எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்வினி- 3.
செவ்வாய்: சதயம்- 2.
புதன் : கிருத்திகை- 1.
குரு: பூரட்டாதி- 4.
சுக்கிரன் : பூரட்டாதி- 2.
சனி: அவிட்டம்- 2.
ராகு: கிருத்திகை- 1.
கேது: விசாகம்- 3.
கிரக மாற்றம்:
சித்திரை 11 (24-4-2022)
ரிஷப புதன் (இரவு 12.14).
சித்திரை 14 (27-4-2022) மீன சுக்கிரன் (மாலை 6.17).
சித்திரை 16 (29-4-2022) கும்ப சனி (காலை 7.54).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
25-4-2022 அதிகாலை 5.30 மணிக்கு கும்பம்.
27-4-2022 பகல் 11.00 மணிக்கு மீனம்.
29-4-2022 மாலை 6.42 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய் 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்பட்டு வளமான பலன் களைப் பெறுவீர்கள். ராசிக்கு 12-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் தான் எதையும் எதிர்கொள்ளமுடியும். ஜென்ம ராசியில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல் படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால், விட்டுக்கொடுத்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவும். இருக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள்- குறிப்பாக கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத் துச் செல்வதன்மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எந்தப் பணியிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் வாக்கு வாதங்கள் செய்யாமல் அவர்கள் சொற்படி நடந்துகொண்டால் இருப்பதைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் இருக்காது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். சிவ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் 10-ல் இருப்பதால் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடிவரும். கடந்தகால பொருளாதாரத் தடைகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். சூரியன், ராகு 12-ல் இருப்பதால் தூரப் பயணங்கள் மேற்கொள்ளும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ராசியாதிபதி சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் பார்த்து வியக்கு மளவுக்கு உயர்வான நிலையை அடைவீர்கள். வேலையாட் கள் ஒத்துழைப்பு திருப்தி கரமாக இருக்கும். நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவி கள் கிடைத்து மனநிறைவு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக் குச் செல்பவர்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி நல்ல வாய்ப்பை அடைவீர்கள். நீண்டநாட்களாக வெளியூர் செல்லவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வருகின்ற நாட்களில் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மேலும் வளமான பலன்களைப் பெறுவீர்கள். துர்க்கை வழிபாடு, சூரிய நமஸ்காரம் நற்பலன்களைத் தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு அனைத்துவித மான குடும்பத் தேவைகளும் எளிதில் பூர்த்தி யாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப் பாக இருப்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் இவ்வாரம் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குரு 10-ல் இருப்ப தால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி 29-ஆம் தேதிமுதல் 9-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் தற் போதுள்ள நெருக்கடி கள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிதானத் தோடு செயல்பட்டால் வளர்ச்சியை அடைய முடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி களைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். வேலைப்பளுவைப் பற்றிக் கவலைப்படா மல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத் தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். மற்றவர் களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமின் அளிப்பது போன்றவற்றைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது நல்லது. புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர் பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப் புண்டு. வேங்கடாசலபதி தரிசனம், விநாயகர் வழிபாடு நன்று.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். சூரியன் 10-ல் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். புதன் இவ்வாரத்தில் 10, 11 ஆகிய ஸ்தானங் களில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும்பொழுது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறப்பான நாட்களாக வரும் வாரம் இருக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கு நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழிலில் நிம்மதியுடன் செயல்பட முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளி களை கலந்தாலோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை அடைய முடியும். ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுமென்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு, அஷ்டலட்சுமி தரிசனத்தால் உங்கள் கஷ்டங்கள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்ப தும் 9, 10-ல் புதன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். செவ்வாய் 7-லும், குரு 8-லும் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச்செல்வதும், சில நேரங்களில் உங்களுடைய முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்படுவதும் நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரத்தில் எது செய்தாலும் ஒருமுறைக் குப் பலமுறை யோசித்து செய்தால் ஆதாயத்தை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். போட்டிகளை எளிதாக எதிர் கொள்வீர்கள். வெளியூர்த் தொடர்புகள்மூலம் ஒருசில அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களின் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். முருக வழிபாடு, வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு மஞ்சள்நிற ஆடை சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும் வாயப்பு, சிறப்பான பணவரவுகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரும் இனிய நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சனி 29-ஆம் தேதிமுதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற் றத்தைத் தரும் அமைப்பாகும். சூரியன், ராகு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீண்டநாள் பிரச்சினைகள் தீர்ந்து வளமான பலன்களை