பெண் குழந்தைகளைப் பெற்று, பாதுகாத்து, படிக்கவைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, திருமணம் செய்துவைத்து சுகமாக வாழவைப்பது இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய சவால். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மட்டுமின்றி, அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம், ஆடம்பரத் தேவைகளான வீட்டுபயோகப் பொருட்கள், அநாவசிய- அவசியத்தேவையான அலைபேசிவரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆதலால், இன்றைய பொருளாதாரச்சூழலில் குடும்பத்தில் ஆண் ஒருவர் மட்டுமே சம்பாதித்து வாழ்க்கை நடத்தமுடியாது. கணவன் மட்டுமின்றி மனைவியும் கட்டாயமாக வேலைக்குச் சென்றேயாக வேண்டும்.

yogam

இயற்கையாகவே பெண்கள் கடினமான உழைப்பாளிகள். முற்காலத்தில் குடும்பத்தையும், பிள்ளைகளையும் வளர்த்ததோடு விவசாயப் பணிகளிலும் பெண்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

பெண்கள் வேலைக்குச் செல்வது இன்று புதுமையாகத் தெரிந்தாலும், காலங்காலமாக குடும்பத்திற்காகப் பெண்கள் உழைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

Advertisment

கைம்பெண்கள், கணவரால் கைவிடப் பட்ட பெண்கள், குடும்பத்திற்கு சம்பாதித் துக் கொடுக்காமல் தொல்லைகளை மட்டுமே தரும் கணவரைத் திருமணம் செய்தவர்கள் என கஷ்டங்களை மட்டுமே அனுபவிக்கும் பெண்கள் நம் நாட்டில் ஏராளம். அச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை ஆளாக்கி விடப் பலவித கஷ்டங்களைத் தாங்கி உழைத்து, பிள்ளைகளின் முன்னேற்றத் திற்குப் பாடுபடுகிறார்கள்.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத் தனித்துவமான மரியாதை எப்போதும் உண்டு. இருந்தபோதும் பணிசெய்யும் இடங்களில் ஆணாதிக்கத்தையும், ஆண் தொல்லைகளையும் கடந்துதான் பெண்கள் பலர் சாதிக்கின்றனர். "ஏன்டா வேலைக்கு வந்தோம்" என உடலாலும் மனதாலும் பெண்கள் நொந்துபடும் துயர் அதிகம். பெண்களுக்கு அடக்குமுறை பல இருந்தாலும், ஆண்களுக்குப் பெண்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பலதுறைகளில் பல சாதனைகள்மூலம் பெண்கள் சாதித்துக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

பெண்களில் பெரும்புகழ் பெற்று கோடீஸ்வரியாக வலம் வரும் யோகம் யாருக்கு? தொழில் பொதுவாக, தொழில் ஸ்தானத்தை- அதாவது பத்தாமிடத்தை கர்ம ஸ்தானம் என குறிப்பிடுகிறோம். கர்மம் என்பது தொழில்- அதாவது செய்யும் செயலைக் குறிக்கும். நாம் செய்யும் யாகம், வேள்வி, தெய்வ வழிபாடு, ஆடை, மானம் போன்றவற்றைப் பற்றியும் பத்தாம் இடத்தைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம். தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தால், மேற்கண்ட அனைத்தும் சிறப் பாக இருக்கும்.

Advertisment

லக்னத்திற்கு பத்தாமிடம் தொழிலைக் குறிக்குமிடம். பத்தாமதிபதி ஆட்சி, உச்சம், கேந்திர- திரிகோணம் பெற்று, சுபகிரகப் பார்வை, இணைவு பெற்றால் தொழில் சிறப்பாக அமையும். பத்தில் இருக்கும் கிரகநிலை, பத்தாமிடத்தைப் பார்க்கும் கிரக வலிமையைப் பொருத்து எவ்விதத் தொழில் அமையும் என்பதை அறியலாம்.

பத்தாம் அதிபதி தசை, பத்தில் இருக்கும் கிரகத்தின் தசாபுக்திக் காலங்களில் நிரந்தர வேலை அமையும். கோட்சாரத்தில் சுபகிரகங்கள் நல்ல இடத்திற்கு வரும்போது தொழிலில் மேன்மை ஏற்படும்.

திருமணத்திற்கு முன்பு பணிக்குச் செல்லும் பெண்கள் 2, 4-ஆம் அதிபதிகள் சிறப்பாக அமைந்தால் தடையின்றி நல்ல கல்வி கிடைக்கும். கல்வி முடிக்கும் தறுவாயில் 2, 4-ஆம் அதிபதி சம்பந்தப்பட்ட பத்தாம் அதிபதி தசாபுக்தி நடந்தால், கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைத்து சொகுசான வீடு, வாகன யோகம் பெறுமளவு வருமானம் கிடைக்கும். 12-ஆம் அதிபதி சம்பந்தப்பட்டால் வெளிநாட்டு வேலை கிடைத்து ஏழரைச்சனியால் குடும் பத்தைப் பிரிந்தாலும், வருமானம் குறையாமல் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவுவர்.

