மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளைப் பெறமுடியும். வேலையாட் கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லா மல் விரும்பிய இடம் மாற்றங்கள் பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய அமைப்பு ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர் கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராதவகையில் அனுகூலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் உங்களுக்கு 8-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற குழப்பங்கள், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், நெருங்கியவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் அரங்கேறகூடிய யோகம் உண்டாகும். உங்களது பேச்சுத் திறமையால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன் களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர் களுக்கு நண்பர்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உடனிருப்பவர்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சனிக்கிழமையன்று தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நன்மை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்படும் நெருக்கடி களை எளிதில் சமாளிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சனி, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் இருந் தாலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைப்பதில் ஒருசில இடையூறுகள் ஏற்படும். தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்பு களைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டு. வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடைவீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் உங்கள் பணியில்மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துவது, பயனுள்ள காரியங்களில் நேரத்தை செலவிடுவது மிகமிக நல்லது. வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் சூழலுக்கு ஏற்றவாறு பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு முக்கிய செயல்களை மேற்கொண்டால் அதில் முழுமையான அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, ராகுகால நேரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும், லாப ஸ்தானமான 11-ல் குருவும் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய பலமும், உங்களுக்கு உள்ள கடன்களை குறைத்துக்கொள்ளக்கூடிய அமைப்பும் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் ஒரு கௌரவமானநிலை ஏற்படும். ஒரு சிலருக்கு அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன், சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற வகையில் வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உறவினர்கள்மூலமாக தேவையில்லாத நிம்மதிக்குறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஏற்ற மிகுந்த பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் சந்திரன் நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- புதன், சுக்கிரன் சேர்க்கைபெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் குறைவது மட்டுமில்லாமல் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 9-ல் செவ்வாய், 10-ல் குரு சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குறிப்பாக உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல ஒரு வளர்ச்சியினை அடைவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்களால் ஒரு சில இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட சாதகமான சூழ்நிலை ஏற்படும். அதிகாரியினுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம்
செலுத்துவதால் உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் எல்லாம் தற்போது குறையும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். துர்க்கையம்மனுக்கு ராகுகாலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன்- சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்று தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு. நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்லவாய்ப்புகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவ செலவுகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக குழந்தை இல்லையென்று ஏங்கியவர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். பங்காளிவகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகநிலை உண்டாகும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்களுடைய ஒத்துழைப்பானது சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவைகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் பெற்றோர், பெரியோர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன், சூரியன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நிலை உண்டாகும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக்
குறைத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடி களைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சின்னவாய்ப்பையும் தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லமாற்றங் கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கூட்டாளியிடம் பேசுகின்றபோது சற்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உங்களது ஓய்வுநேரம் குறைந்தாலும் உங்கள் உழைப்புக் கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிகாரியின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் மற்றவர்கள் தரக்கூடிய இடைஞ்சல்களை எளிதில் சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு உள்ள நீண்ட நாளைய பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு தீர்வு கிடைத்து மனநிம்மதி உண்டாகும். முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனைத் தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம்,
அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதாலும், சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய அமைப்பும், கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களைக் குறைத் துக்கொள்ளக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் அதிகப்படியான அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் வீண் பேச்சை குறைத்துக்கொண்டு உங்களுடைய செயல்களில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். சட்டரீதியாக சிறு சிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியானமுறையில் பராமரித்து வைத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் ஒருசில விஷயங்களை வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் பெரியோர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதாலும், சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள் மூலமாக அனு கூலமான பலன்களை பெரும்யோகம் வரும் நாட்களில் இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தொழில், வியாபாரத் தில் உங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் உங்களுக்கு உள்ள பனிச் சுமை சற்றுக் குறையும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். நீண்டநாட்களாக புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய யோகம் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் உயர் கல்விக்காக மேற்கொள்ளக் கூடிய முயற்சிகள் வெற்றிபெற்று விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். பாதியில் தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் சற்றுக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ராகு 3-ல் இருப்பதால் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் சில ஏற்பட்டு அதன்மூலம் உங்களது ஓய்வுநேரம் குறையும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அரசு உதவிகள் கிடைக்கும். வேலையாட்களால் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமானநிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான நிலை நிலவும். மாணவ- மாணவியர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது சற்று பொறுமையைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத பண வரவுகள் கிடைத்து உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து உங்களுடைய அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களுடைய ஆதரவானது உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய அளவிற்கு இருக்கும். உங்கள் ராசியில் சனியும், 2-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. எதிர்பாராதவகையில் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அனைத்தையும் எளிதில் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். தொழில்ரீதியாக சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான ஊதியத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. ஒருசிலருக்கு சக ஊழியர்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தி நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையில்லாத அலைச்சல்கள், மன அமைதிக்குறைவு உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உங்களுக்கு நல்ல ஆதரவும், எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள்மூலமாக தேவையில்லாத வகையில் வீண்செலவுகள் ஏற்பட்டு மனநிம்மதிக்குறைவு ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற இறக்க மான நிலை இருக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு செயலிலும் சற்று யோசித்து செயல்பட்டால்தான் நீங்கள் எதிர்பார்த்த பலனை அடைவதுடன் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களையும், தேவையற்ற நட்புகளையும் சற்று குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் ஆதாயம் கிடைக்கும். திங்கள், செவ்வாய், புதன் முற்பகல் காலங்களில் வீண் குழப்பம், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையைக் கடைபிடிப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் சிவ வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.