""வெள்ளியின் மேட்டுத்தூரில் வெடித்தோர் ரேகை தோன்றி
துள்ளியபடி நீண்டு துடி குரு மேடுமட்டும்
வள்ளிய குணபால் தோன்றும் வால் வெள்ளிப் போன்றால், அன்னார்
தெள்ளிய மொழியால் பார் ஓங்கும் செல்வாக்கு ரேகை தானே.''
-கமல முனிவர்.
பொருள்: ஒருவருக்கு, சுக்கிர மேட்டின் அடியில், ஆயுள் ரேகை ஓரமாய், அடி பெருத்து, முனை சிறுத்து, கீர்த்தி ரேகை, குரு மேட்டை நோக்கி சென்றால், கீழ் திசையிலெழும், விடிவெள்ளிபோல், செல்வாக்குடன் வாழ்வார்.
கைரேகை சாத்திரம், இந்தியாவிலிருந்து, பிற நாடுகளுக்கு சென்றதாகக் கருதப்படுகிறது. ஆண் கைரேகை சாத்திரத்தைப் பற்றிய, வால்மீகி மகரிஷியின் குறிப்புகளே, அடிப்படை நூலாகஅமைகிறது. பிற்காலத்தில், அகத்தியரின் சீடரான,கமலமுனிவரே, "ஹஸ்த ரேகா சாத்திரம்' என்ற தொகுப்பை உலகிற்கு தந்தார். பிற்காலத்தில், கைரேகை சாத்திரம், நாடோடி சமூகத்தின், கைகளிலிருந்ததால், தகுந்த அங்கீகாரம் பெறவில்லை. நம் வாழ்க்கையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புதையலை அடையும் வழியை அடையாளம் காட்டும் வரை படமே, கைரேகைகள். வெற்றி, நம் கைரேகைகளில் இருக்கும்போது வெற்றியை ஏன் வெளியில் தேடுகிறோம்?
சுக்கிர மேடு
சப்த மண்டலங்கள்: கைகளிலுள்ள ஏழு மேடுகள், ராகு- கேது நீங்கலாக, பிற ஏழு கிரகங் களையும் குறிக்கும்.
1. சுக்கிர மேடு, 2. செவ்வாய் மேடு, 3. குரு மேடு, 4. சனி மேடு, 5. சூரிய மேடு, 6. புதன் மேடு, 7. சந்திர மேடு.
ஜாதகத்தில் உச்சம், ஆட்சிபெற்ற கிரகங்களின் மேடுகள் உயர்ந்தும், நீசம் பெற்ற கிரகங்களின் மேடுகள் தாழ்ந்தும் அமையும்.மேடுகளையும், அதில் ஊடுறுவும் ரேகை களையும், அதில் அமையும் விசேஷ குறியீடு
களையும் இணைத்தே பலன் காணவேண்டும்.
1. சுக்கிர மேடு: பெரு விரலுக்கும், ஆயுள் ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியே, சுக்கிர மேடு. இவ்வுலகில் இனிமையான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவர் சுக்கிரன். ஒருவர் ஜாதகத்தில், சுக்கிரனின் வலிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல், கைரேகை சாத்திரத்தில், சுக்கிர மேடு, சுகமான வாழ்க்கை, காதல், சிற்றின்பம், மனைவி அல்லது கணவனால் கிடைக்கும் மகிழ்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும்.
உள்ளங்கையில் (ஆண்களுக்கு வலது கை, பெண்களுக்கு இடது கை) சுக்கிரமேடு நன்றாக அமைந்து, சுக்கிர மேட்டில் வெட்டுக்குறி அடையாளங்கள் இன்றி சுத்தமாக அமைந்திருப்பது மிக மிகஅவசியம். பெருவிரலுடன் மற்ற விரல் களைச் சேர்த்து வைக்கும்போது, பின்புறம் சற்று வளைந்து அமைந்திருக்கவேண்டும். பொதுவாக, சுக்கிர மேடு நன்றாக அமைந்தால்மட்டுமே, இல்லற வாழ்க்கை, சிறப்பாகஅமையும்.
சுக்கிர மேட்டில் ஆயுள் ரேகையை ஒட்டி, தீவு அல்லது திட்டு போன்ற குறியீடு தோன்றும் காலத்தில், பிறப்புறுப்பில் நோய் உண்டாகும். பெண்களுக்கு கருப்பையில் கோளாறு உருவாகும்.
சுக்கிரன், தனித்து, ஆட்சியோ அல்லது உச்சமோபெற்று,ஜாதகத்தில், ஜாதகரின் ராசிக்கு அல்லது லக்னத்திற்கு 1, 4, 7 அல்லது 11 இடங்களில் அமைந்திருந்தால், "மாளவியா யோகம்'ஏற்படுகிறது. அந்த ஜாதகரின்கைகளில், சுக்கிர மேடு வலுத்திருக்கும். இந்த யோகத்தினால், நல்ல பெயரும்புகழும், செல்வச் செழிப்பும் பெற்றவராக இருப்பார்.
சுக்கிர மேட்டிலிருந்து சனி மேட்டை நோக்கி, கோடுகள் ஓடினால், பாலாரிஷ்ட தோஷத்தால். சிறு வயதில் ஆரோக்கிய பிரச்சினையுண்டாகும்.
சுக்கிர மேட்டில் நட்சத்திர குறியீடு அல்லது பெருக்கல் குறி உருவானால், உறவு களைப் பிரிந்து செல்லும் நிலை வரும்.
சுக்கிர மேட்டில், கரு மச்சம், உருவானால்,
காதலில் தோல்வி உண்டாகும்.
சுக்கிர மேட்டில், கட்டை விரலில் தொடங்கி, ஆயுள் ரேகையை நோக்கி, ஆழமான குறுக்குக்கோடு தென்பட்டால் தீராத மன கஷ்டமும் நிறைவேறாத ஆசையும் தொல்லை தரும்.
சுக்கிர மேட்டில், வலைப்பின்னல் போன்ற அமைப்பிருந்தால், குடும்பத்தில், குழப்பம் நிலவும்.
சுக்கிர மேட்டை மேலிருந்து கீழே மணிக்கட்டுவரை உள்ள பகுதியை மூன்றாக பிரித்து கணக்கிட்டால், வாழ்க்கையின் எந்தபகுதி சுகமான வாழ்க்கையைத் தரும் என்பதை அறியலாம். சராசரியாக, ஒருபகுதியின் கால அளவை, முப்பது ஆண்டுகளாகக் கொள்ளவேண்டும். சிலருக்கு, துவக்கத்திலும், சிலருக்கு, நடு பகுதியிலும் வேறு சிலருக்கு முடிவிலும் பள்ளம் இருப்பதைக் காணலாம். வெகுசிலருக்கு சுக்கிர மேடு, பள்ளம் இல்லாமல் அமையும்.பள்ளம், துன்பத்தையும் மேடு, இன்பத்தையும் சுட்டிக்காட்டும்.