4-ஆம் அதிபதி 9-ஆம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்கு வீடுகட்டிக் கொடுப்பார். 2, 4, 9, 10-ஆமிடங்கள் கெடாமல் சுபகிரகப் பார்வை, இணைவு பெற்றால், நன்கு படித்து, வேலை வாங்கி, நற்பெயர் எடுத்து, சம்பாதித்து கோடீஸ்வரியாக வலம்வருகிறார்கள்.

4, 9-ஆம் அதிபதிகள் கெட்டவர்களுக்கு தாய்- தந்தையால் யோகமின்றி, பெற்றோர் இழப்பாலோ, பெற்றோர் பிரிவாலோ உயர்கல்வி யோகம் தடைப்படும். 4, 9-ஆம் அதிபதிகள் கெட்டாலும் பத்தாமிடம் வலுத்தால், சிறுவயதிலேயே வேலைக்குச் சென்று வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். சிலருக்கு சிறு வயதில் சுக்கிர தசை வருவது, 2-ஆமிடம் கெட்டு பத்தாம் அதிபதி தசை வருவது போன்ற அமைப்புகள், குடும்ப வறுமை காரணமாக ஆரம்பக்கல்வி தடைப்பட்டு வேலைக்குச் செல்லும் நிலையைத் தரும். 2-ஆமிடம் பாதித்து குழந்தைத் தொழிலாளர்களாகப் பணிசெய்தாலும், உயர்கல்விக்கான நான்காமிடம் பலம்பெற்றால், பகுதிநேர வேலை செய்துகொண்டு கல்வியைத் தொடர்ந்து படித்து முன்னேறுவர்.

2, 4, 9-ஆம் அதிபதிகள் யாராவது கெட்டால் கல்வித் தடை, பெற்றோர் பிரிவு ஏற்படும். சுகங்கள் கிடைக்காமல் பத்தாம் அதிபதி பலத்தால் பிறந்த வீட்டிற்கு உழைத்து வருமானம் தருவர்.

திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லும் பெண்கள் கூடுதல் வரதட் சணை கொடுத்தாவது வேலைபார்க்கும் வரனைப் பார்த்துத் திருமணத்தை முடித்து வைத்தால், தன் மகள் வேலைக்குச் செல்லாமல் அதிக கஷ்டமின்றி வாழ்வாள் என பெற்றோர் பலர் முன்வருகின்றனர்.

அதற்குக் காரணம், பெண்கள் வேலைக்குச் சென்றால் வேலைப்பளு மட்டுமல்லாமல், கெட்ட பெயர் வந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என்கிற பயமே.

2-ஆம் அதிபதி, 4-ஆம் அதிபதி, 7-ஆம் அதிபதி தொடர்பேற்பட்டு 10-ஆம் வீட்டிலிருந்தால், கற்ற கல்வியால் திருமணத்திற்குப்பிறகு வேலை அமையும்.

2-ஆம் அதிபதி வலுத்து தசை நடத்தால், ஆரம்பக் கல்வியாலும், 4-ஆம் அதிபதி பத்தில் இருந்து அதன் தசை நடந்தால் உயர்கல்வியாலும் வருமானம் கிடைக்கும். 10-ஆம் அதிபதி 2, 4-ஆம் வீடுகளில் அமைவது நல்ல வருமானத்தை குடும்பத்திற்குத் தரும். படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்னும் பேதமின்றி, ஏழாம் அதிபதி 10, 11-ஆமிடங்களில் இருந்தாலும், பத்தாம் அதிபதி ஏழில் இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பு வேலைக்குச் சென்று வருமானம் பெறுவர். 4-ஆம் அதிபதி 7-ல் இருந்தால் தன் வருமானத்தில் கணவருக்கு வீடுகட்டிக் கொடுப்பார்.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதுபோல், தான் கஷ்டப்பட்டாலும் குடும்பத்தைத் தாங்கிப்பிடிப்பது பெண்களே.

2, 4-ஆம் அதிபதிகள், 7-ஆம் அதிபதி யுடன் சம்பந்தப்பட்டு, கிரக வலிமையின்றி, பாவகிரகப் பார்வை பெற்றால், புகுந்தவீட்டில் பிரச்சினை மற்றும் வருமானத் தேவைக்காக வேலைக்குச் செல்ல நேரிடும். 10-ஆம் அதிபதி பலத்தைப் பொருத்து அரசு வேலை, தனியார் வேலை அமையும். 2, 4-ஆம் அதிபதிகளின் இணைவைப் பொருத்து பதவி, சம்பளத்தில் வித்தியாசம் இருக்கும். சுபகிரக வலிமை அதிக வருமானம், அதிகாரப் பணியையும், பாவகிரக வலிமை குறைந்த வருமானம், கடின உழைப்பு, அடிமைப் பணியையும் தரும். 7-ஆம் பாவகம் கெட்டு, 10-ஆமிடம் பலம்பெற்றால் கணவரால் பாதிப்பு, பிரிவு, இழப்பு காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை வரும்.

