூட நேரமில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறேன். அதற்கெல்லாம் எனக்கு ஆறுதலாக, களைப்பைப் போக்கும் தென்றலாக எனக்கு இருப்பது இலக்கியம்தான். நான் தொடர்ந்து எழுதுவேன்.’’ என்று உற்சாகமாகக் குறிப்பிட்டார்.
நூல் விற்பனை மூலம் கிடைத்த தொகை, மாற்றுத் திறனாளியான பாலசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. சுவையான விருந்தோடு நூல்வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன. விழாவில் நந்தவனம் பவுண்டேசன் சார்பில் கவிஞர் மணிமேகலை கைலைவாசனுக்கு மாண்புறு தமிழர் விருது வழங்கப்பட்டது.
கோடை வெப்பத்திற்கு இதமாக, இலக்கிய மழையில் நனைத்த நிகழ்ச்சி இது.
-கதிர்