வரும் நாட்களில் எட்டமுடியும். கடன் தொல்லைகள் விலகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர்வான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். சிலருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதால் உங்களின் கனவுகள் நிறைவேறும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சனிக்கிழமை மட்டும் தேவையற்ற மனக் கவலைகள் ஏற்படலாம். துர்க்கையம்மன் தரிசனம், மகாவிஷ்ணு வழிபாடு நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் கேது, 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் நிகழ்வுகள் நடக்கும். குரு 6-ல் இருப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்கள் அமைதியைக் குறைப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். சிறு பாதிப்பென்றாலும் உடனே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது சிறப்பு. தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சனி 29-ஆம் தேதிமுதல் 5-ல் சஞ்சரிப்பதால் தற்போதைய பிரச்சினைகள் எல்லாம் இவ்வார இறுதியில் குறைந்து நிம்மதி ஏற்படும். அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நெருக்கடியால் நீண்டநாளைய கையிருப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மிக நிதானமாக செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயங்களைப் பெறமுடியும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போதைக்கு பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும். அதன்காரணமாக ஓய்வுநேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொற்படி நடந்துகொண்டால் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் சில அனுகூலமான பலன்களை அடையலாம். விநாயகர், அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசிக்கு 5-ல் குரு அமைந்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். சூரியன், ராகு சேர்க்கைபெற்று 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பதால் நிம்மதி நிலவும். செவ்வாய் 4-ல் இருப்பதால் தேவையற்ற பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் நிறைவேற்றி நிம்மதியடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். வம்பு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். வேலைக்குச் செல்பவர்கள் மனநிம்மதியுடன் பணிபுரிவதுடன் எதிர்பாராத பதவி உயர்வினை அடையும் யோகம் வரும் நாட்களில் உண்டு. வெளியிடங்களில் பணிபுரிந்து இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எடுக்கும் முயற்சியில் எளிதில் வெற்றிகிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, ஏழை மாணவர்களின் படிப்புக்கு முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். கேது 11-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். ராசிக்கு 5-ல் ராகு, சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப உறுப்பி னர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பங்காளிவகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி 29-ஆம் தேதிமுதல் 3-ல் அதிசாரமாக சஞ்சரிக்கவிருப்பதால் நெருக்கடிகள் படிப்படியாகக் குறைந்து நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். பணப்புழக்கம் சற்று சாதகமாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு பெரிய மனிதரின் தொடர்பால் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். உங்களின் தனித் திறமையால் மற்றவர்கள் தரும் இடையூறுகளை எளிதில் எதிர்கொண்டு லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் உங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் தற்போது படிப்படியாகக் கிடைப்பதால் உங்களின் கஷ்டங்கள் குறையும். பயணங்கள்மூலமாக ஒருசில அனுகூலப் பலன்களை அடைவீர்கள். திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, பிரத்தியங்கரா தேவி தரிசனம்மூலம் கெடுதிகள் குறையும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உறவினர் களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலமென்பதால் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குரு ராசிக்கு 3-ல் சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படக்கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச்செல்வது சிறப்பு. அதிக முதலீடுகள்கொண்ட செயல் களைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களை மற்றவரிடம் பேசாமலிருப்பது நல்லது. ஒருசிலருக்கு அரசு அதிகாரிகள் மூலமாக தொழிலுக்கு நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். ஆஞ்சனேயர், மகாலட்சுமி வழிபாடு கெடுதியைக் குறைக்கும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றா லும், 2-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன் களை அடைவீர்கள். முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் விரைவில் நிறைவேறும் யோகமுண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாளைய கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து சமுதாயத்தில் கௌரவமான நிலையை அடைவீர்கள். சுக்கிரன் இவ்வாரத்தில் ஜென்ம ராசி, 2-ஆமிடங்களில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் மிகச் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கூட்டாளிகள்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும். உங்கள் திறமைகளை அதிகாரிகள் புரிந்துகொள்வதால் வரும் நாட்களில் ஒரு கௌரவமான நிலையை அடையமுடியும். திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையமுடியும். மேலும் நற்பலன்களைப் பெற முருகரையும், பெருமாளையும் வழிபடுதல் நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறா கப் புரிந்துகொள்ளும் நேரமென்பதால் எதிலும் சிந்தித்துப் பேசவும். மற்றவர் கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் குரு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு பொருளாதாரரீதியாக சற்று தேக்கநிலை காணப்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். குரு பார்வை 5, 7 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் சில அனுகூலங்கள் ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு நல்ல நிலையை அடைவீர்கள். வாகனங்களில் பொறுமையாகச் செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் வேலைப்பளு குறைவாக இருக்கும். உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். துர்க்கையம்மன் தரிசனம், முருக வழிபாடு சிறப்பு.