11-ஆமிடம் வலுப்பெற்றால் தொழில் லாபமும், இளைய தாரத்தால் யோகமும் சில பெண்களுக்கு அமைந்துவிடும்.

இல்லத்தரசி

நேற்றுவரை தனிக்குடும்பத்தில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு, திருமண நாள்முதல் இன்னொருவர் வீட்டு நபர்களுக்கு வேலைசெய்யத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் எந்த எதிர்பார்ப்புமின்றி வாழும் இல்லத்தரசி வாழ்க்கை என்பது மிகப்பெரும் சவாலான பணி. விட்டுக்கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இருப்பவர்களால் மட்டுமே அதைத் திறம்பட செயல்படுத்த முடியும். வாக்கு ஸ்தானம் பலம்பெற்று சுபகிரகப் பார்வை பெற்றவர்களால்தான் எல்லாரிடமும் பேசிப் பழகி நல்ல பெயர் எடுக்கமுடியும். 4-ஆமிடம் ஆட்சி, உச்சம், சுபப் பலம் பெற்றால்தான் உறவினர்களுடன் சுமுக உறவுண்டாக்கி அனைத்து சுகங்களையும் பெறமுடியும்.

7-ஆம் அதிபதி வலுப்பெற்றால்தான் கணவரின் அன்பு, ஆதரவு கிடைக்கும். 8-ஆமிடம் மாங்கல்ய ஸ்தானம் பாதிக்காமல் இருந்தால்தான் கணவருக்கு எந்த பாதிப்பு மின்றி சுகவாழ்வு கிடைக்கும். கணவருக்கு நல்ல தொழில், சரியான வருமானம் அமைந்தால்தான் எந்தப் பெண்ணாலும் நிம்மதியாக வாழமுடியும். ஐந்தாமிடம் பலம்பெற்றால்தான் புத்திரபாக்கியம், புத்திரர்களால் லாபம் ஏற்படும்.

2, 4, 7-ஆமிடம் கெட்டவர்கள், தன் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்னும் பொறாமையில், கண்ணில் படுபவர்களின் வாழ்க்கையைக் கெடுக்க எண்ணி கண்டபடி புரளி கிளப்புவார்கள். அத்துடன் பத்தாமிடம் கெட்டிருந்தால் மாட்டிக் கொண்டு கெட்ட பெயர் எடுப்பர்.

மாமியார்

நல்ல கணவர், நல்ல குடும்பம், வருமானம் இருந்தாலும் பெண்களுக்கு நிம்மதியாக வாழ மாமியார் என்கிற உறவு முக்கியமானது.

பெண்களுக்கு பெண்களேதான் முதல் எதிரி.

நேற்றைய மருமகள் இன்றைய மாமியார். இன்றைய மருமகள் நாளைய மாமியார் என்பதை உணர்ந்தால்தான் ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தை திறம்பட நடத்தமுடியும். பத்தாமிடம் மாமியார் ஸ்தானத்தைத் குறிக்கும் என்பதால், பத்தாமிடம் பலம்பெற்றவர்களுக்கு நல்ல தொழில், புகழ் கிடைப்பதுபோல் தொந்தரவு தராத மாமியார் அமைவார்.

திருமணத்திற்குமுன் பிறந்தவீட்டுக்கு சம்பாதித்துக்கொடுத்தும், திருமணத்திற்குப் பின்பு புகுந்தவீட்டுக்கு சம்பாதித்துக் கொடுத்தும் நற்பெயர் எடுத்து வாழும் யோகம் பத்தாமிடத்தின் நல்ல நிலையைப் பொருத்தே அமைகிறது. ஆதலால், பெண்களுக்கு பத்தாமிடத்தின் வலுத்தன்மை அவசியம்.

பரிகாரம்

ஆணுக்கு சரிநிகர் பெண்கள் என, பெண் சுதந்திரம் பேசி, ஆண்களின் வேலைவாய்ப்புகளைத் தட்டிப்பறித்து, கணவர்களை சோம்பேறிகளாக்கி, வேலைக்கும் சென்று, வீட்டுக்கு வந்து வேலையும் செய்து, பிள்ளைகளையும் சரிவர கவனிக்கமுடியாமல், மன உளைச்சலையும் பெற்று, உடலும் பலவீனமாகி, சந்தோஷத்தைத் தொலைத்து விட்டோமோ என்கிற ஆதங்கம் இன்று பெண்களில் பலருக்கும் ஏற்பட்டு விட்டது.

பெண்களுக்குக் கல்வி கொடுக்கப்பட் டால்தான் குழந்தைகளை அறிவாளியாக மாற்றமுடியுமென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தாய் உடனிருந்து கவனிப் பது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் அவசியம். உற்றார்- உறவினர்களிடம் நல்ல உறவு முறைகளை வளர்த்துக்கொண்டால் வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் பிறரிடம் பழகும் திறனை வளர்த்துக்கொள்வதே மிகச்சிறந்த பரிகாரம்.

செல்: 96003 53748