ப் ஜோதி ரங்கநாதன், உளுந்தூர்பேட்டை.
என் மகன் வாடகை டாக்சி ஓட்டுகி றார். எப்போது திருமணமாகும்?
உங்கள் மகன் வாசு 30-9-1996-ல் புதுடெல்லியில் பிறந்தவர். கடக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்தில் அமர்ந்த செவ்வாய், சந்திரனின் பரிவர்த்தனையால் நீசபங்கம் அடைகிறார். சூரியன், புதன் பரிவர்த்தனை. இவரின் 7-ஆமதிபதி சனி, கேதுவுடன் உள்ளார். மேலும் சூரியன், ராகு பார்வையில் உள்ளார். இவருக்கு எப்போது திருமணம் நடந்தாலும், ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் திருமணம் நடக்கும். நடப்பு சந்திர தசையில் புதன் புக்தி 2022, ஜூன் 15 வரை. இதில், ஒரு கலாட்டா நடந்து, வேறு மதப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் கல்யாணம் முடித்துக்கொள்வார். பெண் நல்ல பெண்ணாக அமைவாள்; கவலை வேண்டாம். இவர் எதிர்காலத்தில் வாகனம் வாங்கி விற்கும் தொழிலையும், பயணம் சார்ந்த தொழிலையும் செய்வார். ஆஞ்சனேயரை வழிபடவும். விநாயகருக்குப் பூபோட்டு வணங்கவும்.
ப் ஆர். ரம்யா, திருச்சி.
என் இரு மகள்களின் கல்வி, எதிர்காலம் பற்றிக் கூறவும். காதல் திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளதா என்பதையும் குறிப்பிடவும்.
இளைய மகள் ஜானகி, 24-11-2015-ல் பிறந்தவர் இந்தக் குழந்தைக்கு தற்போது ஏழு வயதுதான் நடக்கிறது. தாயார், பெண்ணுக்கு காதல் திருமணமா, வேலை, எதிர்காலம் என நிறைய கேட்டிருக்கிறீர்கள். வயதுக்கேற்ற கேள்விகளைக் கேளுங்கள். மகளுக்கு 20 வயதுவரை சுக்கிர தசை. "குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்' என்பர். இந்தப் பெண்ணை ஏதாவது உறவுக்காரர்களிடம் கொடுத்து, பின்பு தட்சிணை கொடுத்து வாங்கிக்கொள்ளவும். நீச சுக்கிர தசை நடப்பதால், இவ்வாறு குழந்தையை தானம் கொடுத்து வாங்கினால், நோய் நொடி இல்லாமல் இருப்பாள். அடுத்து 21 வயதில் வரும் சூரிய தசை நன்மைகளைத் தரும். மூத்த மகள் மேனகா 30-6-2010-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். 21 வயதுவரை ராகு தசை நடக்கிறது. மேலும் ஏழரைச் சனியும் உள்ளது. குழந்தையின் லக்னத்தை குரு, சனி, செவ்வாய் என மூவரும் பார்க்கிறார்கள். 8-ஆமதிபதி புதன் ஆட்சி. தீர்க்காயுள். நடப்பு ராகு தசை புதன்புக்தி 2024, ஜூலை வரை. சற்று உடல்நலத்தில் கவனம் தேவை. படிப்பில் கவனம் சிதறும். திருவனந்த புரம் பத்மநாப சுவாமி படம் அல்லது ஸ்ரீரங்கநாதர் படம் வாங்கிவைத்து, தினமும் வணங்கவும். முடிந்தால் ஒருமுறை இந்தக் கோவில்களுக்குப் போய்விட்டு வரவும்.
ப் அலமேலு, கடலூர்.
நாங்கள் மிகவும் ஏழை. என் சகோதரனுக்கு 40 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. எப்போது நடக்கும்?
பிரபு 14-5-1982-ல் பிறந்தவர். துலா லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். லக்னாதிபதி சுக்கிரன் 6-ல் உச்சம். சூரியன் 7-ல் உச்சம். லக்னத்தில் குரு. இவரின் 5-ஆமதிபதி சனியும், 7-ஆமதிபதி செவ்வாயும் சேர்ந்து 12-ல் அமர்ந்துள்ளனர். ஒரு விருப்பத் திருமணம் நடக்கவிருந்து தடைப்பட்டிருக்கும். இவரது ஜாதகத் தில் சனி 2-ஆம் வீடு, சுக்கிரனைப் பார்வையிடுவதால், திருமணம் தள்ளிப்போயிருக்கிறது. நடப்பு குரு தசை- அதில் புதன் புக்தி 2024 மே வரை. அதற்குள் பெண் அமைந்துவிடுவார். சனியும், செவ்வாயும் சேர்க்கை- ஊழ்வினை தோஷமாகும். இதற்கு ஆஞ்சனேயருக்கு நெய்விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு நீண்டநாள் திருமண மாகாமல் இருப்பவர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி என்னும் ஊரிலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வழிபடுவது, சீக்கிரமாக திருமணம் நடக்கச் செய்யும்.
ப் டி. கணேஷ், ஆலங்குடி.
திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிட்டுமா? சொந்த வீடு அமையுமா? கோடீஸ்வர யோகம் உண்டா? பணக்கார- படித்த பெண் அமைவாளா? உண்மையை உடைத்துக் கூறவும்.
நீங்கள் 18-6-1985-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். இப்போது வரும் கேள்விகளில் பலர் "உண்மையை உடைத்துக் கூறவும்' என கேட்கிறார்கள். உங்கள் ஜாதகப்படி அவ்வாறு கூறினால் உங்களால் தாங்க முடியுமா? 2-ஆம் வீட்டில் சனி உச்சம்; வக்ரம். அதனால் நீசம். 2-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ல் ராகுவுடன். சுக்கிரன் அம்சத்தில் நீசம். ஆக, பணம் வரும் வழிகள் பெயில் மார்க் வாங்குகின்றன. ஆயினும் குரு லக்னத்தைப் பார்ப்பதால் ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம். குரு, புதன், செவ்வாய் சேர்க்கை 10-ல் உள்ளது. அரசிய-ல் அகடவிகடம் செய்து ஒருவழியாக வந்துவிடுவீர்கள். நடப்பு சனி தசையில் சந்திரபுக்தி 2023, ஜூலைவரை. அதில் அரசிய-ல் பங்கேற்கலாம். அடுத்துவரும் செவ்வாய் புக்தி திருமணத்தை அழைத்துவரும். உங்களுக்கு முன்பே திருமணமாகியிருந்தால், அந்தப் பெண் இழப்பை சந்தித்திருப்பாள். 5-ஆமிட சனி தசை நடப்பதால், குலதெய்வத்தை வணங்கு வது சிறப்பு. இவ்விதம் சனி கெட்டுப்போய் தசை நடப்பவர்கள், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு சுவாமியை சேவிக்கவும்.
செல்: 94449 61845